search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அர்ஷத் நதீம்"

    • உலக தடகளத்தில் இந்தியாவும், பாகிஸ்தானும் முதல் இரு இடங்களை பிடித்திருக்கிறது.
    • இதே போல் ஒலிம்பிக்கிலும் டாப்-2ஆக இருப்போம்.

    உலக தடகளத்தில் ஈட்டி எறிதலில் பாகிஸ்தானின் அர்ஷத் நதீம் 87.82 மீட்டர் தூரம் எறிந்து வெள்ளிப்பதக்கத்தை வசப்படுத்தினார். உலக தடகளத்தில் பாகிஸ்தானுக்கு கிடைத்த முதல் பதக்கம் இது தான். அவரது தந்தை முகமது அஷ்ரப் கொத்தனார் ஆவார்.

    ஒரே நாளில் பாகிஸ்தானின் ஹீரோவாக உயர்ந்துள்ள 26 வயதான அர்ஷத் நதீம் கூறுகையில், 'நீரஜ் சோப்ரா தங்கம் வென்றதில் மகிழ்ச்சி. இப்போது இந்தியாவும், பாகிஸ்தானும் முதல் இரு இடங்களை பிடித்திருக்கிறது. இதே போல் ஒலிம்பிக்கிலும் டாப்-2ஆக இருப்போம். இது எனக்கும், எனது குடும்பத்தினருக்கும், நாட்டுக்கும் உணர்வுபூர்வமான தருணம். நான் மகிழ்ச்சி வெள்ளத்தில் மிதக்கிறேன்' என்றார்.

    போட்டி முடிந்ததும் நீரஜ் சோப்ராவும், 3-வது இடத்தை பெற்ற வால்டெஜியும் அவர்களது தேசிய கொடியுடன் போட்டோவுக்கு 'போஸ்' கொடுத்தனர். அப்போது அருகில் நின்ற பாகிஸ்தான் வீரர் அர்ஷத் நதீமை சோப்ரா புகைப்படம் எடுக்க அழைத்தார். அவரிடம் பாகிஸ்தான் தேசிய கொடி இல்லாததால் அவரும் நீரஜ் சோப்ராவுடன் இணைந்து இந்திய தேசிய கொடியின் பின்னணியில் நிற்க வேண்டியதானது.

    இந்த காட்சி சமூக வலைதளத்தில வைரலாகியுள்ளது. பாராட்டுகளும் குவிகிறது. பாகிஸ்தான் ரசிகர் ஒருவர் 'நதீமை இந்த அழகிய புகைப்படத்தில் இடம் பெற சோப்ரா அழைத்தார். அண்டை நாட்டவர்களிடையே வெறுப்புணர்வை பரப்புவதற்கு பதிலாக அன்பை பரப்ப வேண்டும்' என்றும், இன்னொரு ரசிகர் 'என்ன ஒரு அற்புதமான படம். இரு நாட்டை சேர்ந்த இரு கதாநாயகர்கள்' என்றும் பதிவிட்டுள்ளனர்.

    • இறுதிப் போட்டியின் முடிவில், நீரஜ் மைதானத்தில் புகைப்படம் எடுக்க நதீமை அழைத்தார்.
    • நதீம் உடனடியாக மூவர்ண கொடியை ஏந்திய நீரஜ் சோப்ராவுடன் நின்று புகைப்படம் எடுத்தார்.

    புடாபெஸ்ட்:

    19-வது உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டி ஹங்கேரி தலைநகர் புடாபெஸ்டில் கடந்த 9 நாட்களாக நடந்து வந்தது. கடைசி நாளான நேற்று, இரவு ஆண்களுக்கான ஈட்டி எறிதலின் இறுதிசுற்று நடந்தது.

    எதிர்பார்த்தபடியே ஒலிம்பிக் சாம்பியனான இந்தியாவின் நீரஜ் சோப்ரா அதிகபட்சமாக 88.17 மீட்டர் தூரம் ஈட்டி எறிந்து தங்கப்பதக்கத்தை கைப்பற்றினார். அவருக்கு சவாலாக இருந்த பாகிஸ்தானின் அர்ஷத் நதீம் (87.82 மீட்டர்) வெள்ளிப்பதக்கம் பெற்றார்.

    இறுதிப் போட்டிக்குப் பிறகு, நீரஜ் சோப்ரா மற்றும் அர்ஷத் நதீம் இருவரும் களத்தில் தங்களது தருணத்தைப் பகிர்ந்து கொண்டனர்.

    தற்போது எங்கள் இரு நாடுகளும் எப்படி வளர்ந்து வருகின்றன என்பதை நாங்கள் விவாதித்தோம். பாகிஸ்தான் வீரர் அர்ஷாத் 2-வது இடத்தை பிடித்து வெள்ளிப்பதக்கம் வென்றது மகிழ்ச்சி அளிக்கிறது என நிரஜ் சோப்ரா தெரிவித்திருந்தார்.

    அது சமூக ஊடகங்கள் முழுவதும் ரசிகர்களின் இதயங்களை வென்றது. நீரஜ் மற்றும் நதீம் களத்தில் ஒருவரை ஒருவர் கட்டி தழுவினர். அவர்களின் பிணைப்பு இந்தியா-பாகிஸ்தான் வேற்றுமைக்கு அப்பால் செல்கிறது.

    இறுதிப் போட்டியின் முடிவில், நீரஜ் மைதானத்தில் புகைப்படம் எடுக்க நதீமை அழைத்தார். நதீம் உடனடியாக மூவர்ண கொடியை ஏந்திய நீரஜ் சோப்ராவுடன் நின்று புகைப்படம் எடுத்தார். அவர்களுடன் வெண்கலப் பதக்கம் வென்ற செக் குடியரசின் ஜக்குப் வாட்லெஜும் நின்றார்.

    நீரஜ் மற்றும் நதீம் இருவரும் ஒருவருக்கொருவர் வாழ்த்துக்களைத் தெரிவித்த தருணம் சமூக வலைதளங்களில் அதிகமாக பகிரப்பட்டது. மூவர்ண கொடியுடன் புகைப்படம் எடுத்த பாகிஸ்தான் வீரரின் செயலுக்கு பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளன. இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.



    ×