என் மலர்
நீங்கள் தேடியது "Hogenakkal Water Inflow Increased"
- அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது.
- சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி.
ஒகேனக்கல்:
கர்நாடக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்தது. மேலும் தமிழக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளான தேன்கனிக்கோட்டை, அஞ்செட்டி, பிலிகுண்டுலு, ராசி மணல் உள்ளிட்ட இடங்களில் மழை பெய்து ள்ளது.
இதனால் நேற்று ஒகேனக்கல்லுக்கு வினாடிக்கு 5500 கனஅடியாக வந்த நீர்வரத்து இன்று காலையும் அதே அளவு தண்ணீர் நீடித்து வந்தது.

மெயின் அருவி, ஐந்தருவி, சினிபால்ஸ் உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது. சுற்றுலாப் பயணிகள் குடும்பத்துடன் பரிசல் பயணம் மேற்கொண்டு காவிரி ஆற்றின் அழகை ரசித்தனர்.
பின்னர் அவர்கள் மெயின் அருவியில் குளித்தும், பெண்கள் காவிரி ஆற்றில் குளித்தும் மகிழ்ந்தனர்.
காவிரி ஆற்றில் நீர்வரத்தை தமிழக-கர்நாடக எல்லையான பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து நேற்று 70 ஆயிரம் கனஅடியாக அதிகரித்தது. இன்று நீர்வரத்து 75 ஆயிரம் கனஅடியாக அதிகரித்தது. #Hogenakkalfalls
ஒகேனக்கல்:
கர்நாடக மாநில காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருவதால் கபினி, கிருஷ்ணராஜசாகர் அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் அதிக அளவில் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளதால் கர்நாடக-தமிழக எல்லை பகுதியான பிலிக்குண்டுலு வழியாக ஒகேனக்கல்லுக்கு நேற்று முன்தினம் 66 ஆயிரம் கனஅடியாக வந்த நீர்வரத்து நேற்று 70 ஆயிரம் கனஅடியாக அதிகரித்தது. இன்று நீர்வரத்து 75 ஆயிரம் கனஅடியாக அதிகரித்தது.
இன்று 15-வது நாளாக ஒகேனக்கல்லில் குளிக்கவும், பரிசல் இயக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஒகேனக்கல்லுக்கு சுற்றுலா வரும் பயணிகள் காவிரி ஆற்றில் ஓடும் வெள்ளப்பெருக்கை பார்த்து விட்டு செல்கிறார்கள்.
தொடர்ந்து காவிரி ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் பொதுமக்கள் குளிக்கவோ, துணி துவைக்கவோ, ஆற்றை கடக்கவோ கூடாது என்று மாவட்ட நிர்வாகம் எச்சரித்து உள்ளது.
சுற்றுலா பயணிகள் காவிரி கரையோரம் நின்று செல்பி எடுக்க கூடாது என்றும் எச்சரித்து உள்ளனர். #Hogenakkalfalls
கர்நாடக மாநில காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருவதால் கபினி, கிருஷ்ணராஜசாகர் அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் அதிக அளவில் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளதால் கர்நாடக-தமிழக எல்லை பகுதியான பிலிக்குண்டுலு வழியாக ஒகேனக்கல்லுக்கு நேற்று முன்தினம் 66 ஆயிரம் கனஅடியாக வந்த நீர்வரத்து நேற்று 70 ஆயிரம் கனஅடியாக அதிகரித்தது. இன்று நீர்வரத்து 75 ஆயிரம் கனஅடியாக அதிகரித்தது.
இன்று 15-வது நாளாக ஒகேனக்கல்லில் குளிக்கவும், பரிசல் இயக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஒகேனக்கல்லுக்கு சுற்றுலா வரும் பயணிகள் காவிரி ஆற்றில் ஓடும் வெள்ளப்பெருக்கை பார்த்து விட்டு செல்கிறார்கள்.
தொடர்ந்து காவிரி ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் பொதுமக்கள் குளிக்கவோ, துணி துவைக்கவோ, ஆற்றை கடக்கவோ கூடாது என்று மாவட்ட நிர்வாகம் எச்சரித்து உள்ளது.
சுற்றுலா பயணிகள் காவிரி கரையோரம் நின்று செல்பி எடுக்க கூடாது என்றும் எச்சரித்து உள்ளனர். #Hogenakkalfalls






