என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "vice president poll"

    • துணை ஜனாதிபதி தேர்தல் அடுத்த மாதம் 9-ம் தேதி நடைபெறுகிறது.
    • பாராளுமன்றத்தில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும்.

    சென்னை:

    துணை ஜனாதிபதியாக இருந்த ஜெகதீப் தன்கர் கடந்த மாதம் 21-ந் தேதி திடீரென தனது பதவியை ராஜினாமா செய்தார்.

    தன்கர் ராஜினாமா செய்ததை தொடர்ந்து, புதிய துணை ஜனாதிபதியை தேர்வு செய்வதற்கான பணிகளை தேர்தல் ஆணையம் தொடங்கியது. அதன்படி, துணை ஜனாதிபதி தேர்தல் வரும் 9-ம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது.

    பாராளுமன்றத்தில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும், அதைத்தொடர்ந்து உடனே வாக்குகள் எண்ணப்பட்டு, முடிவு இன்றைய தினமே அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    துணை ஜனாதிபதி தேர்தலில் ஆளும் கட்சியும், எதிர்க்கட்சி கூட்டணியும் வேட்பாளர்களை அறிவித்துள்ளன. அதன்படி, காங்கிரஸ் இடம்பெற்றுள்ள இந்தியா கூட்டணியின் துணை ஜனாதிபதி வேட்பாளராக பி. சுதர்சன் ரெட்டி அறிவிக்கப்பட்டுள்ளார். அதேபோல், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் துணை ஜனாதிபதி வேட்பாளராக சி.பி.ராதாகிருஷ்ணன் அறிவிக்கப்பட்டுள்ளார். இரு வேட்பாளர்களின் வேட்புமனுக்களும் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன.

    இந்நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை இந்தியா கூட்டணியின் துணை ஜனாதிபதி வேட்பாளர் சுதர்சன் ரெட்டி இன்று சந்திக்க உள்ளார்.

    சென்னை தி.நகர் அக்கார்ட் ஓட்டலில் மாலை 5 மணிக்கு நடைபெறும் நிகழ்ச்சியில் இந்தியா கூட்டணி கட்சி தலைவர்களை சந்திக்கும் சுதர்சன் ரெட்டி துணை ஜனாதிபதி தேர்தலில் ஆதரவு திரட்டுகிறார்.

    • சி.பி.ராதாகிருஷ்ணன், 50 ஆண்டுகளுக்கும் மேலாக அரசியல் வாழ்வில் இருந்து வருகிறார்.
    • சி.பி.ராதாகிருஷ்ணன் கோவை தொகுதியில் 1998-ம் ஆண்டு போட்டியிட்டு முதல்முறையாக எம்.பியானார்.

    சி.பி.ராதாகிருஷ்ணன் துணை ஜனாதிபதி வேட்பாளராக தேர்வு செய்யப்பட்டு இன்று தமிழகத்துக்கே பெருமை சேர்த்துள்ளார். இந்தநிலைக்கு இவர் நேரடியாக வந்துவிடவில்லை. 50 வருட கடுமையான அரசியல் உழைப்பு, எளிமை, மக்களுக்கு செய்த சேவைகள் இன்று அவரை இன்று துணை ஜனாதிபதி நிலைக்கு உயர்த்தி உள்ளது.

    ஏற்கனவே துணை ஜனாதிபதியாக இருந்த ஜெகதீப் தன்கர், உடல்நலக்குறைவு காரணமாக தனது பதவியை சமீபத்தில் ராஜினாமா செய்தார். இதைத்தொடர்ந்து துணை ஜனாதிபதியை தேர்வு செய்வதற்கான தேர்தல் வருகிற செப்டம்பர் 9-ந் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் துணை ஜனாதிபதி வேட்பாளராக சி.பி.ராதாகிருஷ்ணன் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டு உள்ளது. பிரதமர் மோடி தலைமையிலான ஆட்சி மன்ற குழு கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

    மக்களவை மற்றும் மாநிலங்களவையில் தற்போது 781 எம்.பி.க்கள் உள்ளனர். துணை ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற 391 வாக்குகள் தேவை. தேசிய ஜனநாயக கூட்டணிக்கு 422 எம்.பி.க்களின் பலம் உள்ளதால், சி.பி.ராதாகிருஷ்ணனின் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது.

    அடுத்த துணை ஜனாதிபதியாக சி.பி.ராதாகிருஷ்ணன் தேர்ந்தெடுக்கப்பட்டால் அவர் அந்த பதவியை அலங்கரிக்கும் தமிழகத்தை சேர்ந்த 3-வது நபர் ஆவர். இதற்கு முன்பு நாட்டின் முதல் துணை ஜனாதிபதியாக (1952-1962) சர்வப்பள்ளி ராதாகிருஷ்ணனும், 7-வது துணை ஜனாதிபதியாக ஆர். வெங்கட்ராமனும்(1984-1987) இருந்துள்ளனர். பின்னர் அவர்கள் 2 பேரும் ஜனாதிபதியாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இவர்கள் 2 பேருக்கு பிறகு தற்போது தமிழகத்தை சேர்ந்த ஒருவர் துணை ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட உள்ளதால் ஒட்டுமொத்த தமிழகமும் மகிழ்ச்சியில் திளைத்துள்ளது.

    தற்போது 67 வயதாகும் சி.பி.ராதாகிருஷ்ணன், 50 ஆண்டுகளுக்கும் மேலாக அரசியல் வாழ்வில் இருந்து வருகிறார். அவர் கடந்து வந்த பாதை வருமாறு:-

    சி.பி.ராதாகிருஷ்ணன் சொந்த ஊர் திருப்பூர். கடந்த 1957-ம் ஆண்டு அக்டோபர் 20-ந் தேதி பொன்னுசாமி கவுண்டர்- ஜானகி அம்மாளுக்கு மகனாக பிறந்தார். இவர் வணிக நிர்வாகத்தில் இளநிலைப் பட்டம் பெற்றுள்ளார். கல்லூரி நாட்களில் டேபிள் டென்னிஸ் மற்றும் தடகள வீரராகவும் இருந்த அவர், கிரிக்கெட் மற்றும் கைப்பந்து விளையாட்டுகளிலும் மிகுந்த ஆர்வம் கொண்டவராக திகழ்ந்தார்.

    சி.பி.ராதாகிருஷ்ணன் தனது 16-வது வயதிலேயே ஆர்.எஸ்.எஸ். மற்றும் ஜன சங்கத்தில் தொண்டராக சேர்ந்து தனது பொது வாழ்க்கையை தொடங்கினார். அதன்பின்னர் 1974-ம் ஆண்டு பா.ஜ.க.வின் முன்னோடி அமைப்பான ஜனசங்கத்தில் மாநில நிர்வாக குழு உறுப்பினராகவும் இருந்தார்.1996-ம் ஆண்டு தமிழக பா.ஜ.க செயலராக இருந்தார்.

    சி.பி.ராதாகிருஷ்ணன் கோவை தொகுதியில் 1998-ம் ஆண்டு போட்டியிட்டு முதல்முறையாக எம்.பியானார். 1999-ம் ஆண்டு அதே தொகுதியில் போட்டியிட்டு மீண்டும் எம்.பியானார். கோவை தொகுதியில் மட்டும் 5 முறை போட்டியிட்டு 2 முறை வெற்றி பெற்றுள்ளார். அவர் எம்.பியாக பதவி வகித்த காலகட்டத்தில் பங்கு சந்தை முறைகேட்டை விசாரித்த பாராளுமன்ற குழு உள்பட பல்வேறு பாராளுமன்ற குழுக்களின் தலைவராகவும், உறுப்பினராகவும் இருந்து தனது பணியை சிறப்பாக செய்துள்ளார்.

    2004 முதல் 2007 வரையிலான காலகட்டத்தில் தமிழக பா.ஜ.க தலைவராக சி.பி.ராதாகிருஷ்ணன் இருந்தார். அப்போது அவர் நாட்டில் உள்ள அனைத்து நதிகளையும் இணைக்க வே்ணடும். பொது சிவில் சட்டத்தை அமல்படுத்த வேண்டும். பயங்கரவாதத்தை ஒழிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கன்னியாகுமரியில் இருந்து சென்னை வரை 93 நாட்கள் 19 ஆயிரம் கிலோ மீட்டர் தூரம் ரத யாத்திரையும் மேற்கொண்டார். இந்த ரத யாத்திரையானது பா.ஜ.க தமிழகத்தில் காலூன்றுவதற்கு மிக முக்கிய காரணமாக இருந்தது.

    2014-ல் மத்திய பா.ஜ.க ஆட்சிக்கு வந்ததும் சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு தேசிய கயிறு வாரிய தலைவர் பதவி அளிக்கப்பட்டது. இதுமட்டுமல்லாமல் பா.ஜ.க தேசிய செயலாளர், தேசிய நிர்வாக குழு உறுப்பினராகவும், 2020 முதல் 2022 வரை கேரள மாநில பா.ஜ.க மேலிட பொறுப்பாளர் என பல்வேறு பதவிகளையும் வகித்துள்ளார்.

    2023-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் சி.பி.ராதாகிருஷ்ணன் ஜார்க்கண்ட் மாநில கவர்னராக நியமிக்கப்பட்டார். 2024 ஜூலை மாதம் வரை ஒன்றரை ஆண்டு அவர் ஜார்க்கண்ட் மாநில கவர்னராக பதவி வகித்தார். அந்த காலகட்டத்தில் அவர் தெலுங்கானா, புதுச்சேரி கவர்னராக கூடுதல் பொறுப்பையும் கவனித்து வந்தார்.

    ஜார்க்கண்ட் மாநில கவர்னராக இருந்த போது சி.பி.ராதாகிருஷ்ணன், அந்த மாநிலத்தில் உள்ள 24 மாவட்டங்களுக்கும் சுற்றுப்பயணம் சென்று, அங்குள்ள அதிகாரிகள், மக்கள், தொழில் அதிபர்களை நேரில் சந்தித்து அவர்களிடம் பேசி, ஜார்க்கண்ட் மாநிலத்தில் பல்வேறு மாற்றங்களையும் கொண்டு வந்தார். அதிலும் குறிப்பாக ஜார்கண்ட் மாநிலத்தில் தீவிரவாத ஒழிப்பு நடவடிக்கையில் தனி கவனம் செலுத்தி அதனை ஒழிப்பதற்கான நடவடிக்கைளையும் மேற்கொண்டார்.

    அதன்பிறகு அவர் 2024-ம் ஆண்டு ஜூலை 31-ந் தேதி மராட்டிய கவர்னராக நியமிக்கப்பட்டார். தற்போதும் மராட்டிய கவர்னராக பதவி வகித்து வருகிறார். அங்கு பல்வேறு தரப்பினரை சந்தித்து மாநிலத்தின் வளர்ச்சிக்கு பல்வேறு நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறார். தனது அரசியல் வாழ்க்கையில் கரைபடியாத கரங்களுக்கு சொந்தக்காரர் என்ற பெருமையையும் பெற்றவர் சி.பி.ராதாகிருஷ்ணன்.

    பா.ஜ.க மற்றும் ஆர்.எஸ்.எஸ்சில் தீவிரமாக செயல்பட்டாலும், அரசியல் ரீதியாக மாறுபட்ட கொள்கைகளை கொண்டிரு ந்தாலும் பிற கட்சி தலைவர்களுடன் நட்புறவுடன் பழககூடியவர். அனைத்து தரப்பினரையும் அரவணைத்து செல்லக்கூடியவர் என்பதால் அவருக்கு தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் துணை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்க ப்பட்டுள்ளது.

    பிரதமர் மோடி தலைமையில் நடந்த கூட்டத்திலும் சி.பி.ராதாகிருஷ்ண னின் அரசியல் செயல்பாடுகள், கட்சியில் இருந்தபோது அவர் மேற்கொண்ட நடவடிக்கைகள், கட்சியின் வளர்ச்சிக்காக பாடுபட்டது, ஜார்க்கண்ட் கவர்னராக இருந்தபோது அங்குள்ள அனைத்து மாவட்டங்களுக்கும் நேரில் சென்று அதிகாரிகள், மக்களை சந்தித்து குறைகளை நிவர்த்தி செய்து மாற்றத்தை ஏற்படுத்தியது என பல்வேறு விஷயங்கள் விவாதிக்கப்பட்டு, அவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

    கூட்டணி கட்சியினர் உற்சாகம்

    சி.பி.ராதாகிருஷ்ணனின் தேர்வு அரசியல் கோணத்திலும் பார்க்கப்படுகிறது. தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் அ.தி.மு.க., பா.ஜ.க கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன. இந்தநிலையில் துணை ஜனாதிபதி வேட்பாளராக தமிழர் அறிவிக்கப்பட்டுள்ளது அ.தி.மு.க. மற்றும் பா.ஜ.க கூட்டணி கட்சி நிர்வாகிகள், தொண்டர்களுக்கு உற்சாகத்தை கொடுத்துள்ளது.

    ஏனென்றால் சி.பி.ராதாகிருஷ்ணன் கொங்கு மண்டலத்தை சேர்ந்தவர். கொங்கு மண்டலத்தை சேர்ந்த ஒருவர் நாட்டின் துணை ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளது கொங்கு மண்டல மக்கள் மட்டுமின்றி தமிழகம் முழுவதும் உள்ள மக்களிடம் மிகுந்த மகிழ்ச்சியை கொடுத்துள்ளது. இதன்மூலம் தமிழகத்தில் தங்களுக்கு செல்வாக்கு மேலும் உயரும் என்றும், சட்டசபை தேர்தலில் வெற்றி வாய்ப்பு இன்னும் பிரகாசமாக இருக்கும் என பா.ஜ.கவினர் கருதுகின்றனர்.

    • துணை ஜனாதிபதி பதவிக்கான தேர்தல் செப்டம்பர் 9-ம் தேதி நடைபெறுகிறது
    • தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒருவர் குடியரசு துணைத்தலைவர் வேட்பாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

    துணை ஜனாதிபதி பதவிக்கான தேர்தல் செப்டம்பர் 9-ம் தேதி நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது.

    தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் துணை ஜனாதிபதி பதவிக்கு சிபி ராதாகிருஷ்ணன் வேட்பாளராக தேர்வு செய்யப்பட்டார்.

    இந்நிலையில், துணை ஜனாதிபதி வேட்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்தார்.

    இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "தேசிய ஜனநாயகக் கூட்டணியின் குடியரசுத் துணைத் தலைவர் வேட்பாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள மாண்புமிகு ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன் அவர்களுக்கு எனது இதயங்கனிந்த வாழ்த்துகள்.

    பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவரும், மகாராஷ்டிர மாநில ஆளுநர் மாண்புமிகு சி.பி. ராதாகிருஷ்ணன் அவர்களின் பொது சேவைக்கும், மக்கள் மீதான அர்ப்பணிப்புமிக்க சமூக செயற்பாடுகளுக்கும் கிடைத்த மணிமகுடமாகும்.

    தேசிய ஜனநாயகக் கூட்டணியின் சார்பில் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒருவரைக் குடியரசு துணைத்தலைவர் வேட்பாளராக தேர்ந்தெடுத்தமைக்கு மாண்புமிகு பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கும், பாரதிய ஜனதா கட்சியின் மூத்தத் தலைவர்களுக்கும், பாரதிய ஜனதா கட்சியின் தேசிய தலைவருமான மாண்புமிகு ஜேபி நட்டா அவர்களுக்கும் எனது மனமார்ந்த நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.

    • துணை ஜனாதிபதி தேர்தல் செப்டம்பர் 9-ம் தேதி நடைபெறும்.
    • தே.ஜ.கூட்டணி சார்பில் துணை ஜனாதிபதிக்கு சி.பி.ராதாகிருஷ்ணன் வேட்பாளராக தேர்வு செய்யப்பட்டார்.

    புதுடெல்லி:

    துணை ஜனாதிபதி பதவிக்கான தேர்தல் செப்டம்பர் 9-ம் தேதி நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது.

    தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் துணை ஜனாதிபதி பதவிக்கு சிபி ராதாகிருஷ்ணன் வேட்பாளராக தேர்வு செய்யப்பட்டார்.

    1957 அக்டோபர் 20-ல் திருப்பூரில் பிறந்தார்.

    இளம் வயதில் ஆர்.எஸ்.எஸ்., ஜன சங்கத்தில் பணியாற்றினார். பி.பி.ஏ. முடித்துள்ளார்.

    சி.பி.ராதாகிருஷ்ணன் கோவை தொகுதியில் 5 முறை போட்டியிட்டு இரு முறை வெற்றி பெற்றுள்ளார்.

    கோவையில் பா.ஜ.க. வலுவாகக் காலூன்றியபோது முக்கிய முகமாக இருந்தார்.

    2004 முதல் 2006 வரை தமிழ்நாடு மாநில பா.ஜ.க. தலைவராக பதவி வகித்தார்.

    அப்போது கன்னியாகுமரி முதல் சென்னை வரை யாத்திரை மேற்கொண்டார்.

    2014-ல் பா.ஜ.க. மத்தியில் ஆட்சிக்கு வந்த பிறகு சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு தேசிய கயிறு வாரிய தலைவர் பதவி வழங்கப்பட்டது.

    பா.ஜ.க. தேசிய செயலாளர், தேசிய நிர்வாக குழு உறுப்பினர், கேரள மாநில பாஜக பொறுப்பாளர் உள்ளிட்ட பதவிகளை வகித்துள்ளார்.

    எஸ்.ராதாகிருஷ்ணன், ஆர்.வெங்கட்ராமனுக்கு பின், துணை ஜனாதிபதியாக தேர்வு செய்யப்பட உள்ள மூன்றாவது தமிழர்.

    தெலுங்கானா, புதுச்சேரி மாநிலங்களின் ஆளுநராக கூடுதல் பொறுப்பு வகித்தார்.

    தற்போது மகாராஷ்டிரா மாநிலத்தின் ஆளுநராக பதவியில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • பாராளுமன்றத்தின் இரு அவைகளும் சேர்ந்து 788 எம்.பி.க்களின் அனுமதிக்கப்பட்ட பலத்தைக் கொண்டுள்ளன.
    • ஆகஸ்ட் 10-ம் தேதியுடன் பதவிக்காலம் முடிவடையும் வெங்கையா நாயுடுவுக்குப் பிறகு அவர் பதவியேற்க வாய்ப்புள்ளது.

    இந்தியாவின் அடுத்த துணைக் குடியரசுத் தலைவரைத் தேர்ந்தெடுப்பதற்கான வாக்குப்பதிவு இன்று காலை 10 மணிக்குத் தொடங்கியது, இதில் முதலில் பிரதமர் நரேந்திர மோடி வாக்களித்தார். மாலை 5 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும் நிலையில், அதனைத் தொடர்ந்து வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.

    இந்த தேர்தலில், தேசிய ஜனநாயகக் கூட்டணியின் வேட்பாளரும், மேற்கு வங்க முன்னாள் ஆளுநருமான ஜக்தீப் தன்கர் (71), கூட்டு எதிர்க்கட்சி வேட்பாளர் மார்கரெட் ஆல்வாவை (80) ஆகியோர் எதிர்த்துப் போட்டியிடுகின்றனர்.

    ஆளும் பாஜக மக்களவையில் அறுதிப்பெரும்பான்மையையும், மாநிலங்களவையில் 91 உறுப்பினர்களையும் கொண்டுள்ள நிலையில், தனது போட்டியாளரைவிட தன்கருக்கு அதிகளவில் ஆதரவு பெற்றுள்ளார். ஆகஸ்ட் 10-ம் தேதியுடன் பதவிக்காலம் முடிவடையும் வெங்கையா நாயுடுவுக்குப் பிறகு அவர் பதவியேற்க வாய்ப்புள்ளதாக கருதப்படுகிறது.

    மக்களவை மற்றும் மாநிலங்களவையின் அனைத்து எம்.பி.க்களும், நியமன உறுப்பினர்கள் உட்பட, துணை ஜனாதிபதி தேர்தலில் வாக்களிக்க உரிமை உள்ளது.

    பாராளுமன்றத்தின் இரு அவைகளும் சேர்ந்து 788 எம்.பி.க்களின் அனுமதிக்கப்பட்ட பலத்தைக் கொண்டுள்ளன. இதில் மேல்சபையில் எட்டு காலியிடங்கள் உள்ளன. எனவே, இந்த தேர்தலில் 780 எம்.பி.க்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.

    ×