search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "tourists happy"

    • எதிர்பாராத சுற்றுலா பயணிகளின் வருகையால் சிறு குறு வியாபாரிகள் மகிழ்ச்சியடைந்தனர்.
    • பல முக்கிய இடங்களில் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது.

    கொடைக்கானல்:

    கொடைக்கானலில் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக இடைவிடாத கன மழை கொட்டித் தீர்த்தது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியதோடு வியாபாரிகளும் கடுமையாக பாதிக்கப்பட்டனர். சுற்றுலா பயணிகளின் வருகையும் குறைந்ததாலும் வழக்கமாக தீபாவளி பொருட்கள் வாங்க கூட மக்கள் வெளியே வர முடியாத நிலை ஏற்பட்டதாலும் பெரும்பாலான கடைகள் வெறிச்சோடி காணப்பட்டன.

    இந்நிலையில் கடந்த 2 நாட்களாக மழையின் தீவிரம் படிப்படியாக குறைந்தது. நேற்று மழை இல்லாத போதும் இதமான சீதோஷ்ணம் நிலவியது. வார இறுதிநாள் மற்றும் தீபாவளி விடுமுறைக்காக சுற்றுலாப்பயணிகள் அதிக அளவில் குவிந்தனர்.

    இதனால் கொடைக்கானலில் வெறிச்சோடி காணப்பட்ட அனைத்து சுற்றுலா இடங்களிலும் மக்கள் கூட்டம் அதிக அளவில் காணப்பட்டது. குறிப்பாக பிரையண்ட் பூங்கா, ஏரிச்சாலைப்பகுதிகளில் அதிக அளவில் சுற்றுலாப்பயணிகள் குவிந்தனர்.

    அங்கு சைக்கிள் சவாரி, குதிரை சவாரி, படகு சவாரி செய்து உற்சாகம் அடைந்தனர். எதிர்பாராத சுற்றுலா பயணிகளின் வருகையால் சிறு குறு வியாபாரிகள் மகிழ்ச்சியடைந்தனர்.

    மேலும் மழையும் குறைந்ததால் மக்கள் தங்கள் வீட்டை விட்டு வெளியேறி பண்டிகைக்கு தேவையான பொருட்களை வாங்க குவிந்தனர். இதனால் வியாபாரம் களைகட்டியது. பல முக்கிய இடங்களில் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது.

    ஊட்டி கேர்ன்ஹில் வனப்பகுதியில் சீரமைக்கப்பட்ட தொங்கு பாலம் திறக்கப்பட்டு உள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.
    ஊட்டி:

    ஊட்டியில் உள்ள கேர்ன்ஹில் வனப்பகுதியில் சிறுத்தைப்புலி, கடமான், காட்டெருமை, மலபார் அணில், நீலகிரி லங்கூர் குரங்கு உள்ளிட்ட வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன. இந்த பகுதி நீலகிரி மாவட்ட வனத்துறை மூலம் சூழல் சுற்றுலாவாக செயல்பட்டு வருகின்றது.

    அங்கு வரும் சுற்றுலா பயணிகளை கவருவதற்காக சால்வியா, மேரிகோல்டு போன்ற மலர் செடிகள் நடவு செய்யப்பட்டு பூங்கா அமைக்கப்பட்டு உள்ளது. பூங்கா வளாகத்தில் சுற்றுலா பயணிகள் தங்குவதற்கு இரண்டு தங்கும் விடுதிகள், அதன் முன்பு காட்டெருமை, சிறுத்தைப்புலி, புலி, கடமான் ஆகிய வனவிலங்குகளின் உருவபொம்மைகள் தத்ரூபமாக காட்சிக்கு வைக்கப்பட்டு உள்ளது.

    கேர்ன்ஹில் வனப்பகுதியில் பொருள் விளக்கம் அமைக்கப்பட்டு உள்ளது. அங்கு நீலகிரி வரையாடு, புள்ளி மான், நீலகிரி லங்கூர் குரங்கு, சிறுத்தைப்புலி ஆகிய வனவிலங்குகளின் மாதிரிகள் பதப்படுத்தி காட்சிக்கு வைக்கப்பட்டு உள்ளன. அந்த வனப்பகுதிக்குள் 1½ கிலோ மீட்டர் தூரம் அடர்ந்த மரங்களுக்கு நடுவே சுற்றுலா பயணிகள் நடந்து செல்கிறார்கள். மரங்களுக்கு நடுவில் சுற்றுலா பயணிகளை மகிழ்விப்பதற்காக தொங்கு பாலம் ஒன்று அமைக்கப்பட்டு உள்ளது.

    இதற்கிடையே கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு தொங்கு பாலத்தின் அடிப்பகுதியில் பொருத்தப்பட்டு இருந்த பலகைகள் பழுதடைந்து கீழே விழுந்தன. இதனால் சுற்றுலா பயணிகள் தொங்கு பாலத்தில் நடந்து செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. பின்னர் முன்எச்சரிக்கை நடவடிக்கையாக தொங்கு பாலத்தில் சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டது. அதன் இருபுறங்களிலும் உள்ள கதவுகள் பூட்டு போடப்பட்டது. அதன் காரணமாக அங்கு வரும் சுற்றுலா பயணிகள் மற்றும் அவர்களது குழந்தைகள் தொங்கு பாலத்தில் செல்ல முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

    அதனை தொடர்ந்து பழுதடைந்து காணப்படும் தொங்கு பாலத்தை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டு வந்தது. இதையடுத்து வனத்துறையினர் கீழே விழுந்த மர பலகைகளுக்கு பதிலாக, புதிய பலகைகளை பொருத்தி சீரமைத்து உள்ளனர். மேலும் தொங்கு பாலம் பொலிவு இல்லாமல் காணப்பட்டதால், சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் வர்ணம் பூசப்பட்டு இருக்கிறது. தற்போது சுற்றுலா பயணிகள் பயன்பாட்டுக்காக தொங்கு பாலம் திறந்து விடப்பட்டு உள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்து இருக்கின்றனர்.
    கொடைக்கானலில் சாரல் மழையில் நனைந்தபடியே சுற்றுலா பயணிகள் உற்சாகமாக வலம் வந்தனர்.
    கொடைக்கானல்:

    மலைகளின் இளவரசியான கொடைக்கானலில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் வனப்பகுதிகளில் புதிய அருவிகள் உருவாகியுள்ளன. எங்கும் பசுமையாக கண்ணை கவரும் வண்ணம் காட்சியளிக்கிறது.

    நீண்ட நாட்களுக்கு பிறகு கொடைக்கானலில் பெய்து வரும் தொடர் மழையால் கேரட், பீன்ஸ், சவ்சவ், காளிபிளவர், உருளைக்கிழங்கு உள்ளிட்ட காய்கறிகள் செழித்து வளர தொடங்கியுள்ளன.

    இதனால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். நேற்று பகல் பொழுதில் வெயில் அடித்தபோதும் மாலையில் தொடங்கி இரவு முழுவதும் சாரல் மழை பெய்தது.

    தற்போது தொடர் விடுமுறை என்பதால் கொடைக்கானலில் அதிக அளவு சுற்றுலா பயணிகள் வந்துள்ளனர். கோக்கர்ஸ் வாக், பிரையண்ட் பூங்கா, தூண்பாறை, குணாகுகை, பைன் பாரஸ்ட் ஆகிய இடங்களில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலை மோதியது.

    சாரல் மழையில் நனைந்தபடியே சுற்றுலா இடங்களை கண்டு களித்தனர். மேலும் நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள நட்சத்திர ஏரியில் ஆனந்தமாக படகு சவாரி செய்து மகிழ்ந்தனர். சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்ததால் ஓட்டல், விடுதி உரிமையாளர்கள், வியாபாரிகள் மகிழ்ச்சியடைந்தனர்.

    ஆப் சீசன் தொடங்கியுள்ள நிலையில் இதமான சீதோஷ்ணம் நிலவி வருவதால் ஆனந்தமாக வலம் வர தொடங்கியுள்ளனர்.

    குற்றாலம் அருவிகளிலும் வெள்ளம் குறைந்ததால் 5 நாட்களுக்கு பின்னர் சுற்றுலாப் பயணிகள் குளிக்க போலீசார் அனுமதி அளித்தனர். #courtallamfalls
    தென்காசி:

    தென்மேற்கு பருவ மழையின் போது நெல்லை மாவட்டம் குற்றாலத்தில் ஆண்டுதோறும் ஜூன் மாத தொடக்கத்தில் சீசன் ஆரம்பமாகும். தொடர்ந்து சீசன் ஆகஸ்டு மாதம் இறுதி வரை ரம்மியமாக இருக்கும். சில ஆண்டுகள் செப்டம்பர் மாதம் வரை சீசன் நீடிப்பதுண்டு. இந்த காலங்களில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து குற்றாலம் வரும் சுற்றுலாப் பயணிகள் அருவிகளில் குளித்து சீசனை அனுபவிப்பார்கள்.

    இந்த ஆண்டு குற்றால சீசன் கடந்த மே மாதம் இறுதியில் தொடங்கியது. இதனால் சுற்றுலாப் பயணிகள் குற்றாலத்தில் குவிய தொடங்கினர். தொடர்ந்து சீசன் களைகட்டியது. தற்போது வரை அனைத்து அருவிகளிலும் தண்ணீர் தொடர்ந்து விழுந்து கொண்டே இருக்கிறது. அவ்வப்போது மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பலத்த மழை பெய்ததால் அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

    இந்நிலையில் கேரளாவில் பெய்த கனமழையினால் கடந்த ஒரு வாரத்துக்கு மேலாக குற்றாலத்தில் பலத்த மழை பெய்தது. இதனால் குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. குற்றால மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம், புலியருவி ஆகிய அனைத்து அருவிகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது. தொடர்ந்து 5 நாட்களாக மழை பெய்து வந்ததால் அருவிகளில் வெள்ளப்பெருக்கு குறையவில்லை. இதனால் சுற்றுலாப் பயணிகள் வருகை குறைந்தது.

    இந்நிலையில் நேற்று காலை மலைப்பகுதியில் மழை குறைந்ததையடுத்து குற்றாலம் அருவிகளிலும் வெள்ளம் குறைந்தது. இதனால் அருவிகளில் 5 நாட்களுக்கு பின்னர் சுற்றுலாப் பயணிகள் குளிக்க போலீசார் அனுமதி அளித்தனர். நேற்று விடுமுறை நாளாக இருந்தும் குற்றாலத்துக்கு குறைவான சுற்றுலாப் பயணிகளே வந்திருந்தனர். அவர்கள், மெயின்அருவி, ஐந்தருவி, பழையகுற்றாலம் அருவி, புலியருவி, சிற்றருவியில் ஆனந்தமாக குளித்து மகிழ்ந்தனர். இந்நிலையில் இன்று காலை முதல் குற்றாலத்துக்கு சுற்றுலாப் பயணிகள் அதிகமாக வர தொடங்கினர்.

    மெயினருவியில் தாராளமாக விழும் தண்ணீரில் சுற்றுலாப் பயணிகள் குளித்தனர். இதே போல் ஐந்தருவிக்கு செல்லும் சுற்றுலாப் பயணிகள் எண்ணிக்கையும் அதிகரித்தது. ஐந்தருவிக்கு அரசு சிறப்பு பஸ்களும் இயக்கப்பட்டன. சீசன் இன்னும் 2 வாரங்கள் இருக்கும் என்பதால் சீசனை அனுபவிக்க மீண்டும் குற்றாலத்துக்கு சுற்றுலாப் பயணிகள் படையெடுக்க தொடங்கியுள்ளனர். #courtallamfalls

    ×