search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "எதிர்க்கட்சிகள் கூட்டணி"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • உ.பி.யில் சமாஜ்வாடி கட்சி 65 தொகுதிகளில் போட்டியிடும் என அகிலேஷ் யாதவ் தெரிவித்திருந்தார்
    • இந்தியா கூட்டணியில் உள்ள கட்சிகள் ஏமாற்றம் அடையாத வகையில் செயல்பட்டு வருகிறோம்

    வருகின்ற 2024 மக்களவை தேர்தலில் பா.ஜனதா கூட்டணியை தோற்கடிக்க எதிர்க்கட்சிகள் இந்தியா (I.N.D.I.A.) கூட்டணியை உருவாக்கியுள்ளன. இந்தியா கூட்டணியில் இடம்பிடித்துள்ள கட்சிகளை சேர்ந்த தலைவர்கள் அடுத்தடுத்து மூன்று கூட்டங்களை நடத்தி பா.ஜனதாவிற்கு அச்சத்தை ஏற்படுத்தினர்.

    தற்போது ராஜஸ்தான், மத்திய பிரதேசம் உள்ளிட்ட ஐந்து மாநில சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது. இதில் எதிர்க்கட்சிகள் கூட்டணியின் முக்கிய கட்சியாக பார்க்கப்படும் காங்கிரஸ், முழுக் கவனத்தையும் செலுத்தி வருகிறது. இதை நிதிஷ் குமார் வெளிப்படையாக விமர்சனம் செய்திருந்தார்.

    இதற்கிடையே மக்களவை தேர்தலில் உத்தர பிரதேச மாநிலத்தில் 80 இடங்களில் 65 இடங்களில் போட்டியிடுவோம் என சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் குறிப்பிட்டிருந்தார். கட்சியை சேர்ந்தவர்கள் அதிகமான இடங்களில் போட்டியிட வேண்டும் என்று விரும்புகின்றனர். இதன் அடிப்படையில் அதிக இடங்களில் போட்டியிட இருப்பதாக அகிலேஷ் யாதவ் தெரிவித்திருந்தார்.

    இந்த இரண்டு சம்பவங்களும் இந்தியா கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், இந்தியா கூட்டணியில் உள்ள கட்சிகள் ஏமாற்றம் அடையாது என அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து அகிலேஷ் யாதவ் கூறுகையில் "சமாஜ்வாடி கட்சி இந்தியா கூட்டணியில் இணைந்ததில் இருந்து தற்போது வரை, கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கு உரிய மரியாதை கொடுத்து வருகிறது. சமாஜ்வாடி கட்சியால் முன்னதாகவும், இனிமேலும் கூட்டணி கட்சிகள் ஏமாற்றம் அடையாது.

    கட்சியில் உள்ள தலைவர்கள் அதிகமான இடங்களில் போட்டியிட விரும்புகிறார்கள். ஆனால், கூட்டணியில் உள்ள கட்சிகள் ஏமாற்றம் அடைந்து விடக்கூடாது என சமாஜ்வாடி கட்சி செயல்பட்டு வருகிறது என்பதை தற்போது உங்கள் முன் சொல்லிக் கொள்கிறேன்'' என தெரிவித்தார்.

    இதனால் உத்தர பிரதேச மக்களவை தேர்தலில் அகிலேஷ் யாதவ் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளுக்கு போதுமான இடங்களை பகிர்ந்து அளித்து போட்டியிட வாய்ப்புள்ளது.

    • 23ம் தேதி பாட்னாவில் எதிர்க்கட்சிகளின் கூட்டத்திற்கு பீகார் முதல்வர் நிதிஷ் குமார் அழைப்பு விடுத்துள்ளார்.
    • ஒருங்கிணைந்த எதிர்க்கட்சிகளின் கூட்டணிக்கு ராஷ்டிரிய லோக் தளம் ஆதரவு அளிக்கும்.

    லக்னோ:

    அடுத்த ஆண்டு நடைபெற உள்ள பாராளுமன்றத் தேர்தலில் எதிர்க்கட்சிகள் ஓரணியில் திரண்டு நின்றால் பாஜகவை தோற்கடிக்க முடியும் என எதிர்க்கட்சி தலைவர்கள் கணித்துள்ளனர். இதற்காக ஒத்த கருத்துடைய கட்சிகளை அணிதிரட்டும் முயற்சிகள் அகில இந்திய அளவில் நடக்கிறது. இதன் ஒரு பகுதியாக வரும் 23ம் தேதி பாட்னாவில் எதிர்க்கட்சிகளின் கூட்டத்திற்கு பீகார் முதல்வர் நிதிஷ் குமார் அழைப்பு விடுத்துள்ளார்.

    இந்த கூட்டத்தில் பாஜகவை வீழ்த்தும் வியூகம் குறித்து விவாதிக்கப்பட்டு முக்கிய முடிவு எடுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், இந்த கூட்டணிக்கு தலைமை மற்றும் பிரதமர் வேட்பாளர் குறித்து ஒருமித்த கருத்து எட்டப்படுமா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

    இக்கூட்டம் குறித்து ராஷ்டிரிய லோக் தளம் கட்சியின் உத்தர பிரதேச மாநில தலைவர் ராமாஷிஸ் ராய் கூறியதாவது:-

    ஒருங்கிணைந்த எதிர்க்கட்சிகளின் கூட்டணிக்கு ராஷ்டிரிய லோக் தளம் ஆதரவு அளிக்கும். எதிர்க்கட்சிகளின் ஒற்றுமைக்கான ஒருமித்த கருத்தை உருவாக்குவதற்கு இந்த கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவை எங்கள் கட்சி அங்ககீரிக்கும். அதேசமயம், காங்கிரஸ் கட்சி இல்லாமல் எந்த ஒரு கூட்டணியும் பாஜகவுக்கு எதிராக திறம்பட செயல்பட முடியாது என்பது எங்கள் கருத்து.

    உத்தரப்பிரதேசத்தில் சமீபத்தில் நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளால் தொண்டர்கள் அதிருப்தியில் உள்ளனர். சமாஜ்வாடி கட்சி மற்றும் ராஷ்டிரிய லோக் தளம் இணைந்து பணியாற்றியிருந்தால் முடிவுகள் வேறுவிதமாக இருந்திருக்கும் என தொண்டர்கள் நினைக்கின்றனர். எனினும், மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தை கொண்டிருப்பதால், சமாஜ்வாடி, காங்கிரஸ் மற்றும் ஆசாத் சமாஜ் கட்சி ஆகியவை தங்களின் கருத்து வேறுபாடுகளை மறந்து மாற்றத்தை கொண்டு வர ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்று நாங்கள் விருப்புகிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×