search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இலங்கை பாராளுமன்றம்"

    • பாராளுமன்றத்தில் ஆளும் இலங்கை மக்கள் கட்சிக்கு பெரும்பான்மை உள்ளது. அக்கட்சி ரணில் விக்ரமசிங்கேவை ஆதரிப்பதாக அறிவித்துள்ளது.
    • நாளை இலங்கையின் புதிய அதிபரை தேர்வு செய்ய ரகசிய வாக்கெடுப்பு நடைபெறுகிறது.

    கொழும்பு:

    இலங்கையில் பொருளாதார நெருக்கடியால் அத்தியாவசிய பொருட்களின் விலை வரலாறு காணாத வகையில் உயர்ந்தது. மேலும் உணவு பொருட்கள், பெட்ரோல், டீசல் ஆகியவற்றுக்கு தட்டுப்பாடும் நிலவுகிறது.

    இதனால் மக்கள் தொடர்ந்து போராட்டங்கள் நடத்தியதால் பிரதமராக இருந்த மகிந்த ராஜபக்சே கடந்த மே மாதம் தனது பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து புதிய பிரதமராக ரணில் விக்ரமசிங்கே நியமிக்கப்பட்டார்.

    அதிபராக இருந்த கோத்தபய ராஜபக்சே பதவி விலக மறுத்து வந்த நிலையில் அவருக்கு எதிராக மிகப் பெரிய அளவில் போராட்டம் வெடித்தது. அதிபர் மாளிகைக்குள் போராட்டக்காரர்கள் நுழைந்தனர்.

    இதனால் கோத்தபய ராஜபக்சே கடந்த 9-ந்தேதி மாலத்தீவுக்கு தப்பி சென்றார். பின்னர் சிங்கப்பூருக்கு சென்ற அவர் அங்கிருந்தபடி அதிபர் பதவியை ராஜினாமா செய்வதாக இ-மெயில் மூலம் பாராளுமன்ற சபாநாயகருக்கு கடிதத்தை அனுப்பினார்.

    இதையடுத்து இடைக்கால அதிபராக ரணில் விக்மரசிங்கே நியமிக்கப்படுவதாக சபாநாயகர் அறிவித்தார். மேலும் புதிய அதிபரை 20-ந்தேதி பாராளுமன்றத்தில் எம்.பி.க்கள் வாக்களித்து தேர்வு செய்வார்கள் என்றும் அறிவிக்கப்பட்டது.

    புதிய அதிபர் பதவிக்கு இடைக்கால அதிபர் ரணில் விக்ரமசிங்கே, எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசா, ஜெ.வி.பி. கட்சி தலைவர் அனுராகுமாரதிசநாயக, இலங்கை மக்கள் கட்சியில் இருந்து பிரிந்து சென்ற முன்னாள் மந்திரி டல்லஸ் அழகப்பெருமா ஆகிய 4 பேர் போட்டியிடுவதாக அறிவித்தனர்.

    255 உறுப்பினர்களை கொண்ட இலங்கை பாராளுமன்றத்தில் 50 சதவீதத்துக்கு அதிகமான வாக்குகளை பெறும் வேட்பாளர் புதிய அதிபராக தேர்வு செய்யப்படுவார்.

    பாராளுமன்றத்தில் ஆளும் இலங்கை மக்கள் கட்சிக்கு பெரும்பான்மை உள்ளது. அக்கட்சி ரணில் விக்ரமசிங்கேவை ஆதரிப்பதாக அறிவித்துள்ளது.

    ஆனால் இலங்கை மக்கள் கட்சி தலைவர்களில் ஒருவரான ஜி.எல்.பிரீஸ் அணியினர் முன்னாள் மந்திரி டல்லஸ் அழகப் பெருமாவுக்கு ஆதரவு தெரிவித்து உள்ளனர். இதனால் ஆளுங்கட்சிக்குள் கருத்து வேறுபாடு நிலவி வருகிறது.

    புதிய அதிபரை தேர்ந்தெடுப்பதற்கான வேட்பு மனுவை 19-ந்தேதி (இன்று) வரை தாக்கல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து இன்று பாராளுமன்றம் மீண்டும் கூடுகிறது. இதில் அதிபர் பதவிக்கு போட்டியிடுவர்கள் வேட்பு மனுதாக்கல் செய்ய உள்ளனர்.

    நாளை இலங்கையின் புதிய அதிபரை தேர்வு செய்ய ரகசிய வாக்கெடுப்பு நடைபெறுகிறது. இதில் பாராளுமன்ற உறுப்பினர்கள் வாக்களித்து அதி பரை தேர்வு செய்கிறார்கள்.

    ரணில் விக்ரமசிங்கே வுக்கு ஆளுங்கட்சி ஆதரவு தெரிவித்துள்ள போதிலும் ஒரு பிரிவினர் டல்லஸ் அழகப்பெருமாவுக்கு ஆதரவு தெரிவித்து உள்ளனர். மேலும் முக்கிய எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி கட்சியும் டல்லஸ் பெருமாவை ஆதரிப்பதாக இன்று அறிவித்துள்ளது.

    இதனால் அங்கு நடக்கும் அதிபர் பதவி தேர்தலில் கடும் போட்டி இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இலங்கையில் மீண்டும் அவசர நிலை பிரகடனப்படுத்துவதாக நேற்று இடைக்கால அதிபர் ரணில் விக்ரமசிங்கே அறிவித்தார். இதையடுத்து ராணுவத்தினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    இந்த நிலையில் பாராளுமன்றம் இன்று கூடுவதாலும், நாளை அதிபர் தேர்வு நடப்பதாலும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    ஆர்ப்பாட்டக்காரர்கள் பாராளுமன்றத்தை முற்றுகையிட முயன்றால் அவர்களை தடுக்கவும் கலைந்து செல்லவும் விசேஷ பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளதாக போலீஸ் தலைமையக வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன.

    கலவரத் தடுப்பு பிரிவுகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், கொழும்பு மற்றும் பாராளுமன்றத்தை சுற்றியுள்ள பகுதிகளுக்கு கண்ணீர் புகை குண்டுகளை வீசும் குழுக்களும் வரவழைக்கப்பட்டுள்ளன. அதிபர் பதவிக்கு போட்டியிடும் ரணில் விக்மரசிங்கேவுக்கும் போராட்டக்காரர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    இலங்கையின் அதிபராகவும், பின்னர் பிரதமராகவும் இருந்த மகிந்த ராஜபக்சே இன்று அந்நாட்டு பாராளுமன்றத்தில் முதன்மையான எதிர்க்கட்சி தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். #Rajapaksa #Lankaopposition #oppositionleader
    கொழும்பு:

    இலங்கையில் பிரதமராக இருந்த ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கேவுக்கும், அதிபர் சிறிசேனாவுக்கும் இடையே ஏற்பட்ட மோதல் காரணமாக கடந்த அக்டோபர் மாதம் 26-ந் தேதி பிரதமர் பதவியில் இருந்து ரணில் விக்ரமசிங்கேவை அதிபர் சிறிசேனா நீக்கினார். முன்னாள் அதிபர் ராஜபக்சேவை புதிய பிரதமராக நியமித்தார். இதற்கு நாடு முழுவதும் பலத்த எதிர்ப்பு கிளம்பியது.
     
    இதை சமாளிக்க பாராளுமன்றத்தை கலைத்து விட்டு புதிதாக தேர்தல் நடத்த சிறிசேனா உத்தரவிட்டார். அவரது நடவடிக்கை சட்ட விரோதமானது என்று கூறிய சுப்ரீம் கோர்ட்டு ராஜபக்சேவும், அவரது மந்திரி சபையும் செயல்பட தடை விதித்தது. நெருக்கடி அதிகரித்ததால் ராஜபக்சே நேற்று முன்தினம் பதவியில் இருந்து விலகினார்.

    இதையடுத்து ரணில் விக்ரமசிங்கே மீண்டும் பிரதமராக நேற்று பதவி ஏற்றார். அவருக்கு அதிபர் சிறிசேனா பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

    இந்த அரசியல் குழப்பங்களுக்கு பின்னர் முதல்முறையாக இன்று பாராளுமன்றம் கூடியது. அப்போது பாராளுமன்றத்தின் முதன்மையான எதிர்க்கட்சி தலைவராக ராஜபக்சே நியமிக்கப்பட்டுள்ளதாக சபாநாயகர் கரு ஜெயசூர்யா அறிவித்தார்.

    கரு ஜெயசூர்யா

    இலங்கையின் பிரதான எதிர்க்கட்சியாக உள்ள தமிழ் தேசிய கூட்டமைப்பு தலைவர் இரா.சம்பந்தன் வகித்துவந்த இந்த பதவியில் ராஜபக்சே நியமிக்கப்பட்டதற்கு  தமிழ் தேசிய கூட்டமைப்பு கட்சி எம்.பி. சுமித்திரன் மற்றும் இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் கட்சி எம்.பி. ரவூப் ஹக்கீம் ஆகியோர் அவையில் எதிர்ப்பு தெரிவித்தனர்.

    சமீபத்தில் வேறொரு கட்சியில் சேர்ந்த ராஜபக்சேவுக்கு இந்த பதவிக்கு தகுதியற்றவர் என அவர்கள் குறிப்பிட்டனர். தங்களது எதிர்ப்பை உறுப்பினர்கள் கடிதம் மூலமாக தெரிவிக்கலாம். அந்த கடிதத்தை பாராளுமன்ற தேர்வு குழு பரிசீலித்து முடிவு செய்யும் என சபாநாயகர் கரு ஜெயசூர்யா தெரிவித்துள்ளார். #Rajapaksa #Lankaopposition #oppositionleader
    ×