search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Tiruppattur"

    திருப்பத்தூர் அருகே இருதரப்பினர் மோதல் சம்பவத்தில் 13 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். தொடர்ந்து போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

    திருப்பத்தூர்:

    திருப்பத்தூர் அருகே உள்ள குரும்பேரி கிராமத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு 2 பிரிவினருக்கு இடையே தகராறு ஏற்பட்டது.

    இந்த நிலையில், ஒரு பிரிவை சேர்ந்த இளைஞர்கள் சிலர் மோட்டார் சைக்கிளில் ‘சைலன்சரை’ கழற்றிவிட்டு, அதிக ஒலி எழுப்பியவாறு மற்றொரு பிரிவினர் இருக்கும் பகுதிக்குள் சென்றனர். அதனை அவர்கள் தட்டிக்கேட்ட போது, மீண்டும் தகராறு ஏற்பட தொடங்கியது.

    அதேபோல் மற்றொரு பிரிவை சேர்ந்தவர்கள் நேற்று முன்தினம், கோவில் மாட்டினை அழைத்து வரும்போது தகராறு ஏற்பட்டது. மேலும் அங்குள்ள தலைவர் ஒருவரின் சிலை அருகில் காலி மதுபாட்டில்கள் கிடந்தன. அதனை மற்றொரு பிரிவை சேர்ந்தவர்கள் தான் வீசியுள்ளார்கள் என நினைத்து கேட்டதால் இருதரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

    நேற்றும் வாக்குவாதம் நீடித்தது. இதில் இரு பிரிவினரும் ஒருவரையொருவர் கல், கையால் தாக்கி கொண்டனர். இந்த சம்பவத்தில் வெங்கடேசன் தரப்பை சேர்ந்த நீலகண்டன் (வயது 24), ஸ்ரீதர் (24) ஆகிய 2 பேருக்கும், சாந்தலிங்கம் தரப்பை சேர்ந்த அன்பரசு, செங்கல்வராயன், ஜெகதீசன் ஆகிய 3 பேருக்கும் காயம் ஏற்பட்டது.

    பின்னர் அவர்கள் சிகிச்சைக்காக திருப்பத்தூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். மேலும் வீடுகள் மீது கற்கள் வீசப்பட்டதாக தெரிகிறது.

    இந்த சம்பவங்களின் தொடர்ச்சியாக 3 மோட்டார்சைக்கிள்கள் தீயிட்டு கொளுத்தப்பட்டது. இதனால் அப்பகுதியில் பெரும் பதற்றம் ஏற்பட்டது.

    தகவல் அறிந்த திருப்பத்தூர் துணை போலீஸ் சூப்பிரண்டு ஜேசுராஜ் தலைமையில், இன்ஸ்பெக்டர் உலகநாதன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அங்கு ஆயுதப்படை போலீசாரும் வரவழைக்கப்பட்டனர். அசம்பாவிதம் எதுவும் ஏற்படாத வகையிலும் பதற்றத்தை தணிக்கவும் 100 -க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டனர்.

    இந்த நிலையில் சிகிச்சை பெற்று வரும் ஒருதரப்பை சேர்ந்தவர்களை பார்த்துவிட்டு, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட செயலாளர் சுபாஷ்சந்திரபோஸ் திருப்பத்தூர் சப்-கலெக்டரிடம் புகார் மனு அளித்தார். பின்னர் அங்கிருந்து குரும்பேரி கிராமத்திற்கு தனது ஆதரவாளர்களை அழைத்துக் கொண்டு, 4 கார்களில் புறப்பட்டார்.

    அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார், சுபாஷ்சந்திரபோஸ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் வந்த வாகனங்களை நிறுத்தினர். அவர்களிடம், ‘‘ஊர் முழுவதும் போலீசாரின் முழுகட்டுப்பாட்டிற்குள் உள்ளது, யாரும் அத்துமீறி உள்ளே வரக்கூடாது’’ என கூறி, அவர்களை திருப்பி அனுப்பினர்.

    இப்பிரச்சினை தொடர்பாக இருதரப்பை சேர்ந்த 13 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். தொடர்ந்து போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

    திருப்பத்தூர் அருகே கஜா புயலால் மின்சாரம் தடைபட்டது தொடர்பாக கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். #Gajastorm

    திருப்பத்தூர்;

    கஜா புயல் காரணமாக தமிழகத்தில் நாகை, புதுக்கோட்டை உள்ளிட்ட 7 மாவட்டங்கள் கடும் பாதிப்புக்கு உள்ளாகின.

    புயல் எதிரொலியால் சிவகங்கை மாவட்டத்தில் அதிக மழை பதிவானது. மேலும் அங்கு பலத்த காற்று வீசியதால் பல இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்து மின்கம்பங்கள் சேதமானது.

    சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே உள்ள காரையூர் கிராமத்தில் 300-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன.

    கடந்த வாரம் கஜா புயல் தாக்கத்தின் காரணமாக இந்தப்பகுதியில் மின் கம்பங்கள் சாய்ந்து விழுந்ததால் அந்தப்பகுதி முழுவதும் மின்சாரம் தடை பட்டது. இதனால் கிராம மக்கள் கடும் அவதியடைந்தனர்.

    இது குறித்து திருப்பத்தூர் மின் வாரியத்தில் புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து மின் ஊழியர்கள் காரையூர் பகுதியில் மின் கம்பங்களை சீர் செய்யும் பணியில் ஈடுபட்டனர்.

    அப்போது காரையூர் கிராமத்தில் ஒரு பகுதிக்கு மட்டும் மீண்டும் மின்சாரம் வினியோகம் செய்யப்பட்டது. மற்றொரு பகுதி இருளில் மூழ்கியது.

    இது தொடர்பாக பலமுறை புகார் தெரிவித்தும் அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

    இதை கண்டித்து நேற்றிரவு காரையூர் பகுதி கிராம மக்கள் 100-க்கும் மேற்பட்டோர் திருப்பத்தூர்- சிங்கம்புணரி ரோட்டில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.

    தகவல் அறிந்த தாசில்தார், திருப்பத்தூர் போலீஸ் டி.எஸ்.பி. மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

    அப்போது மின்சாரம் விரைவில் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளிக்கப்பட்டது. இதையடுத்து கிராமமக்கள் போராட்டத்தை கைவிட்டனர்.

    போராட்டம் நடந்து முடிந்தபின் மின் வாரிய ஊழியர்கள் காரையூர் பகுதியில் மின்கம்பங்களை சீரமைத்தனர். இதைத் தொடர்ந்து மின் வினியோகம் செய்யப்பட்டது. #Gajastorm

    திருப்பத்தூர் அருகே கேரள வாலிபர் மர்மமான முறையில் தூக்கில் பிணமாக தொங்கினார்.

    திருப்பத்தூர்:

    திருப்பத்தூர் அருகே உள்ள இலவம்பட்டி கிராமத்தையொட்டி உள்ள காட்டுபகுதியில் உள்ள மரத்தில் இன்று காலை வாலிபர் ஒருவர் தூக்கில் பிணமாக தொங்கினார்.

    இதனைக்கண்டு திடுக்கிட்ட பொதுமக்கள் திருப்பத்தூர் தாலுகா போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பிணத்தை கைப்பற்றினர். வாலிபர் சட்டையில் அவரது செல்போன் இருந்தது.

    இதன்மூலம் இறந்து கிடந்த வாலிபர் கேரள மாநிலம் கர்னூல் பகுதியை சேர்ந்த விஜயகுமார் (27) என்பது தெரியவந்தது.

    வாலிபர் இங்கு எப்படி வந்தார். அவரை கொலை செய்து தூக்கில் தொங்கவிட்டார்களா அல்லது தற்கொலை செய்து கொண்டாரா என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருப்பத்தூர் அருகே மண் சரிந்து தொழிலாளி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருப்பத்தூர்:

    திருப்பத்தூர் அருகே உள்ள குருசிலாபட்டு கூடபட்டுகாலனியை சேர்ந்தவர் ராஜேந்திரன் (வயது 55). கூலி தொழிலாளி. இவர் நேற்று காக்னாம்பாளையம் சுடுகாடு அருகே மணல் அள்ளிக் கொண்டிருந்தார்.

    அப்போது எதிர்பாராமல் திடீர் என மணல் சரிந்து ராஜேந்திரன் மீது விழுந்தது. இதில் ராஜேந்திரன் மூச்சு திணறி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக துடிதுடித்து இறந்தார்.

    இது குறித்து தகவலறிந்த குறிசிலாபட்டு போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து உடலை மீட்டு திருப்பத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×