search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "உடல் தானம்"

    • தகவல் தெரிவித்து அதற்குண்டான ஆவணங்களில் கையெழுத்திட்டனர்.
    • சம்பவம் காஞ்சிபுரம் பகுதியில் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் மாநகராட்சி சின்ன காஞ்சிபுரம் திருச்சோலை தெரு பகுதியைச் சேர்ந்தவர் திருவேங்கடம் (வயது 75). இவருக்கு முரளிதரன் என்ற மகனும், ஒரு மகளும் உள்ளனர். சமுதாய கரையோடு வாழ்ந்தவரான திருவேங்கடம், தான் இறந்து போனால் தனது உடலை மருத்துவ கல்லூரி மாணவர்கள் ஆராய்ச்சிக்கு தானமாக வழங்கிட வேண்டும் என தனது மகன் முரளிதரன் மற்றும் குடும்பத்தாரிடம், நண்பர்களிடமும் தெரிவித்து இருந்தார்.

    இந்நிலையில் கடந்த ஒரு வார காலமாக உடல்நிலை சரியில்லாமல் சிகிச்சை பெற்று வந்த நிலையில் திருவேங்கடம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். திருவேங்கடத்தின் கடைசி ஆசையை நிறை வேற்றிடும் வகையில் உறவினர்களுடனும், நண்பர்களுடனும், கலந்து ஆலோசனை செய்த குடும்பத்தினர் முதியவர் திருவேங்கடத்தின் உடலை வேலூர் கிறிஸ்தவ மருத்துவ கல்லூரிக்கு தானம் வழங்க முடிவு செய்து, தகவல் தெரிவித்து அதற்குண்டான ஆவணங்களில் கையெழுத்திட்டனர்.

    அதன்படி திருவேங்க டத்தின் உடலுக்கு உறவினர்கள் நண்பர்கள் முன்னிலையில் குடும்பத்தினர் சம்பிரதாயம் முறைப்படி இறுதி சடங்குகளை செய்த பின்னர் சிறிது தூரம் முதியவர் திருவேங்கடத்தின் உடலை எடுத்துச் சென்று தயாராக இருந்த வேலூர் கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரி ஆம்பு லன்சில் ஒப்படைத்தனர். சமூக அக்கறையோடு வாழ்ந்த முதியவரின் கடைசி ஆசைப்படி, மருத்துவக் கல்லூரிக்கு முதியவரின் உடலை குடும்பத்தினர் தானமாக வழங்கிய சம்பவம் காஞ்சிபுரம் பகுதியில் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    • தங்கவேல் (88). ஓய்வு பெற்ற ஆசிரியர். இவர் நேற்று முன்தினம் மாலை வயது முதிர்வு காரணமாக இறந்து விட்டார்.
    • இறப்பதற்கு முன்பு தனது முழு உடலை சேலம் மோகன் குமாரமங்கலம் மருத்துவ கல்லூரி உடற்கூறு பிரிவிற்கு மருத்துவமாணவர்களின் பயிற்சி மற்றும் ஆய்விற்கு அளிப்பதாக உறுதிமொழி பத்திரத்திரத்தை கடந்த 2010-ம் ஆண்டு வழங்கி இருந்தார்.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் அருகே உள்ள பொத்தனூரைச் சேர்ந்தவர் தங்கவேல் (88). ஓய்வு பெற்ற ஆசிரியர். இவர் நேற்று முன்தினம் மாலை வயது முதிர்வு காரணமாக இறந்து விட்டார்.

    அவர் இறப்பதற்கு முன்பு

    தனது முழு உடலை சேலம் மோகன் குமாரமங்கலம் மருத்துவ கல்லூரி உடற்கூறு பிரிவிற்கு மருத்துவமாணவர்களின் பயிற்சி மற்றும் ஆய்விற்கு அளிப்பதாக உறுதிமொழி பத்திரத்திரத்தை கடந்த 2010-ம் ஆண்டு வழங்கி இருந்தார்.

    உடல் ஒப்படைப்பு

    அவரது விருப்பத்தை நிறை வேற்றும் வகையில் அவரது மனைவி அகி லாண்டேஸ்வரி மற்றும் மகன் பொத்தனூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் தலைமை ஆசிரி யராக பணியாற்றி வரும் சித்தார்த்தன் ஆகியோரின் ஒப்புதலுடன் நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு மருத்துவ மாணவர்கள் பயன் பெறும் வகையில் இறந்த ஆசிரியர் தங்கவேலின் உடல் தானமாக வழங்கப்பட்டது.

    இது குறித்து நாமக்கல் மருத்துவக் கல்லூரி சார்பில் ஆசிரியர் சித்தார்த்தனுக்கு மருத்துவக்கல்லூரி மாணவர்களின் கல்விக்காக தங்களது தந்தையின் உடலை தானமாக வழங்க முன் வந்த உயரிய நோக்கத்திற்கு மருத்துவக்கல்லூரி சார்பில்

    நன்றியை தெரிவித்துக் கொள்வ தாக தெரிவிக்கப் பட்டுள்ளது. இறந்த பிறகும் தனது உடலை

    மருத்துவக்கல்லூரி மாண வர்களின் கல்விக்காக வழங்கிய ஆசிரியர் தங்க வேலின் குடும்பத்திற்கு சமூக ஆர்வலர்கள், உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

    • இவர் இறப்பிற்கு பிறகும் தான் வாழ்ந்த வாழ்க்கைக்கு அர்த்தம் கொடுத்துள்ளார்.
    • மேற்கண்ட தகவலை பி.எஸ்.டி. மற்றும் உறுப்பினர்கள், தஞ்சாவூர் ஏ.எம்.சி. லயன்ஸ் சங்கம் சார்பில் தெரிவிக்கப்பட்டது.

    தஞ்சாவூர்:

    லயன்ஸ் இயக்கத்திற்கு என்று வாழ்ந்து தான் இறந்தும் பிறர் வாழ கண்களை மட்டுமல்ல, மருத்துவ மாணவர்களின் படிப்பிற்காக தனது உடலையும் தானமாக கொடுத்த நல்லாசிரியர் லயன் துரைராசன் உடல் தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு தானமாக வழங்கப்பட்டது. அதற்கான சான்றிதழும் அவர்களின் குடும்பத்தாரிடம் கொடுக்கப்பட்டது.இவர் இறப்பிற்கு பிறகும் தான் வாழ்ந்த வாழ்க்கைக்கு அர்த்தம் கொடுத்துள்ளார்.

    இத்தனை கடினமான துயர நேரத்திலும், அவரின் மனைவியும், பிள்ளைகளும் துரைராசனின் கடைசி ஆசைகளை" (கண் தானம், உடல் தானம்) முழுவதும் நிறைவேற்றிட உறுதியாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

    மேற்கண்ட தகவலை பி.எஸ்.டி. மற்றும் உறுப்பினர்கள், தஞ்சாவூர் ஏ.எம்.சி. லயன்ஸ் சங்கம் சார்பில் தெரிவிக்கப்பட்டது.

    ×