search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கடலூரில் பெண்போலீஸ் வி‌ஷம் குடித்து தற்கொலை முயற்சி
    X

    கடலூரில் பெண்போலீஸ் வி‌ஷம் குடித்து தற்கொலை முயற்சி

    பெண் போலீஸ் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் கடலூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து புதுநகர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கடலூர்:

    கடலூர் போலீஸ் குடியிருப்பில் வசித்து வருபவர் சத்தியசீலன், ஆயுதப்படை போலீஸ்காரர். இவரது மனைவி கவிதா (வயது 27). இவர் கடலூர் ஆயுதப்படையில் போலீசாக வேலை பார்த்து வருகிறார்.

    இன்று காலை வேலையை முடித்துவிட்டு கவிதா வீட்டுக்கு வந்தார். வீட்டில் தனியாக இருந்த கவிதா திடீரென வி‌ஷம் குடித்தார். மயங்கிய நிலையில் கிடந்த அவரை குடியிருப்பு பகுதியில் வசிப்பவர்கள் மீட்டு சிகிச்சைக்காக கடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இதுகுறித்து கவிதாவின் உறவினர்கள் கூறும்போது, பணிச்சுமை, தொடர் வேலைகாரணமாக கவிதா மன உளைச்சலில் இருந்ததாக தெரிகிறது. இதன் காரணமாக கவிதா தற்கொலைக்கு முயன்றிருக்கலாம் என சந்தேகிக்கிறோம் என்றனர்.

    இதுகுறித்து புதுநகர் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பெண் போலீஸ் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் கடலூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. #Tamilnews
    Next Story
    ×