என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
திருவண்ணாமலையில் பெண் போலீஸ் தற்கொலை முயற்சி
Byமாலை மலர்16 July 2018 7:05 AM GMT (Updated: 16 July 2018 7:05 AM GMT)
திருவண்ணாமலையில் ஆயுதபடை பெண் போலீஸ் தனது கையை கத்தியால் கிழித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருவண்ணாமலை:
விழுப்புரத்தை சேர்ந்தவர் ஓவியா (வயது22). இவர், திருவண்ணாமலை ஆயுதபடை பிரிவில் போலீசாக பணிபுரிந்து வருகிறார். இவரது கணவர் குமரேசன். இவரும் விழுப்புரம் ஆயுதபடை பிரிவில் போலீஸ்காரராக பணிபுரிகிறார்.
ஓவியா திருவண்ணாமலை வேங்கிக்கால் பகுதியில் வீடு வாடகைக்கு எடுத்து உறவினர்களுடன் வசித்து வருகிறார்.
நேற்று வீட்டில் தனியாக இருந்த ஓவியா கத்தியால் தனது கையை கிழித்துக் கொண்டு மயங்கி கிடந்தார். வெளியே சென்றிருந்த உறவினர்கள் வீட்டிற்கு வந்ததும் ஓவியாவை பார்த்து அதிர்ச்சியடைந்தனர்.
அவரை மீட்டு திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர கிசிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
திருவண்ணாமலை கிழக்கு போலீசார் மருத்துவமனைக்கு சென்று ஓவியாவிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆயுதபடை பெண் போலீசாரான ஓவியா கடந்த 2017-ம் ஆண்டு போலீஸ் பணிக்கு சேர்ந்து அடிப்படை பயிற்சிகளை முடித்தவர். கடந்த சில வாரங்களுக்கு முன்பு தான் திருவண்ணாமலை ஆயுதபடை பிரிவுக்கு பணி மாறுதலாகி வந்ததாக கூறப்படுகிறது.
போலீஸ் பணியில் சேர்ந்து சில மாதங்களே ஆன நிலையில் பெண் போலீஸ் தற்கொலைக்கு முயற்சி மேற்கொள்ள பணிச்சுமை காரணமா? அல்லது குடும்ப பிரச்சனையா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். #Tamilnews
விழுப்புரத்தை சேர்ந்தவர் ஓவியா (வயது22). இவர், திருவண்ணாமலை ஆயுதபடை பிரிவில் போலீசாக பணிபுரிந்து வருகிறார். இவரது கணவர் குமரேசன். இவரும் விழுப்புரம் ஆயுதபடை பிரிவில் போலீஸ்காரராக பணிபுரிகிறார்.
ஓவியா திருவண்ணாமலை வேங்கிக்கால் பகுதியில் வீடு வாடகைக்கு எடுத்து உறவினர்களுடன் வசித்து வருகிறார்.
நேற்று வீட்டில் தனியாக இருந்த ஓவியா கத்தியால் தனது கையை கிழித்துக் கொண்டு மயங்கி கிடந்தார். வெளியே சென்றிருந்த உறவினர்கள் வீட்டிற்கு வந்ததும் ஓவியாவை பார்த்து அதிர்ச்சியடைந்தனர்.
அவரை மீட்டு திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர கிசிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
திருவண்ணாமலை கிழக்கு போலீசார் மருத்துவமனைக்கு சென்று ஓவியாவிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆயுதபடை பெண் போலீசாரான ஓவியா கடந்த 2017-ம் ஆண்டு போலீஸ் பணிக்கு சேர்ந்து அடிப்படை பயிற்சிகளை முடித்தவர். கடந்த சில வாரங்களுக்கு முன்பு தான் திருவண்ணாமலை ஆயுதபடை பிரிவுக்கு பணி மாறுதலாகி வந்ததாக கூறப்படுகிறது.
போலீஸ் பணியில் சேர்ந்து சில மாதங்களே ஆன நிலையில் பெண் போலீஸ் தற்கொலைக்கு முயற்சி மேற்கொள்ள பணிச்சுமை காரணமா? அல்லது குடும்ப பிரச்சனையா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். #Tamilnews
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X