search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "உலக முதலீட்டாளர் மாநாடு"

    • தொழிலதிபர்களுடனும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துரையாட உள்ளார்.
    • முதலமைச்சரின் வெளிநாட்டு பயணம் 10 நாட்கள் வரை இருக்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது.

    சென்னை:

    தமிழகத்தில் உலக முதலீட்டாளர் மாநாடு கடந்த 7 மற்றும் 8 ஆகிய தேதிகளில் நடைபெற்றது. இந்த மாநாட்டில் சுமார் ரூ. 6.64 லட்சம் கோடி முதலீட்டுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டது.

    இந்நிலையில், முதலீடுகளை ஈர்ப்பதற்காக வரும் 28-ந்தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளிநாட்டுக்கு பயணம் மேற்கொள்ள உள்ளார்.

    வெளிநாட்டு பயணத்தின் போது பல்வேறு தொழில் நிறுவனங்களை நேரில் பார்வையிட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திட்டமிட்டுள்ளதாகவும், அப்போது தமிழ்நாட்டில் தொழில் தொடங்க வருமாறு முதலீட்டாளர்களுக்கு அழைப்பு விடுக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும் தொழிலதிபர்களுடனும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துரையாட உள்ளார்.

    முதலமைச்சரின் வெளிநாட்டு பயணம் 10 நாட்கள் வரை இருக்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது. இதனால் பிப்ரவரி 5-ம் தேதிக்கு பிறகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை திரும்ப வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

    • பல்வேறு பெரிய தொழில் நிறுவனங்களுடன் தொழில் தொடங்க பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது.
    • தமிழகத்தில் மேலும் விரிவுபடுத்தும் வகையில் ரூ.57 ஆயிரத்து 354 கோடி முதலீடுகளுக்கு புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டது.

    சென்னை:

    தமிழகத்தில் தொழில் வளர்ச்சியை பெருக்கவும், இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்கி கொடுக்கவும், சென்னையில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடத்தப்பட்டு வருகிறது.

    நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் நடைபெற்று வரும் இந்த மாநாட்டை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நேற்று தொடங்கி வைத்தார்.

    இந்த மாநாட்டில் அமெரிக்கா, இங்கிலாந்து, சீனா, ஆஸ்திரேலியா உள் பட 50-க்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து வர்த்தக மற்றும் தொழில் நிறுவனங்களின் தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகள் கலந்து கொண்டுள்ளனர். 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் இந்த மாநாட்டுக்காக வந்து உள்ளனர்.

    அதில் 450-க்கும் மேற் பட்ட வெளிநாட்டு பிரதிநிதிகள் இடம் பெற்றுள்ளனர்.

    நேற்று காலை முதல் மாலை வரை நடைபெற்ற மாநாட்டில் முதல் நாளிலேயே ரூ.5½ லட்சம் கோடி அளவுக்கு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.

    ஹூண்டாய், கோத்ரேஜ், டாடா எலக்ட்ரானிக்ஸ், டி.வி.எஸ். வின் பாஸ்ட் உள்பட பல்வேறு நிறுவனங்கள் தங்களது தொழிலை தமிழகத்தில் மேலும் விரிவுபடுத்தும் வகையில் ரூ.57 ஆயிரத்து 354 கோடி முதலீடுகளுக்கு புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டது.

    மேலும் பல்வேறு பெரிய தொழில் நிறுவனங்களுடன் தொழில் தொடங்க பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது.

    இதற்காக தமிழ்நாட்டில் தொழில் தொடங்க ஏதுவாக காலணி தயாரிப்பு, ஆடை தயாரிப்பு, போக்குவரத்து விமான உதிரி பாகங்கள், ஏரோஸ்பேஸ், பாதுகாப்புத் துறை தளவாடங்கள், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, செயற்கை நுண்ணறிவு எலக்ட்ரானிக்ஸ், வேளாண் உணவு, பொறியியல் மின்சார வாகனம் உள்ளிட்ட பல்வேறு துறைகள் சார்ந்த அமர்வுகளில் நிபுணத்துவம் பெற்ற தொழில் வல்லுநர்கள் விளக்கம் அளித்து வருகின்றனர்.

    இன்று 2-ம் நாள் மாநாட்டில் பெரிய தொழில் அதிபர்கள் மட்டுமின்றி சிட்கோ, இண்டஸ்ரியல் எஸ்டேட் பகுதிகளில் தொழில் நடத்தும் குறு-சிறு தொழில் அதிபர்களும் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ள வருகை தந்துள்ளனர்.

    இதற்காக குறு-சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை சார்பில் 'ஸ்டார்ட் அப்' நிறுவனங்கள் தங்கள் தயாரிப்புகளை காட்சிப்படுத்தும் அரங்கங்களும் அமைக்கப்பட்டு இருந்தது.

    இதில் மின் வாகனம், உணவு மற்றும் வேளாண் தொழில்நுட்பம், நிதி தொழில்நுட்பம், விண்வெளி தொழில்நுட்பம், ஜவுளி வாகன உற்பத்தி, வீட்டு உபயோகப் பொருட்கள், விண்வெளி தொழில் நுட்பம் உள்பட 20-க்கும் மேற்பட்ட துறைகள் சார்ந்து இயங்கும் நிறுவனங்கள் இடம் பெற்றிருந்தன.

    இதில் 20 நிறுவனங்கள் தமிழக அரசால் முதலீட்டு உதவி செய்யப்பட்டதாகும். மேலும் 10 நிறுவனங்கள் பெண்களால் நடத்தப்படுபவையாகும். இதை முதலீட்டாளர்களும், பொது மக்களும் பார்வையிட்டனர்.

    முதலீட்டாளர்கள் முன்னிலையில் ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் தங்கள் தயாரிப்புகளை அறிமுகப்படுத்தி விளக்கங்களை கூறினார்கள். இதற்கான அமர்வுகளும் ஒருங்கிணைக்கப்பட்டு இருந்தது. தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா குறு-சிறு தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், தொழில்துறை செயலாளர் அருண்ராய் ஆகியோர் முன்னிலையில் இன்றும் தொழில் அதிபர்கள் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டனர்.

    இன்று மாலையில் முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் முதலீட்டாளர் மாநாட்டுக்கு வந்து நிறைவு பேருரை நிகழ்த்துகிறார். அப்போது அவரது முன்னிலையில் மேலும் பல புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட உள்ளது. அப்போது எத்தனை லட்சம் கோடிக்கு முதலீடுகள் வரப் பெற்றுள்ளன என்ற தகவலை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிடுவார் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் ஒப்பந்தம் கையெழுத்தாக உள்ளது.
    • புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் இன்று மேற்கொள்ளப்பட உள்ளது.

    உலக முதலீட்டாளர் மாநாட்டை இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

    உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் பல்வேறு நிறுவனங்கள் கோடிகளை கொட்டி முதலீடு செய்துள்ளன.

    இந்நிலையில், எரிசக்தி துறையில், 1 லட்சத்து 37 ஆயிரம் கோடி முதலீடு தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் இன்று மேற்கொள்ளப்பட உள்ளன.

    பேச்சு வார்த்தை நிறைவு பெற்றுள்ள நிலையில், உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் ஒப்பந்தம் கையெழுத்தாக உள்ளது.

    இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் இன்று மேற்கொள்ளப்பட உள்ளதாக மின்சாரத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    • காஞ்சிபுரத்தில் மின்சார கார் பேட்டரி தயாரிப்பு நிறுவனம் தொடங்கப் படுவதன் மூலம் அங்கும் ஆயிரக்கணக்கானோர் வேலை வாய்ப்பை பெறும் நிலை ஏற்பட்டுள்ளது.
    • கிருஷ்ணகிரியிலும் டாடா நிறுவனம் தங்களது தொழிற் சாலையை விரிவாக்கம் செய்ய உள்ளது.

    சென்னை:

    சென்னையில் இன்று நடைபெற்ற உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் பல்வேறு முன்னணி நிறுவனங்கள் முதலீடு செய்வதற்காக புரிந்துணர்வு ஒப்பந்தங் களில் கையெழுத்து போட்டுள்ளன. முகேஷ் அம்பானியின் ஜியோ நிறுவனம், ஹூண்டாய் நிறுவனம் என பல்வேறு நிறுவனங்கள் பல ஆயிரம் கோடி ரூபாயை தமிழகத்தில் முதலீடு செய்துள்ளன.

    நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் இரும்பு தயாரிப்பு தொழிற்சாலை அமைய இருப்பதன் மூலம் 6 ஆயிரம் பேருக்கு வேலை கிடைக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. காஞ்சிபுரத்தில் மின்சார கார் பேட்டரி தயாரிப்பு நிறுவனம் தொடங்கப் படுவதன் மூலம் அங்கும் ஆயிரக்கணக்கானோர் வேலை வாய்ப்பை பெறும் நிலை ஏற்பட்டுள்ளது.

    ஸ்ரீபெரும்புதூரில் ஹூண்டாய் நிறுவனம் ஆலை விரிவாக்க பணியை மேற்கொள்ள உள்ளது. கிருஷ்ணகிரியிலும் டாடா நிறுவனம் தங்களது தொழிற் சாலையை விரிவாக்கம் செய்ய உள்ளது.

    இதனால் அந்த மாவட்ட மக்களும் பயன் அடைய உள்ளனர். கோத்ரேஜ் நிறுவனம் செங்கல்பட்டில் புதிய ஆலையை தொடங்க உள்ளதன் மூலம் அங்கும் வேலைவாய்ப்பு பெருகும் நிலை ஏற்பட்டுள்ளது.

    இப்படி உலக முதலீட்டாளர்கள் மாநாடு மூலமாக முதலீடுகள் குவிந்துள்ளதால் 40,500 பேருக்கு வேலை கிடைக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

    • முதலீட்டாளர்கள் மாநாட்டில் நேரில் கலந்து கொள்ள முடியாதது வருத்தம் அளிக்கிறது.
    • புதுப்பிக்கத்தக்க எரிசக்தி-பசுமை ஹைட்ரஜன் தொழில் தொடங்கப்பட உள்ளது.

    சென்னை:

    உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் ஜியோ நிறுவன தலைவர் முகேஷ் அம்பானி கலந்து கொள்ளவில்லை. வீடியோ மூலம் அவர் உரையாற்றினார். அவர் கூறியதாவது:-

    முதலீட்டாளர்கள் மாநாட்டில் நேரில் கலந்து கொள்ள முடியாதது வருத்தம் அளிக்கிறது. தமிழ்நாடு அறிவுசார், பாரம்பரியத்தில் சிறந்து விளங்கும் மாநிலம். முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் தமிழகம் தொழில் தொடங்க உகந்த மாநிலமாக உள்ளது.

    ஜியோ நிறுவனம் தமிழகத்தில் ரூ.35 ஆயிரம் கோடி முதலீடு செய்துள்ளது. புதுப்பிக்கத்தக்க எரிசக்தி-பசுமை ஹைட்ரஜன் தொழில் தொடங்கப்பட உள்ளது. இந்த ஆலை அடுத்த வாரம் தொடங்கப் பட உள்ளது.

    தமிழகத்தில் ஜியோவின் 300 சில்லறை விற்பனை கடைகள் உள்ளன. ஜியோ வாடிக்கையாளர்களாக 3.5 கோடி பேர் உள்ளார்கள். இதில் ரூ.25 ஆயிரம் கோடி முதலீடு செய்துள்ளோம்.

    தமிழகத்தில் ஜியோ நிறுவனம் 5 ஜி சேவையை கடந்த மாதமே முழுமையாக வழங்க தொடங்கிவிட்டது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • கோத்ரேஜ் நிறுவனம்-ரூ.515 கோடி முதலீடு (செங்கல்பட்டில் உற்பத்தி மையம) 446 பேருக்கு வேலை.
    • பெகட்ரான்-ரூ.1000 கோடி (நுகர்வோர் மின்னணு சாதனங்கள் உற்பத்தி மையம்)-8 ஆயிரம் பேருக்கு வேலை.

    உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் பல்வேறு நிறுவனங்கள் கோடிகளை கொட்டி முதலீடு செய்துள்ளன. எந்தெந்த நிறுவனங்கள் எவ்வளவு முதலீடு செய்துள்ளன என்பது பற்றிய விவரம் வருமாறு:-

    1. ரிலையன்ஸ் ஜியோ-ரூ.35 ஆயிரம் கோடி முதலீடு (புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆலை)

    2. கோத்ரேஜ் நிறுவனம்-ரூ.515 கோடி முதலீடு (செங்கல்பட்டில் உற்பத்தி மையம) 446 பேருக்கு வேலை.

    3. டாடா எலெக்டரானிக்ஸ்-ரூ. 12 ஆயிரத்து 82 கோடி முதலீடு (கிருஷ்ணகிரியில் செல்போன் உற்பத்தி மையம்) 40 ஆயிரத்து 500 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.

    4. பெகட்ரான்-ரூ.1000 கோடி (நுகர்வோர் மின்னணு சாதனங்கள் உற்பத்தி மையம்)-8 ஆயிரம் பேருக்கு வேலை.

    5. வே.எஸ். டபிள்யூ-ரூ.12 ஆயிரம் கோடி (புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திட்டங்கள் நெல்லை-தூத்துக்குடி மாவட்டங்களில் 6,600 பேருக்கு வேலை)

    6. டி.வி.எஸ். குழுமம்-ரூ.5 ஆயிரம் கோடி (தமிழகம் முழுவதும் திட்டங்கள் 500 பேருக்கு வேலைவாய்ப்பு)

    7. சீன நாட்டின் மிட்சுபிஹி நிறுவனம்-ரூ.200 கோடி (கும்மிடிப்பூண்டியில் மோட்டார் தொழிற்சாலை தொடங்கப்பட உள்ளது)

    8. வியட்நாம் நாட்டின் முன்னணி மின் வாகன தயாரிப்பு நிறுவனமான வின்பாஸ்ட்-ரூ.16 ஆயிரம் கோடி (தூத்துக்குடியில் தொழிற்சாலை அமைகிறது)

    9. ஹூண்டாய்-ரூ.6 ஆயிரம் கோடி (காஞ்சிபுரத்தில் பெட்ரோலிய மின்சார வாகன கார் பேட்டரி தயாரிப்பு நிறுவனம் தொடங்கப்படுகிறது)

    10. குவால்காம் நிறுவனம்-ரூ.177.27 கோடி முதலீடு செய்துள்ளது.

    • பெண்கள் முன்னேற்றத்திற்கு பல்வேறு திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது.
    • இன்றும், நாளையும் இந்த மாநாட்டில் பல புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாக உள்ளன.

    சென்னை:

    உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:

    * பெண்கள் முன்னேற்றத்திற்கு பல்வேறு திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது.

    * கடந்த 2 ஆண்டுகளில் 200க்கும் மேற்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

    * ஜவுளி, மின்னணு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் கொள்கைகள் வகுக்கப்பட்டுள்ளன.

    * தமிழகம் முழுவதும் சீரான வளர்ச்சியை ஏற்படுத்த வேண்டும் என்பதே எங்கள் நோக்கம்.

    * தமிழகம் முழுவதும் தொழில்களை துவங்க நடவடிக்கை எடுத்து வருகிறோம்.

    * ஏற்கனவே தமிழகத்தில் உள்ள நிறுவனங்கள் தங்கள் திட்டங்களை விரிவுபடுத்தி உள்ளன. இதுவே தமிழகத்தில் தொழில் தொடங்க சிறந்த சூழல் உள்ளதற்கு சான்று.

    * எல்லா துறைகளிலும் திறமையான பணியாளர்களை தமிழகம் கொண்டுள்ளது.

    * இன்றும், நாளையும் இந்த மாநாட்டில் பல புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாக உள்ளன. பல்வேறு நாடுகளின் பிரதிநிதிகள் பங்கேற்கும் சிறப்பு அமர்வுகள் நடைபெற உள்ளன.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • கல்விக்கு முக்கியத்துவம் அளிக்கும் மாநிலம், அதனால் சிறந்த தொழிலாளர்கள் தமிழகத்தில் உண்டு.
    • 2030க்குள் 1 ட்ரில்லியன் பொருளாதாரத்தை தமிழகம் எட்டும்.

    சென்னை:

    உலக முதலீட்டாளர் மாநாட்டை இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இதைத்தொடர்ந்து தமிழக தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா வரவேற்புரை ஆற்றினார்.

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மத்திய ஜவுளி, வர்த்தக தொழில்துறை மந்திரி பியூஷ்கோயலுக்கு ஜல்லிக்கட்டு காளை நினைவுப் பரிசை வழங்கினார். இதைத்தொடர்ந்து மத்திய மந்திரி பியூஷ் கோயல் உரையாற்றினார்.

    இதையடுத்து உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:

    * எல்லா வெளிநாடுகளும் தமிழ்நாட்டிற்கு வந்துள்ளதால், தற்போது கோட் சூட் அணிந்துள்ளேன்.

    * இன்று சென்னையில் பெய்யும் மழை போல முதலீடும் மழையாக பெய்யும் என நம்புகிறேன்.

    * முதலமைச்சராக மட்டுமின்றி சகோதரனாக உங்களை வரவேற்கிறேன்.

    * தனித்த தொழில்வளம் கொண்ட மாநிலம் தமிழ்நாடு.

    * பழங்காலத்திலேயே கடல் தாண்டி வணிகம் செய்தவர்கள் தமிழர்கள்.

    * திரை கடல் ஓடியும் திரவியம் தேடு என்ற பழமொழி தமிழில் உண்டு.

    * கல்விக்கு முக்கியத்துவம் அளிக்கும் மாநிலம், அதனால் சிறந்த தொழிலாளர்கள் தமிழகத்தில் உண்டு.

    * எங்கள் அழைப்பை ஏற்று வந்துள்ள அனைத்து தொழில் நிறுவனங்களுக்கும் நன்றி. வெளிநாட்டு தூதரக அதிகாரிகள், தொழில் கூட்டமைப்பினருக்கு நன்றி.

    * எனது அழைப்பை ஏற்று வந்துள்ள மத்திய அமைச்சர் பியூஸ் கோயலுக்கு நன்றி. வங்கிப் பணியாளராக இருந்து நிதி, வர்த்தகத்துறையில் சிறந்து விளங்குபவர் பியூஸ் கோயல்.

    * அமெரிக்க உள்ளிட்ட 9 நாடுகள் எங்களுடன் பங்குதாரராக உள்ளன.

    * தொழில் வளர்ச்சிக்கு இந்த மாநாடு வழிவகுக்கும். பல சாதனைகளை மிஞ்சக்கூடிய மாநாடாக இது இருக்கும்.

    * இந்திய பொருளாதாரத்தை வடிவமைப்பதில் தமிழகம் முக்கிய பங்கு வகிக்கும்.

    * 2030க்குள் 1 ட்ரில்லியன் பொருளாதாரத்தை தமிழகம் எட்டும்.

    * பொருளாதார வளர்ச்சிக்கு சட்டம் ஒழுங்கு பேணப்பட்டு, அமைதி நிலவ வேண்டும். பொருளாதார வளர்ச்சிக்கு உள்கட்டமைப்பு சிறப்பாக இருக்க வேண்டும்.

    * 2021ல் பொறுப்பேற்ற பிறகு இந்த வசதிகளை சிறப்பாக மேம்படுத்தி வருகிறோம்.

    * திறமையான இளைஞர் சக்தியை உருவாக்குவதில் தமிழகம் உறுதியாக இருக்கிறது என்று கூறினார்.

    • தொழில் துறையில் தமிழகம் முன்னிலையில் உள்ளது.
    • வேலைக்கு செல்லும் பெண்களுக்கு மிகவும் பாதுகாப்பான மாநிலம் தமிழ்நாடு.

    சென்னை:

    உலக முதலீட்டாளர் மாநாட்டை இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இதைத்தொடர்ந்து தமிழக தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா வரவேற்புரை ஆற்றினார். அப்போது அவர் கூறியதாவது:

    * தொழில் துறையில் தமிழகம் முன்னிலையில் உள்ளது.

    * இந்தியாவில் வாகன உற்பத்தி துறையில் தமிழகம் முன்னிலையில் உள்ளது.

    * ஏற்றுமதிக்கான குறியீட்டு எண்ணில் தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளது.

    * வேலைக்கு செல்லும் பெண்களுக்கு மிகவும் பாதுகாப்பான மாநிலம் தமிழ்நாடு.

    * நான் முதல்வன் திட்டத்தின் மூலம் இளைஞர்களுக்கு திறன் வளர்ப்பு பயிற்சி அளிக்கப்படுகிறது.

    * தமிழ்நாட்டில் 230 பேருக்கு ஒரு மருத்துவர் என்ற விகிதத்தில் உள்ளோம்.

    * தமிழ்நாட்டின் அனைத்து பகுதிகளும் சீராக வளர வேண்டும் என்பது முதல்வரின் இலக்கு.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டை தொடங்கி வைத்தார்.
    • மத்திய ஜவுளி, வர்த்தக தொழில் துறை மந்திரி பியூஷ்கோயல் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.

    சென்னை:

    தமிழகத்தில் தொழில் வளர்ச்சியை மேம்படுத்த தமிழக அரசு பல்வேறு கட்ட நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. உலக அளவில் மிகப் பெரிய நிறுவனங்களையும், முதலீட்டாளர்களையும் ஈர்க்கும் வகையில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடத்தப்பட்டு வருகிறது.

    தொழில் முதலீடுகளை ஈர்க்கும் வகையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஐக்கிய அரபு நாடுகள் மற்றும் சிங்கப்பூர், ஜப்பான் போன்ற நாடுகளில் சுற்றுப்ப யணம் செய்து புதிய திட்டங்களுக்கான ஒப்பந்தங்களை மேற்கொண்டுள்ளார்.

    தமிழக பொருளாதாரத்தை 2030-ம் ஆண்டுக்குள் ஒரு டிரில்லியன் அமெரிக்க டாலர் அளவுக்கு உயர்த்திட முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இலக்கு நிர்ணயித்துள்ளார்.

    இதற்கிடையே, சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மைய வளாகத்தில் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டின் தொடக்க விழா இன்று நடைபெற்றது. விழாவில் தமிழக தொழில் துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா வரவேற்றுப் பேசினார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டை தொடங்கி வைத்தார்.

    மத்திய ஜவுளி, வர்த்தக தொழில் துறை மந்திரி பியூஷ்கோயல் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

    இந்நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மத்திய ஜவுளி, வர்த்தக தொழில்துறை மந்திரி பியூஷ்கோயலுக்கு ஜல்லிக்கட்டு காளை நினைவுப் பரிசை வழங்கினார்.

    இந்த உலக முதலீட்டாளர்கள் மாநாடு தொழில் முதலீட்டாளர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.

    • முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் துபாய் உள்ளிட்ட சில நாடுகளுக்கு சென்று முதலீட்டாளர்களை சந்தித்து பேசினார்.
    • உலக முதலீட்டாளர் மாநாடு இன்றும் நாளையும் நடைபெறுகிறது.

    சென்னை:

    தமிழகத்தில் பொருளாதார வளர்ச்சியை கொண்டுவருவதற்கான நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது. தமிழகம் 2030-ம் ஆண்டுக்குள் ஒரு டிரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதார முன்னேற்றத்தை பெற்றிருக்கும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்து இருந்தார்.

    அதற்கேற்ற வகையில் தொழில் முதலீடுகளை ஈர்க்க கடந்த 2 ஆண்டுகளாக தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் துபாய் உள்ளிட்ட சில நாடுகளுக்கு சென்று முதலீட்டாளர்களை சந்தித்து பேசினார்.

    மேலும், தமிழகத்திற்கு உலக அளவில் தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக நந்தம்பாக்கத்தில் உள்ள சென்னை வர்த்தக மையத்தில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு-2024 நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. அதன்படி, இந்த மாநாடு இன்றும் நாளையும் நடைபெறுகிறது.

    இந்நிலையில் உலக முதலீட்டாளர் மாநாட்டை இன்று காலை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். மாநாட்டு தொடக்க விழா மத்திய ஜவுளி, வர்த்தகம் மற்றும் தொழில்துறை மந்திரி பியூஷ் கோயல் முன்னிலையில் நடைபெறுகிறது.

    • முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டை தொடங்கி வைத்து சிறப்புரையாற்றுகிறார்.
    • மத்திய ஜவுளி, வர்த்தக தொழில் துறை மந்திரி பியூஷ்கோயல் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசுகிறார்.

    சென்னை:

    தமிழகத்தில் தொழில் வளர்ச்சியை மேம்படுத்த தமிழக அரசு பல்வேறு கட்ட நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

    உலக அளவில் மிகப் பெரிய நிறுவனங்களையும், முதலீட்டாளர்களையும் ஈர்க்கும் வகையில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடத்தப்பட்டு வருகிறது.

    தொழில் முதலீடுகளை ஈர்க்கும் வகையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஐக்கிய அரபு நாடுகள் மற்றும் சிங்கப்பூர், ஜப்பான் போன்ற நாடுகளில் சுற்றுப்ப யணம் செய்து புதிய திட்டங்களுக்கான ஒப்பந்தங்களை மேற்கொண்டுள்ளார்.

    இந்த நிலையில் தமிழக பொருளாதாரத்தை 2030-ம் ஆண்டுக்குள் ஒரு டிரில்லியன் அமெரிக்க டாலர் அளவுக்கு உயர்த்திட முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இலக்கு நிர்ணயித்துள்ளார். இந்த இலக்கை அடையும் நோக்கில் சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மைய வளாகத்தில் 2 நாட்கள் உலக முதலீட்டாளர்கள் மாநாடு அறிவிக்கப்பட்டுள்ளது.

    நாளை (ஞாயிற்றுக்கிழமை) காலை மாநாட்டின் தொடக்க விழா நடைபெறுகிறது. விழாவில் தமிழக தொழில் துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா வரவேற்றுப் பேசுகிறார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டை தொடங்கி வைத்து சிறப்புரையாற்றுகிறார்.

    மத்திய ஜவுளி, வர்த்தக தொழில் துறை மந்திரி பியூஷ்கோயல் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசுகிறார்.

    மாநாட்டில் பல்வேறு தலைப்புகளில் கருத்தரங்குகள் நடைபெறுகின்றன. உற்பத்தி தொடர்பான கண் காட்சியும் நடைபெறுகிறது. இதில் தொழில் துறை அரங்குகளும் இடம் பெறுகின்றன. 450-க்கும் மேற்பட்ட வெளிநாட்டு பிரதிநிதிகள் உள்பட 30 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் மாநாட்டில் பங்கேற்பதற்காக பதிவு செய்துள்ளனர்.

    சிங்கப்பூர், ஜப்பான், கொரியா, இங்கிலாந்து, பிரான்ஸ், ஆஸ்திரேலியா, ஜெர்மனி, டென்மார்க், அமெரிக்கா ஆகிய நாடுகளில் இருந்து பல்வேறு தொழில் நிறுவனங்கள் மாநாட்டில் பங்கேற்கின்றன. 35 நாடுகளை சேர்ந்த பிரதிநிதிகள் மாநாட்டில் பங்கேற்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

    மாநாட்டு கருத்தரங்கில் ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னர் ரகுராம்ராஜன், மத்திய அரசின் தலைமை பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியன், இஸ்ரோ தலைவர் சோமநாத் உள்ளிட்ட பல முக்கிய பிரமுகர்கள் பங்கேற்று சிறப்புரையாற்றுகின்றனர்.

    மாநாட்டின் போது நூற்றுக்கணக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் செய்யப்படுவதுடன் ரூ.5.5 லட்சம் கோடிக்கணக்கான முதலிடுகளை ஈர்க்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

    ஒசூரில் டாடா நிறுவனம் கூடுதலாக 7 ஆயிரம் கோடி ருபாய் முதலீட்டில் ஐ-போன் உதரிபாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலையை விரிவாக்கம் செய்ய முடிவு செய்துள்ளது.

    இதற்கான அறிவிப்பு நாளை சென்னை நந்தம்பாக்கத்தில் நடைபெறும் உலக முதலீட்டாளர் மாநாட்டில் வெளியிடப்படுகிறது.

    இதன் மூலம் 6 ஆண்டுகளில் 30 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு அளிக்கப்படும்.

    ஐ-போனை இந்தியாவிலேயே தயாரிப்பதற்கான முதல் இந்திய நிறுவனமாக கடந்த நவம்பர் மாதம் டாடா எலக்ட்ரானிக் நிறுவனம் தேர்வு செய்யப்பட்டது.

    தற்போது ஒசூரில் ஐ-போன் தயாரிப்பு பணிகள் நடைபெற்று வரும் நிலையில் கூடுதலாக 7 ஆயிரம் கோடி ரூபாயில் புதிய யூனிட் அமைக்க டாடா நிறுவனம் முடிவு செய்துள்ளது. இதன் மூலம் 30 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு உருவாகும்.

    உலக முதலீட்டாளர்கள் மாநாட்டுக்கான ஆயத்தப்பணிகள் மற்றும் ஏற்பாடுகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன.

    நாளை நடைபெற உள்ள இந்த உலக முதலீட்டாளர்கள் மாநாடு தொழில் முதலீட்டாளர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

    ×