search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Kerala youth death"

    திருப்பத்தூர் அருகே கேரள வாலிபர் மர்மமான முறையில் தூக்கில் பிணமாக தொங்கினார்.

    திருப்பத்தூர்:

    திருப்பத்தூர் அருகே உள்ள இலவம்பட்டி கிராமத்தையொட்டி உள்ள காட்டுபகுதியில் உள்ள மரத்தில் இன்று காலை வாலிபர் ஒருவர் தூக்கில் பிணமாக தொங்கினார்.

    இதனைக்கண்டு திடுக்கிட்ட பொதுமக்கள் திருப்பத்தூர் தாலுகா போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பிணத்தை கைப்பற்றினர். வாலிபர் சட்டையில் அவரது செல்போன் இருந்தது.

    இதன்மூலம் இறந்து கிடந்த வாலிபர் கேரள மாநிலம் கர்னூல் பகுதியை சேர்ந்த விஜயகுமார் (27) என்பது தெரியவந்தது.

    வாலிபர் இங்கு எப்படி வந்தார். அவரை கொலை செய்து தூக்கில் தொங்கவிட்டார்களா அல்லது தற்கொலை செய்து கொண்டாரா என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×