search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "UN Organization"

    • போர் 11-வது நாளாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது
    • இஸ்ரேல் பிரதமருடன் புதின் தொலைபேசியில் விவரமாக பேசியுள்ளார்

    பாலஸ்தீன ஹமாஸ் அமைப்பை முற்றிலும் ஒழிக்க போவதாக கூறி போர் தொடுத்திருக்கும் இஸ்ரேல், பாலஸ்தீனத்தின் காசா பகுதியில் அவர்கள் மறைவிடங்களில் தொடர் தாக்குதல் நடத்தி வருகிறது. போர் 11-வது நாளாக தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில் இதை முடிவுக்கு கொண்டு வர ரஷியா தீவிரம் காட்டி வருகிறது.

    இது குறித்து ரஷியா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

    அரசியல் மற்றும் பேச்சுவார்த்தை மூலமாக இந்த போரை விரைவில் முடிவுக்கு கொண்டு வர அதிபர் விளாடிமிர் புதின் விரும்புகிறார். இது குறித்து அவர் இஸ்ரேல் அதிபர், அரபு நாடுகளின் தலைவர்கள், ஈரான் நாட்டு அதிபர் ஆகியோருடன் பேச்சு வார்த்தை நடத்தினார். நேற்று, அவர் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகுவுடன் தொலைபேசியில் பேச்சு வார்த்தை நடத்தினார். இது மட்டுமின்றி மத்திய தரைகடல் பகுதி தலைவர்களுடனும் அவர் தொடர்பில் உள்ளார். ஈரான், எகிப்து மற்றும் சிரியா ஆகிய நாடுகளின் தலைவர்களுடன் புதின் நடத்திய பேச்சு வார்த்தை விவரங்களை இஸ்ரேல் பிரதமருடன் அவர் பகிர்ந்து கொண்டார். மனிதாபிமான அடிப்படையில் காசாவில் உள்ள மக்களுக்கு அளிக்கப்பட வேண்டிய உதவிகள் தடையின்றி கிடைக்க தற்காலிக போர் நிறுத்தம் தேவை என புதின் கருதுகிறார்.

    இவ்வாறு அந்த அறிக்கை தெரிவிக்கிறது.

    இந்த அறிக்கையில் ஐ.நா. கூட்டமைப்பின் பாதுகாப்பு சபை முன் ரஷியா முன்மொழிய கொண்டு வந்த தீர்மானம் குறித்து எதுவும் குறிப்பிடப்படவில்லை.

    இஸ்ரேல் ஹமாஸ் போர் விரைவில் முடிவுக்கு வருவது நல்லது என்பதால் புதினின் முயற்சியை அரசியல் விமர்சகர்களில் ஒரு சாரார் ஆதரிக்கின்றனர். தனது அண்டை நாடான உக்ரைன் மீது ரஷியா நடத்திய ஆக்ரமிப்பு மற்றும் அது தொடர்பாக இரு நாடுகளுக்கும் நடைபெறும் போரினால் ஏற்பட்டுள்ள உயிரிழப்புகள் மற்றும் பொருளாதார சீரழிவு குறித்து உலக நாடுகளின் கவனத்தை திசைதிருப்பும் முயற்சியாகவும் மற்றுமொரு சாரார் ரஷியாவின் இந்த முயற்சியை பார்க்கின்றனர்.

    • தற்போது வரை இப்போரில் இரு தரப்பிலும் 1500க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனர்
    • இந்தியா இரு நாடுகளுக்கும் நட்பு நாடாக இருந்து வருகிறது

    கடந்த சனிக்கிழமையன்று காலை இஸ்ரேல் மீது பாலஸ்தீன பயங்கரவாத அமைப்பான ஹமாஸ், திடீர் தாக்குதலை நடத்தியது. இதில் ஏராளமான இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டனர். இதற்கு பதிலடியாக ஹமாஸ் அமைப்பின் மீது இஸ்ரேல் போர் தொடுப்பதாக அறிவித்து பாலஸ்தீன எல்லை பகுதியான காசாவில் ஹமாஸ் பயங்கரவாதிகளை வேட்டையாடி வருகிறது.

    தற்போதைய நிலவரப்படி இரு தரப்பிலும் 1500க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். ஹமாஸ் அமைப்பை அழிக்கும் வரை தாக்குதலை நிறுத்த போவதில்லை என இஸ்ரேல் உறுதிபட தெரிவித்துள்ளது. இப்போரில் அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் இஸ்ரேலை ஆதரிக்க, மத்திய கிழக்கு நாடுகள் இப்போருக்கு இஸ்ரேலை குற்றம் சாட்டியுள்ளன.

    இந்நிலையில், இந்தியாவிற்கான பாலஸ்தீன தூதர் அபு அல்ஹைஜா (Abu Alhaija) இத்தாக்குதல் குறித்து கருத்து தெரிவித்தார்.

    அப்போது அவர் கூறியதாவது:

    மேற்கு கரை பகுதியில் இஸ்ரேல் ஆக்கிரமித்ததன் பதில் நடவடிக்கையே ஹமாஸ் தாக்குதல். பாலஸ்தீன பகுதிகளில் உள்ள ஆக்ரமிப்பை இஸ்ரேல் நிறுத்தி கொண்டால் இஸ்ரேல் மீதான தாக்குதல்களும் நிற்கும். இந்த போருக்கு சர்வதேச நாடுகளும் ஒரு காரணம். ஐக்கிய நாடுகள் சபை பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக 800க்கும் மேற்பட்ட தீர்மானங்களை இயற்றியது. ஆனால், இஸ்ரேல் அத்தீர்மானங்களின்படி நடந்து கொள்ளவில்லை. இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனத்திற்கும் இந்தியா ஒரு நட்பு நாடு. எனவே இந்தியா இப்பிரச்சனையில் தலையிட்டு இரு நாடுகளுக்கிடையே தூதுவராக செயல்பட்டு ஒரு சுமூக முடிவு எட்ட முயற்சி செய்ய வேண்டும் என விரும்புகிறேன்.

    இவ்வாறு அல்ஹைஜா கூறினார்.

    ×