search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆரம்ப"

    • ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் 1929 நவ ம்பர் மாதம் 25-ந் தேதி, சேலம் மாவட்ட கமிட்டி வாயிலாக அரசு மருந்தகம் என்ற பெயரில் மருத்துவமனை அமைக்கப்பட்டது.
    • இந்த அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மேம்படுத்தப்படுமா என எதிர்பார்த்து காத்திருக்கும் கிராம மக்கள்.

    வாழப்பாடி:

    சேலம் மாவட்டம் ஏத்தாப்பூர் பேரூராட்சி சேலம்–சென்னை தேசிய நெடுஞ்சாலையில் இருந்து 2 கி.மீ., துாரத்தில், புத்திர கவுண்டன்பாளையம் கல்வராயன்மலை கருமந்துறை சாலையில் அமைந்துள்ளது.

    அக்ரஹாரம், அபிநவம், கணேசாபுரம், வடக்குக்காடு, காரைக்களம், கல்லேரிப்பட்டி, படையாச்சூர், கல்யாணகிரி, எம்.சி.ராஜா நகர், புத்திரகவுண்டன்பாளையம், வைத்தியகவுண்டன்புதுார் உள்ளிட்ட 10 கிராமங்களுக்கு ஏத்தாப்பூர் முக்கிய மையமாக விளங்கிறது.

    இப்பகுதிமக்களின் நலன்கருதி, பழமையான ஏத்தாப்பூர் சாம்பவ மூர்த்தீஸ்வரர் கோயிலுக்கு எதிரே வசிஷ்டநதி கரை யோரத்தில், ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் 1929 நவ ம்பர் மாதம் 25-ந் தேதி, சேலம் மாவட்ட கமிட்டி வாயிலாக அரசு மருந்தகம் என்ற பெயரில் மருத்துவமனை அமைக்கப்பட்டது. மாவட்ட கமிட்டித் தலைவரான அப்போதைய எம்.எல்.சி ராவ்பகதுார் எல்லப் பச் செட்டியார் இந்த மருந்தகத்தை திறந்து வைத்துள்ளார். 1958 அக்டோபர் 7-ந் தேதி, அப்போதைய முதல்-அமைச்சர் காமராஜர், பிரசவ விடுதி கட்டடத்தை திறந்து வைத்துள்ளார்.

    இதனையடுத்து இந்த அரசு மருந்தகம் அரசு மருத்துவமனையாக தரம் உயர்த்தப்பட்டது. அறுவை சிகிச்சை அரங்கு, உள் நோயாளிகள் பிரிவு, ஆய்வகம், பிரேத பரிசோதனை க்கூடம் உள்ளிட்ட வசதிகளும், 50 ஆண்டுகளுக்கு முன்பே ஏற்படுத்தப்பட்டு 24 மணி நேரமும் இயங்கி வந்தது. இதற்குபிறகு பணிபுரிந்த மருத்துவர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்களின் கவனமின்மையால், இந்த அரசு மருத்துவமனை, 25 ஆண்டுக்கு முன் அரசு ஆரம்ப சுகாதார நிலையமாக தரம் குறைக்கப்பட்டது.

    தற்போது, இந்த ஆரம்ப சுகாதார நிலையத்தில் காலை, மாலை வேளைகளில் குறிப்பிட்ட நேரத்தில் மட்டுமே பொதுமக்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. இரவு நேரங்களில் மருத்துவர்கள், செவிலியர், மருத்துவப்பணியாளர்கள் இல்லாததால், சிகிச்சை பெறுவதற்கு வழியும் வசதிகளும் இல்லை.

    இதனால், ஏத்தாப்பூர் மற்றும் சுற்றுப்புற கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் அவசர முதலுதவி சிகிச்சை பெறுவதற்கு கூட, ஆத்துார், சேலம், வாழப்பாடி, பெத்தநாயக்கன்பாளையம் அரசு மருத்துமனைகளுக்கு செல்ல வேண்டிய நிலை நீடித்து வருகிறது. இதுமட்டுமின்றி பழைய கட்டடங்கள் வழுவிழந்து காணப்படுகிறது.

    எனவே, 93 ஆண்டுக்கு முன் தொடங்கப்பட் ஏத்தாப்பூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு நுாற்றாண்டு விழா காண்பதற்குள், விசாலமான புதிய கட்டடம் அமைத்து, நவீன அறுவை சிகிச்சை அரங்கம், உள்நோயாளிகள் படுக்கைப்பிரிவு, ஸ்கேனிங், எக்ஸ்ரே,ஆய்வகம் மற்றும் மருத்துவர், பணியாளர்கள் குடியிருப்பு உள்ளிட்ட அனைத்து வசதிகளையும் ஏற்படுத்த வேண்டும்.

    கூடுதல் மருத்துவர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்களை நியமித்து, 24 மணிநேரமும் செயல்படும் வகையில் மேம்படுத்தவும், சேலம் மாவட்ட நிர்வாகமும், பொது சுகாதாரத்துறை அதிகாரிகளும், மக்கள் பிரதிநிதிகளும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென இப்பகுதி மக்களிடையே கோரிக்கை எழுந்துள்ளது.

    • கஸ்பாபேட்டை பகுதியில் ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்கப்பட வில்லை.
    • கஸ்பாபேட்டை பகுதியில் ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க வேண்டும் என அந்த பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்னர்.

    மொடக்குறிச்சி:

    மொடக்குறிச்சி அருகே உள்ள கஸ்பாபேட்டை பகுதியில் 6500-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகிறார்கள். கஸ்பா பேட்டை பகுதியில் அரசு பள்ளிகள், வாரச் சந்தைகள், வங்கிகள், இந்து அறநிலையத்துறைக்கு சொந்தமான கோவில்கள் உள்ளன.

    ஆனால் கஸ்பாபேட்டை பகுதியில் ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்கப்பட வில்லை. இந்த பகுதி மக்கள் மருத்துவ தேவைகளுக்கு 5 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள அவல்பூந்துறை அடுத்த கவுண்டிச்சிபாளையம் பகுதியில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு செல்ல வேண்டிய நிலை உள்ளது.

    ஆனால் கவுண்டிச்சிபாளையம் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு செல்ல போதுமான பஸ் வசதி இல்லை. இரு சக்கர வாகனம் வைத்திருப்போர் மட்டுமே ஆரம்ப சுமாதார நிலையத்துக்கு உடனடியாக செல்ல முடியும். பஸ்சை நம்பி உள்ளவர்கள் மிகவும் அவதி அடைந்து வரு கிறார்கள்.

    ஒரு சிலர் பஸ் வசதி இல்லாததால் வீட்டிலேயே முடங்கி கிடக்கும் நிலை உள்ளது. இதனால் முதி யோர், குழந்தைகள் பெண்கள், கர்ப்பிணி பெண்கள் கடும் அவதிக்கு ஆளாகின்றனர்.

    மேலும் அவல்பூந்துறை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சென்று வருவதால் நேர விரயம் ஏற்படுகிறது. இதனால் வேலைக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது என மக்கள் புகார் கூறினர்.

    எனவே கஸ்பாபேட்டை பகுதியில் ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க வேண்டும் என அந்த பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்னர்.

    ×