என் மலர்
விளையாட்டு

பெங்களூருவில் சர்வதேச போட்டி: நீரஜ் சோப்ரா அழைப்பை நிராகரித்த பாகிஸ்தான் வீரர்
- பெங்களூருவில் நீரஜ் சோப்ரா கிளாசிக் ஈட்டி எறிதல் போட்டி அடுத்த மாதம் (மே) 24 -ந்தேதி நடக்கிறது.
- இதில் பங்கேற்க பாகிஸ்தான் வீரர் அர்ஷத் நதீமுக்கு, நீரஜ் சோப்ரா அழைப்பு விடுத்தார்.
லாகூர்:
ஒலிம்பிக்கில் 2 பதக்கங்கள் (தங்கம் மற்றும் வெள்ளி) வென்று சாதனை படைத்த ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ராவுக்கு பெருமை சேர்க்கும் வகையில் 'நீரஜ் சோப்ரா கிளாசிக் ஈட்டி எறிதல் போட்டி' நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த போட்டி பெங்களூருவில் அடுத்த மாதம் (மே) 24 -ந்தேதி நடக்கிறது.
2 முறை உலக சாம்பியனான ஆண்டர்சன் பீட்டர்ஸ் (கிரனடா), 2016-ம் ஆண்டு ஒலிம்பிக்கில் தங்கப்பதக்கம் வென்ற தாமஸ்ரோஹ்லர் (ஜெர்மனி), 2016-ம் ஆண்டு ஒலிம்பிக்கில் வெள்ளி வென்ற ஜூலியஸ் யெகோ (கென்யா), கர்டிஸ் தாம்சன் (அமெரிக்கா) உள்ளிட்ட முன்னணி வீரர்கள் இந்த போட்டியில் பங்கேற்கிறார்கள்.
இதில் பங்கேற்க 2024-ம் ஆண்டு ஒலிம்பிக்கில் தங்கப்பதக்கம் வென்ற பாகிஸ்தான் வீரர் அர்ஷத் நதீமுக்கு, நீரஜ் சோப்ரா அழைப்பு விடுத்தார்.
இந்த நிலையில் நீரஜ் சோப்ராவின் இந்த அழைப்பை நதீம் நிராகரித்தார். கொரியாவில் மே 22-ந்தேதி நடைபெறும் ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்ப இருப்பதால் தன்னால் கலந்து கொள்ள இயலாது என்று அவர் தெரிவித்துள்ளார்.






