3 வயது குழந்தை மீட்பு - உரிமை கோர அவகாசம்

குழந்தையை பராமரிக்க, ஈரோட்டில் உள்ள 'ஹல்பிங் ஹார்ட்ஸ்' என்ற தத்து மையத்தில் வருவாய்த் துறையினர் ஒப்படைத்தனர்.குழந்தையை யாரும் உரிமை கோராதபட்சத்தில், தத்து கொடுக்கப்படும்.
மீட்கப்பட்ட குழந்தையை படத்தில் காணலாம்.
மீட்கப்பட்ட குழந்தையை படத்தில் காணலாம்.
Published on

திருப்பூர் :

திருப்பூர் பெரியாண்டிபாளைய–த்தில், ஆதரவற்ற நிலையில் இருந்த, மூன்று வயது ஆண் குழந்தையை, சென்ட்ரல் போலீசார் மீட்டு, அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் சேர்த்தனர்.

குழந்தையை பராமரிக்க, ஈரோட்டில் உள்ள 'ஹல்பிங் ஹார்ட்ஸ்' என்ற தத்து மையத்தில் வருவாய்த் துறையினர் ஒப்படைத்தனர்.குழந்தைக்கு உரிமை கோருவோர், உரிய ஆவணங்களுடன், நான்கு மாத காலத்திற்குள் விண்ணப்பிக்கலாம். யாரும் உரிமை கோராதபட்சத்தில், தத்து கொடுக்கப்படும். விவரங்களுக்கு, குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் - 0421 2971198, ஈரோடு தத்து மையத்தை, 97906 13262, 99448 39573 என்ற எண்களில் தொடர்புகொள்ளலாம் என, மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com