search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "woman police suicide attempt"

    காதலனுக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டதால் மனவருத்தம் அடைந்த பெண் போலீஸ், ஓடும் பஸ்சில் வி‌ஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றது பரபரப்பை ஏற்படுத்தியது.
    ராமநாதபுரம்:

    சேலம் மாவட்டம் கெங்கவல்லி தாலுகா செந்தாரப்பட்டி பகுதியை சேர்ந்த முத்துசாமி என்பவருடைய மகள் செண்பகம் (வயது 26). கடந்த 2011–ம் ஆண்டு காவல்துறை பணியில் சேர்ந்த இவர் திருச்சி திருவெறும்பூரில் போலீசாக பணியாற்றி வருகிறார்.

    அவருடன் திருச்சி துவாரபட்டி மலை பகுதியை சேர்ந்த ராஜேந்திரன் மகன் ஜெயதேவன்(31) என்பவரும் போலீஸ்காரராக வேலை பார்த்தார். அவருக்கும், செண்பகத்திற்கும் பழக்கம் ஏற்பட்டு காதலித்து வந்ததாகவும், அவர்களுக்கு அடுத்த மாதம் 11–ந் தேதி திருமணம் நடத்த முடிவு செய்யப்பட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

    இந்தநிலையில் திடீரென உடல்நிலை பாதிக்கப்பட்டு திருச்சி ஆஸ்பத்திரியில் ஜெயதேவன் அனுமதிக்கப்பட்டார். இதனால் மனவருத்தம் அடைந்த செண்பகம் ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரம் வந்து, கோவில் பகுதியில் மயங்கி கிடந்தார்.

    அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் இதை கவனித்து, ராமேசுவரம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அப்போது அவர் வி‌ஷம் குடித்து இருந்தது தெரியவந்தது. அங்கு முதல் உதவி சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரியில் மேல்சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். போலீசாரின் விசாரணையில் பஸ்சில் வரும் வழியில் புதுக்கோட்டை பகுதியில் வைத்து செண்பகம் வி‌ஷம் குடித்தது தெரியவந்தது.

    செண்பகமும், ஜெயதேவனும் போலீஸ் பட்டாலியனில் பணியாற்றியபோது ராமேசுவரத்திற்கு பணிக்காக வந்துள்ளனர். அப்போதுதான் அவர்களுக்குள் பழக்கம் ஏற்பட்டுள்ளதாகவும், இதனால் ராமேசுவரத்திலேயே உயிரை விட துணிந்து அவர் வரும் வழியில் பஸ்சிலேயே வி‌ஷம் குடித்ததாக தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

    இந்த நிலையில் ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரியில் இருந்து சொந்த ஊருக்கு அழைத்து சென்று சிகிச்சை அளிக்க அவருடைய குடும்பத்தினர் செண்பகத்தை அழைத்து சென்று விட்டதாகவும் கூறப்படுகிறது.
    திருவண்ணாமலையில் ஆயுதபடை பெண் போலீஸ் தனது கையை கத்தியால் கிழித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    திருவண்ணாமலை:

    விழுப்புரத்தை சேர்ந்தவர் ஓவியா (வயது22). இவர், திருவண்ணாமலை ஆயுதபடை பிரிவில் போலீசாக பணிபுரிந்து வருகிறார். இவரது கணவர் குமரேசன். இவரும் விழுப்புரம் ஆயுதபடை பிரிவில் போலீஸ்காரராக பணிபுரிகிறார்.

    ஓவியா திருவண்ணாமலை வேங்கிக்கால் பகுதியில் வீடு வாடகைக்கு எடுத்து உறவினர்களுடன் வசித்து வருகிறார்.

    நேற்று வீட்டில் தனியாக இருந்த ஓவியா கத்தியால் தனது கையை கிழித்துக் கொண்டு மயங்கி கிடந்தார். வெளியே சென்றிருந்த உறவினர்கள் வீட்டிற்கு வந்ததும் ஓவியாவை பார்த்து அதிர்ச்சியடைந்தனர்.

    அவரை மீட்டு திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர கிசிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    திருவண்ணாமலை கிழக்கு போலீசார் மருத்துவமனைக்கு சென்று ஓவியாவிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஆயுதபடை பெண் போலீசாரான ஓவியா கடந்த 2017-ம் ஆண்டு போலீஸ் பணிக்கு சேர்ந்து அடிப்படை பயிற்சிகளை முடித்தவர். கடந்த சில வாரங்களுக்கு முன்பு தான் திருவண்ணாமலை ஆயுதபடை பிரிவுக்கு பணி மாறுதலாகி வந்ததாக கூறப்படுகிறது.

    போலீஸ் பணியில் சேர்ந்து சில மாதங்களே ஆன நிலையில் பெண் போலீஸ் தற்கொலைக்கு முயற்சி மேற்கொள்ள பணிச்சுமை காரணமா? அல்லது குடும்ப பிரச்சனையா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். #Tamilnews
    காதல் திருமணம் செய்த பெண் போலீஸ் குழந்தை இறந்து 4 மாதங்களுக்கு பிறகு தற்கொலைக்கு முயற்சி செய்துள்ள சம்பவம் குறித்து அவரது கணவர் மற்றும் உறவினர்களிடம் விசாரணை நடத்த போலீசார் முடிவு செய்துள்ளனர்.
    சேலம்:

    கிருஷ்ணகிரி மாவட்டம் குப்பம் ரோட்டை சேர்ந்தவர் சக்திவேல். இவர் சென்னையில் மெக்கானிக் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி தேன்மொழி (வயது 36). இவர்கள் இருவரும் காதல் திருமணம் செய்து கொண்டனர்.

    இந்த நிலையில் இவர்களுக்கு 5 வயதில் ஞானசாய் என்ற மகன் உள்ளான்.

    தேன்மொழி, திருப்பூர் மாவட்ட ஆயுதப்படை பிரிவில் போலீசாக பணியாற்றி வருகிறார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு அவர் மீண்டும் கர்ப்பம் தரித்தார்.

    இதனால் பிரசவத்திற்காக விடுமுறை எடுத்துக்கொண்டு கிருஷ்ணகிரி பழைய பேட்டையில் உள்ள தனது பெற்றோர் வீட்டிற்கு சென்றார்.

    பெற்றோர் வீட்டில் இருந்தப்படி அவர் அடிக்கடி மருத்துவமனைக்கு சென்று வயிற்றில் இருக்கும் சிசு நலமாக இருக்கிறதா? அதன் வளர்ச்சி எப்படி இருக்கிறது? என்பது குறித்து பரிசோதித்து வந்தார்.

    மேலும் சிசுவின் வளர்ச்சிக்கு தேவையான மருந்து, மாத்திரைகள், ஊட்டச்சத்துக்களும் சாப்பிட்டு வந்தார். நிறைமாத கர்ப்பிணியாக இருந்த தேன்மொழி கடந்த பிப்ரவரி மாதம் பிரசவ வலியால் அலறி துடித்தார். அவரை, பெற்றோர் கிருஷ்ணகிரியில் உள்ள ஒரு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு அழகான குழந்தை பிறந்தது.

    இந்த குழந்தை பிறந்து சிறிது நேரத்தில் இறந்து விட்டது. மயக்கம் தெளிந்த பிறகு குழந்தை எங்கே? என்று கேட்டார். மகளுக்கு ஏதாவது ஆகிவிடுமோ? என பயந்து குழந்தை இறந்ததை பற்றி கூறாமல் டாக்டர்கள் இங்குலேட்டரில் வைத்திருப்பதாக தெரிவித்தனர். எனினும் சந்தேகம் அடைந்து தேன்மொழி பல முறை அழுது கொண்டே கேட்டார். குழந்தை இறந்த வி‌ஷயத்தை பெற்றோர் தெரிவித்தனர்.

    இதனால் அதிர்ச்சி அடைந்த தேன்மொழி கதறி அழுதார். குழந்தை இறந்து விட்டதே கணவரிடம் என்ன? பதில் சொல்வேன் என கதறி அழுதார். அவருக்கு பெற்றோர் ஆறுதல் கூறினார்கள்.

    நேற்று மாலை தேன்மொழி பழையபேட்டையில் உள்ள தனது பெற்றோர் வீட்டில் வைத்து திடீரென தலையில் மண்எண்ணெயை ஊற்றி தீயை பற்ற வைத்தார். தீ மளமளவென உடல் முழுவதும் பரவி கொளுந்து விட்டு எரிந்தது. இதனால் வலி தாங்க முடியாமல் அலறி துடித்தார்.

    உறவினர்கள் அவரை மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். தேன்மொழியின் நிலைமை கவலைகிடமாக இருந்ததால் அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.

    பின்னர் மேல்சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டு அவருக்கு, டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

    இது குறித்து டாக்டர்கள் கூறுகையில், பெண் போலீஸ் தேன்மொழிக்கு தீக்காயம் அதிகமாக ஏற்பட்டுள்ளது. உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ள அவருக்கு தேவையான சிகிச்சைகளை அளித்து வருகிறோம் என்றனர்.

    பெண் போலீஸ் தீக்குளிப்பு சம்பவம் குறித்து போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறார்கள். குழந்தை இறந்து 4 மாதங்களுக்கு பிறகு அவர் தற்கொலை முயற்சி செய்துள்ள சம்பவம் பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தி உள்ளது. எனவே, அவரது கணவர் சக்திவேல் மற்றும் உறவினர்களிடம் விசாரணை நடத்த போலீசார் முடிவு செய்துள்ளனர்.

    பெண் போலீஸ் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் கடலூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து புதுநகர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கடலூர்:

    கடலூர் போலீஸ் குடியிருப்பில் வசித்து வருபவர் சத்தியசீலன், ஆயுதப்படை போலீஸ்காரர். இவரது மனைவி கவிதா (வயது 27). இவர் கடலூர் ஆயுதப்படையில் போலீசாக வேலை பார்த்து வருகிறார்.

    இன்று காலை வேலையை முடித்துவிட்டு கவிதா வீட்டுக்கு வந்தார். வீட்டில் தனியாக இருந்த கவிதா திடீரென வி‌ஷம் குடித்தார். மயங்கிய நிலையில் கிடந்த அவரை குடியிருப்பு பகுதியில் வசிப்பவர்கள் மீட்டு சிகிச்சைக்காக கடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இதுகுறித்து கவிதாவின் உறவினர்கள் கூறும்போது, பணிச்சுமை, தொடர் வேலைகாரணமாக கவிதா மன உளைச்சலில் இருந்ததாக தெரிகிறது. இதன் காரணமாக கவிதா தற்கொலைக்கு முயன்றிருக்கலாம் என சந்தேகிக்கிறோம் என்றனர்.

    இதுகுறித்து புதுநகர் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பெண் போலீஸ் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் கடலூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. #Tamilnews
    ×