search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அவகாசம்"

    • அனுமதியற்ற கல்வி நிறுவன கட்டிடங்களுக்கு அங்கீகாரம் பெறுவதற்கு அவகாசம் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளதாக கலெக்டர் கூறி உள்ளார்.
    • இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்ட கலெக்டர் ஜெயசீலன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்ப தாவது:-

    விருதுநகர் நகர் ஊரமைப்பு இயக்கத்தின் எல்லைக்குள் அமையும் திட்டமில்லா பகுதிகளில் 1.1.2011-க்கு முன்னர் கட்டப்பட்டு இயங்கிவரும் அனுமதியற்ற கல்வி நிறுவனக் கட்டிடங்களுக்கு இசைவு வழங்கும் திட்டத்தின் வழிகாட்டு நெறி முறைகள் கடந்த 14.6.2018-ல் வெளியிடப்பட்டன.

    இந்த திட்டத்தின் கீழ் இணையம் வழியாக 14.6.2018 முதல் 13.9.2018 வரை 3 மாத காலத்தில் பெறப்பட்ட விண்ணப் பங்களுக்கு இசைவு வழங்கு வதற்கு சென்னை ஐகோர்ட்டு விதிக்கப் பட்டிருந்த தடையை நீக்கி 10.2.2021 அன்று தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

    பின்னர் 22.3.2021 முதல் 4.4.2021 வரை 2 வார காலத்திற்கு விண்ணப்ப ங்கள் பெறப்பட்டன. மீண்டும் இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க தவறிய வர்களுக்கு 31.12.2022 வரை 6 மாத காலம் அவகாசம் வழங்கப் பட்டது. தற்போது இதற்கான கால அவகாசம் 30.6.2023 வரை நீட்டிக்கப் பட்டுள்ளது. இது தொடர்பாக மாவட்ட நகர் ஊரமைப்பு அலுவல கங்களை அணுகலாம்.

    மேலும் https://tcp.tn.gov.in என்ற இணைய முகவரி யில் விண்ணப்பம் பதிவு செய்யலாம். இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 

    • வங்கிகளில் ரூ.2,000 நோட்டுக்களை செலுத்த 6 மாதங்கள் அவகாசம் வேண்டும் என்று பசும்பொன் பாண்டியன் கூறினார்.
    • ரூ.2000 நோட்டுக்களை வைத்திருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

    மதுரை

    அண்ணா திராவிட மக்கள் முன்னேற்ற கழக பொதுச் செயலாளர் வழக்கறிஞர் பசும்பொன் பாண்டியன் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறி யிருப்பதாவது:-

    ரிசர்வ் வங்கி ரூ. 2000 நோட்டுகளை திரும்பப் பெறுவதாக கடந்த சில நாட்களுக்கு முன்பு அறிவித்தது. இதனால் வீடு மற்றும் கடைகளில் ரூ.2000 நோட்டுக்களை வைத்தி ருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

    ரிசர்வ் வங்கியின் அறி விப்பை தொடர்ந்து மக்கள் தங்களிடம் உள்ள ரூ.2000 நோட்டுக்களை மாற்று வதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

    அதே நேரத்தில் அறிவிப்பு வெளியிடப்பட்ட மறு நிமிடமே அனைத்துக் கடைகள், ஷாப்பிங் மால்கள், பெட்ரோல் பங்க் மற்றும் அரசு போக்கு வரத்துக்கழகம் உட்பட மதுபார், வணிக நிறுவனங்க ளில் ரூ.2000 நோட்டுகளை வாங்குவது இல்லை என்று முடிவு செய்து விட்டனர்.

    ரிசர்வ் வங்கி ரூ.2000 நோட்டுகளை திரும்பப்பெறும் முடிவு களை எடுக்கும் போது மாநில அரசுகளின் கருத்துக்களை கேட்டிருக்க வேண்டும். இந்த தெளிவற்ற, திட்டமிடாத அறிவிப்பால் பொதுமக்கள் அவதிப்படு வதை தடுத்து நிறுத்த ரிசர்வ் வங்கி தெளிவான விளக்க மான அறிக்கையை உடனே வெளியிட வேண்டும்.

    இந்த பிரச்சினைகளில் மக்கள் பாதிக்கப்படாமல் இருக்க 6 மாத காலம் ரூ.2000 நோட்டுகளை வங்கியில் செலுத்துவற்கு அவகாசம் அளிக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • மின் கட்டணத் தொகையை தவணை முறையில் செலுத்தவும், அபராதத் தொகையை ரத்து செய்யக்கோரியும் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.
    • கோவை, திருப்பூா் மாவட்ட கூட்டமைப்பின் சாா்பில் நன்றி தெரிவித்துக்கொள்கிறோம் என்றாா்.

    மங்கலம்:

    விசைத்தறியாளா்கள் நிலுவையில் வைத்துள்ள மின் கட்டணத் தொகையை 6 தவணைகளில் செலுத்த அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

    இது குறித்து கோவை, திருப்பூா் மாவட்ட கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளா்கள் சங்க கூட்டமைப்பின் பொருளாளா் காரணம்பேட்டை பூபதி கூறியதாவது:-

    கோவை, திருப்பூா் மாவட்ட கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளா்கள் சங்க கூட்டமைப்பின் சாா்பில் சென்னையில் மின்சாரத் துறை அமைச்சா் வி.செந்தில்பாலாஜி, மின்சார வாரிய தலைவா் ராஜேஷ்லக்கானி, இயக்குநா் சிவலிங்கராஜன் ஆகியோரை சந்தித்து விசைத்தறியாளா்கள் நிலுவையில் வைத்துள்ள மின் கட்டணத் தொகையை தவணை முறையில் செலுத்தவும், அபராதத் தொகையை ரத்து செய்யக்கோரியும் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

    அதனைத் தொடா்ந்து உடனடியாக 6 தவணைகள் வழங்க மின்சார வாரியம் உத்தரவிட்டுள்ளது. மேலும் அபராத தொகையை ரத்து செய்வது குறித்து கணக்கீடு செய்து பரிசீலிப்பதாக இயக்குநா் உறுதியளித்தாா்.இதற்காக கோவை, திருப்பூா் மாவட்ட கூட்டமைப்பின் சாா்பில் நன்றி தெரிவித்துக்கொள்கிறோம் என்றாா்.

    • பட்டய பயிற்சியில் சேர கால அவகாசம் நீட்டிக்கப்பட்டது.
    • மேற்கண்ட தகவலை மதுரை பாண்டியநாடு கூட்டுறவு மேலாண்மை நிலைய துணைப்பதிவாளர்-முதல்வர் ரவிச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

    மதுரை

    மதுரை பாண்டியநாடு கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் 2022-23-ம் ஆண்டுக்கான கூட்டுறவு மேலாண்மை பட்டயப்பயிற்சிக்கான விண்ணப்பங்கள் வருகிற 18-ந் தேதி வரை நேரில் பெற்றுக் கொள்ள கால நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. விண்ணப்பத்தின் விலை ரூ.100 ஆகும். பிளஸ்-2 தேர்்ச்சி பெற்று 1.8.2022 அன்று 17 வயது நிரம்பியவர்கள் விண்ணப்பிக்க தகுதி பெற்றவர்கள். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை வருகிற 22-ந் தேதிக்குள் பாண்டியநாடு கூட்டுறவு மேலாண்மை நிலையத்திற்கு கிடைக்குமாறு கூரியர் அல்லது பதிவு தபாலில் மட்டும் அனுப்ப வேண்டும். எக்காரணம் கொண்டும் நேரடி விண்ணப்பங்கள் பெறப்படமாட்டாது. மேற்கண்ட தகவலை மதுரை பாண்டியநாடு கூட்டுறவு மேலாண்மை நிலைய துணைப்பதிவாளர்-முதல்வர் ரவிச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

    இதேபோன்று இந்த கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் கூட்டுறவு சங்கங்களில் பணிபுரியும் கூட்டுறவு பட்டய பயிற்சி பெறாத நிரந்தர பணியாளர்களுக்கு 22-வது அஞ்சல் வழி கூட்டுறவு மேலாண்மை பட்டயப்பயிற்சி தொடங்கி பயிற்சி நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதில் சேர பயிற்சியாளர்களுக்கான விண்ணப்பம் வழங்குவதற்கு வருகிற 12-ந் தேதி வரை காலநீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.

    • குழந்தையை பராமரிக்க, ஈரோட்டில் உள்ள 'ஹல்பிங் ஹார்ட்ஸ்' என்ற தத்து மையத்தில் வருவாய்த் துறையினர் ஒப்படைத்தனர்.
    • குழந்தையை யாரும் உரிமை கோராதபட்சத்தில், தத்து கொடுக்கப்படும்.

    திருப்பூர் :

    திருப்பூர் பெரியாண்டிபாளைய–த்தில், ஆதரவற்ற நிலையில் இருந்த, மூன்று வயது ஆண் குழந்தையை, சென்ட்ரல் போலீசார் மீட்டு, அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் சேர்த்தனர்.

    குழந்தையை பராமரிக்க, ஈரோட்டில் உள்ள 'ஹல்பிங் ஹார்ட்ஸ்' என்ற தத்து மையத்தில் வருவாய்த் துறையினர் ஒப்படைத்தனர்.குழந்தைக்கு உரிமை கோருவோர், உரிய ஆவணங்களுடன், நான்கு மாத காலத்திற்குள் விண்ணப்பிக்கலாம். யாரும் உரிமை கோராதபட்சத்தில், தத்து கொடுக்கப்படும். விவரங்களுக்கு, குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் - 0421 2971198, ஈரோடு தத்து மையத்தை, 97906 13262, 99448 39573 என்ற எண்களில் தொடர்புகொள்ளலாம் என, மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

    ×