search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "vellimalai murugan temple"

    • வேளிமலை முருகன் கோவிலில் வைகாசி விசாக திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
    • 2-ந்தேதி குளத்தில் சாமிகளுக்கு ஆராட்டு நிகழ்ச்சி நடக்கிறது.

    தக்கலைக்கு அருகே உள்ள குமாரகோவிலில் பிரசித்தி பெற்ற வேளிமலை முருகன் கோவில் உள்ளது. குமரபருவத்தில் வேளிமலைக்கு வந்த முருகபெருமான் வள்ளிதேவியை காதலித்து திருமணம் செய்ததாக ஐதீகம். எனவே, இந்த கோவிலில் குடிகொண்டுள்ள முருகபெருமான் குமாரசாமி என அழைக்கப்படுகிறார். இந்த கோவிலில் ஆண்டுதோறும் வைகாசி மாதம் விசாக திருவிழா நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டுக்கான வைகாசி விசாக திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    இதையொட்டி நேற்று காலையில் சாமிக்கு தீபாராதனையும், அதனைதொடர்ந்து கோவில் கொடிமரத்திற்கு தந்திரி அத்தியறமடம் நாராயணரு ராமரு தலைமையில் சிறப்பு பூஜைகள் நடந்தது. பின்னர் காலை 9.40 மணிக்கு கோவில் கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டது. நிகழ்ச்சியில் கோவில் மேலாளர் மோகனகுமார், பா.ஜனதா மாவட்ட துணைத்தலைவர் குமரி ப.ரமேஷ், கோவில் திருவிழா கமிட்டி காப்பாளர் பிரசாத், தலைவர் சுனில்குமார், பொருளாளர் செந்தில்குமார் உள்பட திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

    விழா நாட்களில் தினமும் காலையில் ஸ்ரீபூதபலி, கலசபூஜை, கலச அபிஷேகம், காலை மற்றும் இரவில் சாமியும், தேவியும் பூப்பல்லக்கு, மயில், கிளி ஆகிய வாகனங்களில் எழுந்தருளி பவனி வருதல் நிகழ்ச்சி நடக்கிறது.

    விழாவின் வருகிற 31-ந்தேதி இரவு 9 மணிக்கு சாமி வெள்ளி குதிரை வாகனத்தில் எழுந்தருளி பவனி வரும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

    9-ம் நாளான அடுத்த மாதம் (ஜூன்) 1-ந்தேதி காலை 8 மணிக்கு தேரோட்டம் நடக்கிறது. இதில் சாமியும், தேவியும் ஒரு தேரிலும், கணபதி மற்றொரு தேரிலும் எழுந்தருளி பவனி வரும் நிகழ்ச்சி நடக்கிறது.

    10-ம் நாளான 2-ந்தேதி காலை 10 மணிக்கு கோவில் குளத்தில் சாமிகளுக்கு ஆராட்டு நிகழ்ச்சி நடக்கிறது.

    விழா ஏற்பாடுகளை குமரி மாவட்ட கோவில்களின் இணை ஆணையர் கவிதா பிரியதர்ஷினி செய்து வருகிறார்.

    • பவுர்ணமி பூஜையில் முருகபெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் சிறப்பு ராஜ அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடைபெற்றது.
    • சிவ சன்னதியில் மாதந்தோறும் திருவாசகம் முற்றோதுதல் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது

    ஏர்வாடி:

    நெல்லை மாவட்டம் புலவன்குடியிருப்பு அருகே ஓம் ஸ்ரீபழனிவேல் முருகன் ஆலயம் பிரசித்தி பெற்ற திருத்தலமாக உருவெடுத்து வருகிறது.

    இந்த ஆலயம் சேரன்மகாதேவி- களக்காடு சாலை மார்க்கத்தில் புலவன் குடியிருப்பு அரசன் நகரில் அமைந்துள்ளது.

    இந்த ஆலயத்தில் மாதந்தோறும் பவுர்ணமி பூஜை மிக சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நேற்று நடைபெற்ற பவுர்ணமி பூஜையில் முருகபெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் சிறப்பு ராஜ அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடைபெற்றது. அதன்பின்பு பக்தர்களுக்கு அன்ன தானம் வழங்கப்பட்டது. இக்கோவில் வளாகத்தில் ஸ்ரீபிங்களஷேன கால பைரவர் காமாட்சி அம்பாள் சமேத வெள்ளிமலை நாதர் சன்னதி அமைந்துள்ளது. சிவ சன்னதியில் மாதந்தோறும் திருவாசகம் முற்றோதுதல் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. தினமும் காலை 6 மணி முதல் 12.30 மணி வரையிலும், மாலை 5.30 மணி முதல் 8.30 மணி வரையிலும் நடை திறந்து பூஜை கைங்கேரியங்கள் நடைபெற்று வருகிறது. இந்த கோவிலை முருகனடியார் கணேஷ்குமார் நிர்வகித்து வருகிறார். இந்த கோவிலில் பிரார்த்தனைகள் அனைத்தும் உடனடியாக நிறைவேறி வருவதாக பக்தர்கள் கருத்து தெரிவித்தனர்.

    வெள்ளிமலை பாலசுப்பிரமணிய சுவாமி கோவில் 60-வது கந்த சஷ்டி விழா கடந்த 8-ந் தேதி தொடங்கி நடந்து வருகிறது. சிகர நிகழ்ச்சியாக சூரசம்ஹாரம் நாளை நடக்கிறது.
    வெள்ளிமலை பாலசுப்பிரமணிய சுவாமி கோவில் 60-வது கந்த சஷ்டி விழா கடந்த 8-ந் தேதி தொடங்கி நடந்து வருகிறது.

    8-ந் தேதி காலை கணபதி ஹோமத்துடன் விழா தொடங்கியது. மாலையில் திருவிளக்கு பூஜை, இரவில் கலைநிகழ்ச்சிகள் நடந்தன. தொடர்ந்து விழா நாட்களில் கிரிவலம், சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை, பஜனை, கலைநிகழ்ச்சிகள் நடந்து வருகின்றன.

    5-ம் திருவிழாவான இன்று காலை 5 மணிக்கு திருப்பள்ளி எழுச்சி, 5.30 மணிக்கு கிரிவலம், 7.30 மணிக்கு பஜனை, 11 மணிக்கு அபிஷேகம், 11.30 மணி முதல் ஒரு மணி வரை கந்தபுராண தொடர் விரிவுரை, பகல் ஒரு மணிக்கு தீபாராதனை நடந்தது.

    மாலை 6.30 மணிக்கு தீபாராதனை, 6.45 மணிக்கு மாணவ-மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள், இரவு 7.45 மணிக்கு தீபாராதனை உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடக்கின்றன.

    விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹார விழா நாளை (13-ந் தேதி) நடக்கிறது. இதையொட்டி காலை 5 மணிக்கு திருப்பள்ளி எழுச்சி, 5.30 மணிக்கு கிரிவலம், 7.30 மணிக்கு தீபாராதனை, 8 மணிக்கு பஜனை, 8.30 மணி முதல் பகல் 12.30 மணி வரை கந்தபுராண தொடர் விரிவுரை, 12.30 மணி முதல் மாலை 2 மணி வரை நாதஸ்வர கச்சேரி ஆகிய நிகழ்ச்சிகளும் நடக்கின்றன.

    மாலை 4 மணிக்கு சுவாமி சூரசம்ஹாரத்துக்கு குதிரை வாகனத்தில் எழுந்தருளல், மாலை 6.15 மணிக்கு சூரசம்ஹாரம், 6.30 மணிக்கு அபிஷேகம், இரவு 7.30 மணிக்கு புஷ்பாபிஷேகம், 8 மணிக்கு தீபாராதனை, இரவு 8.30 மணிக்கு சுவாமி மயில் வாகனத்தில் உலா வருதல் நிகழ்ச்சிகள் நடக்கின்றன.

    ×