search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அசார் அலி"

    பயிற்சி ஆட்டத்தில் அசார் அலி, பாபர் ஆசம் சதம் விளாசியதால், தென்ஆப்பிரிக்கா தொடரை நம்பிக்கையுடன் எதிர்கொள்ள இருக்கிறது பாகிஸ்தான் #SAvPAK
    பாகிஸ்தான் அணி மூன்று வகை கிரிக்கெட்டிலும் விளையாடுவதற்காக தென்ஆப்பிரிக்கா சென்றுள்ளது. முதல் டெஸ்ட் வருகிற 26-ந்தேதி தொடங்குகிறது. இதற்குமுன் பாகிஸ்தான் அணி ‘கிரிக்கெட் தென்ஆப்பிரிக்கா இன்விடேசன் லெவன்’ அணிக்கெதிராக மூன்று நாட்கள் கொண்ட பயிற்சி ஆட்டத்தில் விளையாட முடிவு செய்தது. இந்த ஆட்டம் கடந்த 19-ந்தேதி (நேற்று முன்தினம்) தொடங்கியது.

    இதற்கு முன் கிரிக்கெட் தென்ஆப்பிரிக்கா இன்விடேசன் லெவன் அணி டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தது, தொடக்க வீரர் ரிச்சார்ட்ஸ் 98 ரன்களும், கேப்டன் அக்கர்மான் 103 ரன்களும் விளாச 84.3  ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 318 ரன்கள் சேர்த்து கிரிக்கெட் தென்ஆப்பிரிக்கா இன்விடேசன் லெவன் அணி முதல் இன்னிங்சை டிக்ளேர் செய்தது.

    பின்னர் பாகிஸ்தான் முதல் இன்னிங்சை தொடங்கியது. தொடக்க பேட்ஸ்மேன்கள் இமாம்-உல்-ஹக் (23), பகர் சமான் (19) சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். அடுத்து வந்த ஷான் மன்சூட் 41 ரன்கள் சேர்த்தார். ஆனால் அசார் அலி (100), பாபர் ஆசம் (104) சிறப்பாக விளையாடி சதம் அடித்தனர். இருவரின் சதத்தால் பாகிஸ்தான் 7 விக்கெட் இழப்பிற்கு 306 ரன்கள் சேர்த்து முதல் இன்னிங்சை டிக்ளேர் செய்தது.


    அசார் அலி

    பின்னர் 2-வது இன்னிங்சை தொடங்கிய கிரிக்கெட் தென்ஆப்பிரிக்கா இன்விடேசன் லெவன் அணி 7 விக்கெட் இழப்பிற்கு 182 ரன்கள் எடுத்து 2-வது இன்னிங்சை டிக்ளேர் செய்தது. இதனால் பாகிஸ்தான் அணிக்கு 195 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. பாகிஸ்தான் 2-வது இன்னிங்சில் பேட்டிங் செய்து வருகிறது.

    முதல் இன்னிங்சில் முன்னணி வீரர்களான அசார் அலி, பாபர் ஆசம் சதம் அடித்துள்ளதால், தென்ஆப்பிரிக்காவிற்கு எதிரான ‘பாக்சிங் டே’ டெஸ்டில் அதிக அளவில் ரன்கள் குவித்துவிடலாம் என்ற பாகிஸ்தானுக்கு நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.
    தென்ஆப்ரிக்காவில் பயமின்றி தங்களது வழக்கமான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும் என பாகிஸ்தான் கேப்டன் சர்பிராஸ் அகமது அறிவுறுத்தியுள்ளார்.. #SAvPAK
    பாகிஸ்தான் அணி தென்ஆப்பிரிக்காவில் சுற்றுப் பயணம் செய்து மூன்று டெஸ்ட், ஐந்து ஒருநாள் மற்றும் மூன்று டி20 போட்டிகள் கொண்ட தொடர்களில் விளையாட உள்ளது. இதில் டெஸ்ட் தொடர் வருகிற 26-ந்தேதி தொடங்குகிறது.

    பாகிஸ்தான் அணி தென்ஆப்பிரிக்காவில் 12 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளது. இதில் இரண்டில் (1998 மற்றும் 2007) மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. 9 தோல்விகளையும், ஒரு டிராவையும் சந்தித்துள்ளது.

    தென்ஆப்பிரிக்கா தொடர் எளிதாக இருக்காது என்பதில் பாகிஸ்தான் வீரர்களுக்கு எந்த சந்தேகமும் இல்லை. இந்நிலையில் பயமின்றி விளையாட வேண்டும் என்று சக வீரர்களை அறிவுறுத்தியுள்ளார்.

    இதுகுறித்து பாகிஸ்தான் கேப்டன் சர்பிராஸ் அகமது கூறுகையில் ‘‘பவுன்ஸ், சீமிங் அதிக அளவில் இருக்கும் தென்ஆப்பிரிக்கா சூழ்நிலையில் விளையாடுவது மிகவும் கடினமாக இருக்கும். எந்தவொரு வீரரும் பயனமின்றி, பெரிய இதயத்தோடு வெற்றிக்காக விளையாட வேண்டும்.



    ஷபிக் மற்றும் அசார் அலியிடம் இருந்து எங்களுக்கு மிகப்பெரிய ஸ்கோர் தேவை. அவர்கள் அதிக ஸ்கோர் அடிக்கக்கூடியவர்கள். ஆகவே, நாங்கள் அதிக ரன்கள் குவித்துவிட்டால், சிறந்த பந்து வீச்சை குழுவை கொண்ட நாங்கள் போட்டியில் வெற்றி பெறுவோம்.

    முகமது அமிர் உள்ளூர் தொடரில் சிறப்பாக விளையாடியதால் அணியில் மீண்டும் இடம் கிடைத்துள்ளது. அவர் டெஸ்ட் போட்டியில் முக்கியமான விக்கெட்டுக்களை எங்களுக்கு பெற்றுத்தருவார் என்ற நம்பிக்கை உள்ளது’’ என்றார்.
    அபு தாபியில் நடைபெற்று வரும் 3-வது டெஸ்டில் பாகிஸ்தான் வெற்றிக்கு 280 ரன்கள் இலக்காக நிர்ணயித்துள்ளது நியூசிலாந்து. #PAKvNZ
    பாகிஸ்தான் - நியூசிலாந்து இடையிலான 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் அபு தாபியில் நடைபெற்று வருகிறது. நியூசிலாந்து முதல் இன்னிங்சில் 274 ரன்கள் சேர்த்தது. பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய பாகிஸ்தான் அசார் அலி (134), ஆசாத் ஷபிக் (104) ஆகியோரின் சதத்தால் 348 ரன்கள் குவித்தது.

    74 ரன்கள் பின்தங்கிய நிலையில் நியூசிலாந்து 2-வது இன்னிங்சை தொடங்கியது. கேன் வில்லியம்சன், நிக்கோல்ஸ் ஆகியோர் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். கேன் வில்லியம்சன் சிறப்பாக விளையாடி சதம் அடித்தார். நிக்கோல்ஸ் சதத்தை நெருங்கினார். நேற்றைய 4-வது நாள் ஆட்ட முடிவில் நியூசிலாந்து 272 ரன்கள் சேர்த்திருந்தது. கேன் வில்லியம்சன் 139 ரன்னுடனும், நிக்கோல்ஸ் 90 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.

    இன்று கடைசி நாள் ஆட்டம் தொடங்கியது. கேன் வில்லியம்சன் 139 ரன்னிலேயே ஆட்டமிழந்தார். நிக்கோல்ஸ் சிறப்பாக விளையாடி சதம் அடித்தார். இன்று 9 ஓவர்கள் விளையாடிய நியூசிலாந்து அணி 7 விக்கெட் இழப்பிற்கு 353 ரன்கள் எடுத்திருக்கும்போது 2-வது இன்னிங்சை டிக்ளேர் செய்தது. நிக்கோல்ஸ் 126 ரன்னுடன் களத்தில் இருந்தார்.


    கேன் வில்லியம்சன் - நிக்கோல்ஸ்

    ஒட்டுமொத்தமாக நியூசிலாந்து 279 ரன்கள் முன்னிலைப் பெற்றது. இதனால் பாகிஸ்தான் வெற்றிக்கு 280 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்தது. பாகிஸ்தான் சுமார் 81 ஓவர்கள் இன்று விளையாட வேண்டும். கடைசி நாளில் 81 ஓவரில் 280 ரன்கள் எடுப்பது எளிதான காரியம் அல்ல. அதேவேளையில் கடைசி வரை விக்கெட் இழக்காமல் இருந்தால் டிரா செய்யலாம்.

    பாகிஸ்தான் இந்த போட்டியில் தோற்றால் நியூசிலாந்து 2-1 எனத் தொடரை கைப்பற்றிவிடும். இதனால் பாகிஸ்தான் குறைந்தபட்சம் போட்டியை டிரா செய்து தொடரை காப்பாற்றிக் கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தில் விளையாடி வருகிறது.
    பாகிஸ்தானுக்கு எதிரான கடைசி டெஸ்டில் கேப்டன் கேன் வில்லியம்சனின் சதத்தால் நியூசிலாந்து 4-வது நாள் ஆட்ட முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 272 ரன்கள் சேர்த்துள்ளது. #PAKvNZ
    பாகிஸ்தான் - நியூசிலாந்து இடையிலான 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் அபு தாபியில் நடைபெற்று வருகிறது. நியூசிலாந்து முதல் இன்னிங்சில் 274 ரன்கள் சேர்த்தது. பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய பாகிஸ்தான் அசார் அலி (134), ஆசாத் ஷபிக் (104) ஆகியோரின் சதத்தால் 348 ரன்கள் குவித்தது.

    74 ரன்கள் பின்தங்கிய நிலையில் நியூசிலாந்து 2-வது இன்னிங்சை தொடங்கியது. ஒரு கட்டத்தில் 60 ரன்கள் எடுப்பதற்குள் நான்கு விக்கெட்டுக்களை இழந்தது. ஐந்தாவது விக்கெட்டுக்கு கேப்டன் வில்லியம்சன் உடன் நிக்கோல்ஸ் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது.

    கேன் வில்லியம்சன் சிறப்பாக விளையாடி சதம் அடித்தார். நிக்கோல்ஸ் சதத்தை நெருங்கினார். இன்றைய 4-வது நாள் ஆட்டம் முடியும் வரை இருவரும் மேலும் விக்கெட் விழாமல் பார்த்துக்கொண்டனர். கேன் வில்லியம்சன் 139 ரன்னுடனும், நிக்கோல்ஸ் 90 ரன்னுடனும் களத்தில் உள்ளனர். நியூசிலாந்து 104 ஓவர்கள் விளையாடி 272 ரன்கள் சேர்த்துள்ளது.



    தற்போது வரை 198 ரன்கள் முன்னிலைப் பெற்றுள்ளது. நாளை கூடுதலாக 100 ரன்களுக்கு மேல் அடித்து 300 ரன்கள் முன்னிலைப் பெற்றால் நியூசிலாந்து போட்டியை டிரா செய்யும், அல்லது வெற்றி பெறும். சதம் அடித்த கேன் வில்லியம்சன் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றி விடலாம் என்று நினைத்திருந்த பாகிஸ்தான் கனவை தகர்த்துள்ளார்.

    முதல் இரண்டு போட்டிகளிலும் இரு அணிகளும் தலா ஒரு வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
    அபு தாபியில் நடைபெற்று வந்த பரபரப்பான முதல் டெஸ்டில் பாகிஸ்தானை 171-ல் ஆல்அவுட்டாக்கி நியூசிலாந்து 4 ரன்னில் அசத்தல் வெற்றி பெற்றது. #PAKvNZ
    பாகிஸ்தான் - நியூசிலாந்து இடையிலான முதல் டெஸ்ட் அபு தாபியில் கடந்த 16-ந்தேதி தொடங்கியது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து 153 ரன்னில் சுருண்டது. பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய பாகிஸ்தான் 227 ரன்கள் சேர்த்தது.

    74 ரன்கள் பின்தங்கிய நிலையில் நியூசிலாந்து 2-வது இன்னிங்சை தொடங்கியது. ஹசன் அலி, யாசிர் ஷா தலா ஐந்து விக்கெட்டுக்கள் வீழ்த்த நியூசிலாந்து 249 ரன்கள் சேர்த்து ஆல்அவுட் ஆனது.

    இதனால் பாகிஸ்தானுக்கு 176 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்தது நியூசிலாந்து. நேற்றைய 3-வது நாள் ஆட்ட முடிவில் பாகிஸ்தான் விக்கெட் இழப்பின்றி 37 ரன்கள் எடுத்திருந்தது. இன்று நான்காவது நாள் ஆட்டம் தொடங்கியது. இன்று மேலும் 11 ரன்கள் எடுப்பதற்குள் மூன்று விக்கெட்டுக்களை இழந்தது பாகிஸ்தான்.


    சோதி

    4-வது விக்கெட்டுக்கு அசார் அலி உடன் அசாத் ஷபிக் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. பாகிஸ்தான் ஸ்கோர் 130 ரன்னாக இருக்கும்போது இந்த ஜோடி பிரிந்தது. அசாத் ஷபிக் 45 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அதன்பின் வந்த வீரர்கள் அடுத்தடுத்து வெளியேற 155 ரன்னிற்குள் 8 விக்கெட்டுக்களை இழந்தது பாகிஸ்தான்.

    ஒருபக்கம் விக்கெட் வீழந்தாலும் மறுமுனையில் அசார் அலி அரைசதம் அடித்து வெற்றிக்காக போராடினார். வெற்றிக்கு 21 ரன்கள் தேவை என்ற நிலையில் 9-வது விக்கெட்டுக்கு வந்த ஹசன் அலி ரன்ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். அப்போது பாகிஸ்தான் 164 ரன்கள் எடுத்திருந்தது.


    அசார் அலி - அசாத் ஷபிக்

    வெற்றிக்கு 12 ரன்கள் தேவைப்பட்டது. கடைசி விக்கெட்டுக்க அசார் அலி உடன் முகமது அப்பாஸ் ஜோடி சேர்ந்தார். அப்பாஸை எதிர்முனையில் வைத்துக் கொண்டு அசார் அலி ஒவ்வொரு ரன்னாக எடுத்தார். 11 ஓவர்கள் தாக்குப்பிடித்து 7 ரன்கள் எடுத்தார் அசார் அலி. இறுதியில் 65 ரன்கள் எடுத்த நிலையில் பட்டேல் பந்தில் எல்பிடபிள்யூ ஆக பாகிஸ்தான் 171 ரன்னில் ஆல்அவுட் ஆனது.

    இதனால் பரபரப்பாக சென்ற டெஸ்டில் நியூசிலாந்து 4 ரன்னில் அசத்தல் வெற்றி பெற்றது. பட்டேல் சிறப்பாக பந்து வீசி ஐந்துவிக்கெட்டுக்கள் கைப்பற்றினார்.
    பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனான அசார் அலி ஒருநாள் போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக தெரிவித்துள்ளார். #AzharAli
    பாகிஸ்தான் கேப்டனாக சில காலம் இருந்த அசார் அலி  டெஸ்ட் போட்டிகளில் அதிக கவனம் செலுத்துவதற்காக ஒருநாள் சர்வதேசப் போட்டிகளிலிருந்து திடீரென ஓய்வு அறிவித்துள்ளார்.

    இங்கிலாந்தில் கடந்த ஆண்டு நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபியில் இந்தியாவை வீழ்த்திய இறுதிப் போட்டியில் அசார் அலி இடம்பிடித்து 59 ரன்கள் அடித்தார். இதே சாம்பியன்ஸ் டிராபி லீக் சுற்றில் இந்தியாவுக்கு எதிராக 50 ரன்களும், இங்கிலாந்துக்கு எதிராக 76 ரன்களும் எடுத்தவர் அசார் அலி.

    இந்த ஆண்டு நியூசிலாந்து தொடருக்குப் பிறகே அசார் அலி அணியிலிருந்து நீக்கப்பட்டு இவருக்குப் பதிலாக இமாம் உல் ஹக் சேர்க்கப்பட்டார்.

    “நான் திடீரெனத்தான் இந்த முடிவை எடுத்துள்ளேன், டெஸ்ட் கிரிக்கெட்டில் முழுக்கவனம் செலுத்த விரும்புகிறேன். ஒருநாள் போட்டிகளில் பாகிஸ்தான் அணியில் இடம்பிடித்துள்ள வீரர்கள் அபாரமான ஆடி வருகின்றனர், ஆகவே என் தேவை இருக்காது.

    ஆனால் நான் எந்த ஒரு கசப்பான எண்ணங்களுடனும் ஓய்வு முடிவை அறிவிக்கவில்லை. இது என் சொந்த முடிவு, டெஸ்ட் போட்டிகளில் இதே ஆற்றல், திறமையுடன் தொடர்ந்து கவனம் செலுத்த விரும்புகிறேன்.



    அடுத்த உலகக்கோப்பை மற்றும் வரவிருக்கும் தொடர்களுக்காக பாகிஸ்தான் அணி வெற்றிபெற ஒரு முன்னாள் கேப்டனாக வாழ்த்துகிறேன். சர்பிராஸ் அஹமது அணியை நன்றாகவே வழி நடத்துகிறார்.” என்றார்.

    இதுவரை 53 போட்டிகள் ஆடிய அசார் அலி, 1845 ரன்கள் எடுத்துள்ளார். சராசரி 36.90. இதில் 3 சதங்கள் 12 அரைசதங்கள் அடங்கும்.

    இவரது கேப்டன் பொறுப்பிலா் பாகிஸ்தான், வங்காளதேசத்துக்கு எதிராக 0-3 என்று உதை வாங்கியது, அதன் பிறகே ஒருநாள் தரவரிசையில் பாகிஸ்தான் 9-ம் இடத்துக்கு தள்ளப்பட்டது குறிப்பிடத்தக்கது.
    பாகிஸ்தான் டெஸ்ட் அணியின் தொடக்க வீரரான அசார் அலி கவுன்ட்டி அணியான சோமர்செட் உடன் ஒப்பந்தம் செய்துள்ளார். #CountyCricket
    ஆஸ்திரேலியா அணியின் தொடக்க பேட்ஸ்மேன் ரென்ஷா. இவர் கேமரூன் பான்கிராப்ட்டிற்குப் பதிலாக கவுன்ட்டி அணியான சோமர்செட் அணிக்காக விளையாடினார். சோமர்செட் அணிக்காக மூன்று சதங்கள் அடித்த ரென்ஷாவின் கைவிரலில் காயம் ஏற்பட்டது.



    இதனால் ரென்ஷா சோமர்செட் அணியில் இருந்து விலகியுள்ளார். தற்போது அவருக்குப் பதிலாக பாகிஸ்தான் அணியைச் சேர்ந்த தொடக்க வீரரான அசார் அலியை அந்த அணி ஒப்பந்தம் செய்துள்ளது. இந்த சீசன் முடியும்வரை அசார் அலி சோமர்செட் அணிக்காக விளையாட இருக்கிறார்.
    ×