search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "எழுத்தாளர் பிரபஞ்சன்"

    எழுத்தாளர் பிரபஞ்சனின் உடல் முழு அரசு மரியாதையுடன் புதுவையில் இன்று அடக்கம் செய்யப்பட்டது. #Prabhanjan
    புதுச்சேரி:

    சாகித்ய அகடாமி விருது பெற்ற எழுத்தாளர் பிரபஞ்சன் புதுவை லாஸ் பேட்டையில் உள்ள அரசு குடியிருப்பில் வசித்து வந்தார். 73 வயதான அவர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
     
    கடந்த மாதம் அவரது உடல்நிலை கடுமையாக பாதிக்கப்பட்டது. இதையடுத்து அவர் புதுவை மதகடிப்பட்டில் உள்ள மணக்குள விநாயகர் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை பெற்று வந்த அவருக்கு நேற்று முன்தினம் திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி பிரபஞ்சன் மரணமடைந்தார்.

    மறைந்த எழுத்தாளர் பிரபஞ்சனுக்கு தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின், புதுவை முதல்-அமைச்சர் நாராயணசாமி மற்றும் புதுவையில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகள், சமூக அமைப்புகள் இரங்கல் தெரிவித்தனர்.



    புதுவை மண்ணின் மைந்தரான எழுத்தாளர் பிரபஞ்சன் உடலை அரசு மரியாதையுடன் அடக்கம் செய்ய வேண்டும் என இந்திய கம்யூனிஸ்டு கட்சி, கலை இலக்கிய பெருமன்றம், முற்போக்கு எழுத்தாளர்கள் சங்கம், மக்கள் உரிமை கூட்டமைப்பு, புதுவை பூர்வீக மக்கள் உரிமை சங்கம் உள்ளிட்ட அமைப்பினர் கோரிக்கை விடுத்தனர்.

    இதையேற்று முதல்- அமைச்சர் நாராயணசாமி எழுத்தாளர் பிரபஞ்சனின் உடல் அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்படும் என நேற்று அறிவித்தார்.

    இதையடுத்து, தேசியக் கொடியால் போர்த்தப்பட்டிருந்த பிரபஞ்சனின் உடல் இன்று காலை 8 மணிக்கு புதுவை ரெயில்வே நிலையம் அருகே பாரதி வீதி வ.உ.சி. வீதி சந்திப்பில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. அங்கு நடைபெற்ற அஞ்சலி கூட்டத்தில் அரசியல் கட்சி தலைவர்கள் படைப்பாளர்கள், எழுத்தாளர்கள் சங்கத்தினர் மற்றும் சமூக ஆர்வலர்கள் பங்கேற்றனர்.

    பொதுமக்கள் அஞ்சலி செலுத்திய பின், மாலை 4 மணியளவில் அவரது உடல் அங்கிருந்து ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது. வம்பாகீரப்பாளையம் சன்னியாசிதோப்பில் உள்ள இடுகாட்டில் 21 குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதையுடன் பிரபஞ்சனின் உடல் தகனம் செய்யப்பட்டது. #Prabhanjan
    டாக்டர் ஜெயச்சந்திரன், எழுத்தாளர் பிரபஞ்சன் மறைவுக்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தனது இரங்கல் செய்தியை தெரிவித்துள்ளார். #Prapanchan #DrJayachandran
    சென்னை:

    முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறி இருப்பதாவது:-



    5 ரூபாய் டாக்டர் என்று அன்புடன் அழைக்கப்பட்ட டாக்டர் ஜெயச்சந்திரன் உடல்நல குறைவால் காலமானார் என்ற செய்தி அறிந்து மிகுந்த வேதனை அடைந்தேன். கடந்த 40 ஆண்டுகளுக்கு மேலாக ஏழை-எளிய மக்களுக்கு குறைந்த விலையில் சிறந்த மருத்துவ சேவையை வழங்கியுள்ளார். டாக்டர் ஜெயச்சந்திரனை இழந்துவாடும் அவருடைய குடும்பத்தினருக்கும், அவருடைய தன்னலமற்ற சேவையை பல ஆண்டுகளாக பெற்று வந்த ராயபுரம் பகுதி மக்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

    இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

    அதேபோல், அவர் வெளியிட்டுள்ள மற்றொரு இரங்கல் செய்தியில், ‘பிரபல எழுத்தாளர் பிரபஞ்சன் உடல்நல குறைவால் காலமானார் என்ற செய்தி அறிந்து மிகுந்த வேதனை அடைந்தேன். அவருடைய மறைவு தமிழ் இலக்கிய உலகிறகு ஈடுசெய்ய முடியாத இழப்பாகும். பிரபஞ்சனை இழந்துவாடும் அவருடைய குடும்பத்தினருக்கும், எழுத்துலக நண்பர்களுக்கும், அவருடைய எண்ணற்ற ரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்’ என்று தெரிவித்துள்ளார்.

    புதுவை முதல்- அமைச்சர் நாராயணசாமி, எழுத்தாளர் பிரபஞ்சனின் உடல் அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்படும் என அறிவித்துள்ளார். #Prabhanjan
    புதுச்சேரி:

    சாகித்ய அகடாமி விருது பெற்ற எழுத்தாளர் பிரபஞ்சன் புதுவை லாஸ் பேட்டையில் உள்ள அரசு குடியிருப்பில் வசித்து வந்தார். 73 வயதான அவர் புற்று நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

    இந்த நிலையில் கடந்த மாதம் அவரது உடல்நிலை கடுமையாக பாதிக்கப்பட்டது. இதையடுத்து அவர் புதுவை மதகடிப்பட்டில் உள்ள மணக்குள விநாயகர் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

    அங்கு தீவிர சிகிச்சை பெற்று வந்த அவருக்கு நேற்று திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி பிரபஞ்சன் மரணமடைந்தார்.

    மறைந்த எழுத்தாளர் பிரபஞ்சனுக்கு தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின், புதுவை முதல்-அமைச்சர் நாராயணசாமி மற்றும் புதுவையில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகள், சமூக அமைப்புகள் இரங்கல் தெரிவித்தனர்.

    புதுவை மண்ணின் மைந்தரான எழுத்தாளர் பிரபஞ்சன் உடலை அரசு மரியாதையுடன் அடக்கம் செய்ய வேண்டும் என இந்திய கம்யூனிஸ்டு கட்சி, கலை இலக்கிய பெருமன்றம், முற்போக்கு எழுத்தாளர்கள் சங்கம், மக்கள் உரிமை கூட்டமைப்பு, புதுவை பூர்வீக மக்கள் உரிமை சங்கம் உள்ளிட்ட அமைப்பினர் கோரிக்கை விடுத்தனர்.


    இதனை ஏற்று முதல்- அமைச்சர் நாராயணசாமி எழுத்தாளர் பிரபஞ்சனின் உடல் அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்படும் என அறிவித்துள்ளார். பிரபஞ்சனின் உடல் தற்போது மணக்குள விநாயகர் மருத்துவ கல்லூரியின் குளிரூட்டப்பட்ட அறையில் வைக்கப்பட்டிருக்கிறது.

    அங்கிருந்து நாளை (ஞாயிற்றுக்கிழமை) காலை 8 மணிக்கு புதுவை ரெயில்வே நிலையம் அருகே பாரதி வீதி வ.உ.சி. வீதி சந்திப்பில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்படுகிறது. அருகிலேயே எழுத்தாளர் பிரபஞ்சன் அறக்கட்டளை சார்பில் அஞ்சலி கூட்டம் நடைபெறுகிறது.

    இந்த கூட்டத்தில் அரசியல் கட்சி தலைவர்கள் படைப்பாளர்கள், எழுத்தாளர்கள் சங்கத்தினர் மற்றும் சமூக ஆர்வலர்கள் பங்கேற்கின்றனர்.

    தொடர்ந்து மாலை 4 மணி வரை பொதுமக்கள் அஞ்சலிக்காக உடல் வைக்கப்பட்டு இருக்கும். பின்னர் அங்கிருந்து ஊர்வலமாக வம்பாகீரப்பாளையம் சன்னியாசி தோப்பில் அரசு மரியாதையுடன் உடல் தகனம் செய்யப்படுகிறது. #Prabhanjan
    சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் பிரபஞ்சன் மறைவுக்கு அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். #Prapanchan
    சென்னை:

    சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் பிரபஞ்சன் மறைவுக்கு அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.  
    இது தொடர்பாக அவர்கள் கூறியுள்ளதாவது:-

    புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடி:-


    எழுத்தாளர் பிரபஞ்சனின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ள கிரண்பேடி, அவரது மறைவு ஈடு செய்ய முடியாத பேரிழப்பு என்று கூறியுள்ளார்.

    தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின்:-

    தனித்துவமான தமிழ் நடையால் பல படைப்புகளை வழங்கி வாசிப்பு நிலையை புதிய உயரத்திற்கு கொண்டு சென்றவர் எழுத்தாளர் பிரபஞ்சன்.

    மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் :-

    தமிழ் இலக்கிய உலகில் கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக கோலோச்சிய எழுத்தாளர் தோழர் பிரபஞ்சன் சிறுகதைகள், நாவல்கள், கட்டுரை அனைத்திலும் தடம் பதித்தவர். வானம் வசப்படும் எனும் நாவலுக்கு சாகித்ய அகாடமி பரிசு பெற்றவர். அவரது மறைவுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறது.

    நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான்:-

    புகழ்பெற்ற தமிழ் எழுத்தாளரும், தமிழ் இலக்கிய ஆளுமையுமான பிரபஞ்சன் அவர்கள் காலமான செய்தி அறிந்து மிகவும் துயருற்றேன். அவரது இழப்பு தமிழ் எழுத்துலகிற்கும், தமிழ் இலக்கிய உலகிற்கும் பேரிழப்பாகும்.

    அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரன்:-

    தமிழ் எழுத்துலகில் தனக்கென ஒரு பாணியை உருவாக்கி தனித்துவமாகத் திகழ்ந்த எழுத்தாளர்-நாடக ஆசிரியர் பிரபஞ்சன்  உடல்நலக்குறைவால் மறைந்தார் என்ற செய்தி கேட்டு வருத்தமுற்றேன்.

    சாகித்ய அகாடமி உட்பட பல்வேறு விருதுகளைப் பெற்று எழுத்துப்பணியை திறம்பட செய்து வந்த பிரபஞ்சனின் மறைவு எழுத்துலகுக்கு பேரிழப்பாகும். அவரது ஆன்மா இறைவன் திருவடியில் இளைப்பாற பிரார்த்திக்கிறேன்!

    இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.  #Prapanchan
    புற்றுநோயால் அவதிப்பட்டு வந்த பிரபல எழுத்தாளர் பிரபஞ்சன் இன்று காலமானார். #Prabhanjan
    கடலூர்:

    புதுவையை சேர்ந்த பிரபல எழுத்தாளர் பிரபஞ்சன். இவர் 100-க்கும் மேற்பட்ட நாவல்கள் எழுதியுள்ளார். சாகித்ய அகாடமி விருது பெற்றுள்ளார்.

    கடந்த 1 ஆண்டுகளுக்கு முன்பு இவர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டார். கடந்த 6 மாதங்களுக்கு முன்பு புதுவை மதகடிப்பட்டில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு 2 மாதகாலம் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இதில் அவரது உடல்நலத்தில் முன்னேற்றம் ஏற்பட்டது. பின்னர் அவர் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார்.

    இந்நிலையில் கடந்த மாதம் 15-ந் தேதி அவருக்கு மீண்டும் உடல்நலம் பாதிக்கப்பட்டது. தொடர்ந்து அவர் மதகடிப்பட்டில் உள்ள அதே தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் தொடர்ந்து தீவிர சிகிச்சை அளித்தனர்.

    இந்நிலையில் சிகிச்சை பலனின்றி பிரபஞ்சன் இன்று காலமானார்.

    எழுத்தாளர் பிரபஞ்சன் புதுவை அரசின் சிறந்த எழுத்தாளருக்கான விருது பெற்றுள்ளார்.  மேலும் தமிழக அரசின் சிறந்த எழுத்தாளர்களுக்கான விருதையும் பெற்றுள்ளார். இவருக்கு வயது 73. அவரது மறைவுக்கு தமிழறிஞர்கள், எழுத்தாளர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.  #Prabhanjan 
    புற்றுநோயால் பாதிக்கப்பட்டு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ள எழுத்தாளர் பிரபஞ்சனுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். #Prabhanjan
    கடலூர்:

    புதுவையை சேர்ந்த பிரபல எழுத்தாளர் பிரபஞ்சன். இவர் 100-க்கும் மேற்பட்ட நாவல்கள் எழுதியுள்ளார். சாகித்ய அகாடமி விருது பெற்றுள்ளார்.

    கடந்த 1 ஆண்டுகளுக்கு முன்பு இவர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டார்.

    கடந்த 6 மாதங்களுக்கு முன்பு புதுவை மதகடிப்பட்டில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு 2 மாதகாலம் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.

    இதில் அவரது உடல்நலத்தில் முன்னேற்றம் ஏற்பட்டது. பின்னர் அவர் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார்.

    இந்நிலையில் கடந்த மாதம் 15-ந் தேதி அவருக்கு மீண்டும் உடல்நலம் பாதிக்கப்பட்டது. தொடர்ந்து அவர் மதகடிப்பட்டில் உள்ள அதே தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் தொடர்ந்து தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

    எழுத்தாளர் பிரபஞ்சன் புதுவை அரசின் சிறந்த எழுத்தாளருக்கான விருது பெற்றுள்ளார்.

    மேலும் தமிழக அரசின் சிறந்த எழுத்தாளர்களுக்கான விருதையும் பெற்றுள்ளார். இவருக்கு வயது 75 ஆகும்.  #Prabhanjan
    ×