search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Thiruparankundram by election"

    வருகிற 11-ந் தேதி மீண்டும் மதுரை வரும் எடப்பாடி பழனிசாமி திருப்பரங்குன்றம் இடைத்தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பேசுகிறார். #EdappadiPalaniswami #ADMK

    மதுரை:

    மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் தொகுதிக்கு விரைவில் இடைத்தேர்தல் நடத்த தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்து வருகிறது.

    அ.தி.மு.க. வென்ற தொகுதி என்பதால் இடைத்தேர்தலில் மீண்டும் வெற்றி பெறும் வகையில் அ.தி.மு.க.வினர் முழுவீச்சில் தேர்தல் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    தேர்தல் தேதி அறிவிப்புக்கு முன்பே அ.தி.மு.க., தி.மு.க., அ.ம.மு.க. உள்ளிட்ட கட்சிகள் தொகுதி முழுவதும் விறுவிறுப்பான தேர்தல் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    இந்த நிலையில் அ.தி.மு.க. தேர்தல் பணிகள் குறித்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடந்த 4-ந் தேதி மதுரையில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் பேசினார். துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் 16 அமைச்சர்கள் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

    திருப்பரங்குன்றம் தொகுதியில் சுமார் 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் அ.தி.மு.க. அமோக வெற்றி பெறும் என்றும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

    இதனிடையே நாளை (7-ந் தேதி) அ.ம.மு.க. துணை பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் பங்கேற்பதாக இருந்த பொதுக்கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. ஆனாலும் விரைவில் பொதுக்கூட்டத்தை நடத்த தினகரன் திட்டமிட்டுள்ளார்.

     


    இந்த நிலையில் அ.தி.மு.க.வினர் தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தை வருகிற 11-ந் தேதி தொடங்க திட்டமிட்டுள்ளனர்.

    இதற்காக முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வருகிற 11-ந் தேதி மீண்டும் மதுரை வருகிறார். அன்று காலை 10 மணியளவில் மதுரை மாட்டுத்தாவணியில் கட்டப்பட்டுள்ள பழ மார்க் கெட்டை திறந்து வைக்கிறார்.

    அந்த நிகழ்ச்சியில் 5 ஆயிரம் பேருக்கு நலத்திட்ட உதவிகளையும் எடப்பாடி பழனிசாமி வழங்குகிறார்.

    மாலை 6 மணியளவில் திருப்பரங்கன்றத்தில் இடைத்தேர்தல் பிரசார தொடக்க பொதுக்கூட்டம் நடக்கிறது. இந்த கூட்டத்திலும் எடப்பாடி பழனிசாமி நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசுகிறார்.

    கூட்டத்தில் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் மற்றும் 15 அமைச்சர்கள் கலந்து கொள்கிறார்கள்.

    இதற்கான ஏற்பாடுகளை அமைச்சர்கள் செல்லூர் ராஜூ, ஆர்.பி.உதயகுமார், புறநகர் மாவட்ட செயலாளர் ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. செய்து வருகிறார்கள். #EdappadiPalaniswami #ADMK

    திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் அ.தி.மு.க.வினர் மேற்கொள்ள வேண்டிய தேர்தல் பணிகள் குறித்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கட்சி நிர்வாகிகளுடன் மதுரையில் இன்று ஆலோசனை நடத்தினார். #EdappadiPalaniswami
    மதுரை:

    திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் அ.தி.மு.க. நிர்வாகிகள் செய்ய வேண்டிய தேர்தல் பணிகள் குறித்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று ஆலோசனை நடத்தினார்.

    மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் சட்டமன்ற உறுப்பினர் ஏ.கே.போஸ் கடந்த மாதம் 2-ந் தேதி மரணமடைந்தார். இதனால் திருப்பரங்குன்றம் தொகுதியில் விரைவில் இடைத்தேர்தல் வர உள்ளது.

    இடைத்தேர்தல் தேதி இன்னும் அறிவிக்கப்படாத நிலையில் அ.தி.மு.க., அ.ம.மு.க., தி.மு.க. உள்ளிட்ட கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வருகின்றன.

    சுவர் விளம்பரங்கள் தொகுதி முழுவதும் வரையப்பட்டுள்ளது. பொதுக்கூட்டங்களும் நடத்தி பொதுமக்களிடம் அரசியல் கட்சிகள் ஆதரவு திரட்டி வருகின்றன.

    அ.தி.மு.க.வினர் பூத் கமிட்டி அமைத்து விறுவிறுப்பான தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ளன. இவர்களுக்கு போட்டியாக அ.ம.மு.க.வினரும் தேர்தல் பணியை முடுக்கி விட்டுள்ளன.

    திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் அ.தி.மு.க.வினர் மேற்கொள்ள வேண்டிய தேர்தல் பணிகள் குறித்து அ.தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளரும், முதல்-அமைச்சருமான எடப்பாடி பழனிசாமி, கட்சி நிர்வாகிகளுடன் மதுரையில் இன்று ஆலோசனை நடத்தினார்.

    மதுரை ரிங்ரோடு, வேலம்மாள் மருத்துவமனை அருகே உள்ள திருமண மண்டபத்தில் நடைபெற்ற இந்த ஆலோசனை கூட்டத்திற்கு மதுரை புறநகர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். அமைச்சர்கள் ஆர்.பி.உதயகுமார், செல்லூர் ராஜூ ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    நிகழ்ச்சியில் துணை முதல்-அமைச்சரும், அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர் செல்வம், அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், செங்கோட்டையன், வேலுமணி, தங்கமணி, கே.டி.ராஜேந்திரபாலாஜி, மணிகண்டன், பாஸ்கரன் உள்ளிட்ட அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், கலந்து கொண்டனர்.

    மதுரை மாவட்டத்தில் உள்ள 10 சட்டமன்ற தொகுதிகளின் நிர்வாகிகளும், அ.தி.மு.க. தொண்டர்களும் திரளாக கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில் பேசிய நிர்வாகிகள் திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் அ.தி.மு.க. வரலாற்று சிறப்பு மிக்க வெற்றியை பெறும் வகையில் உழைப்போம் என்று உறுதி எடுத்துக் கொண்டனர்.

    கூட்டத்தில் பங்கேற்ற மகளிர் அணியினர்

    முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் திருப்பரங்குன்றம் தொகுதியில் வெற்றி பெறுவது குறித்து தொண்டர்களுக்கு விளக்கினர்.

    முன்னதாக மதுரை வந்த எடப்பாடி பழனிசாமிக்கு மதுரை விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

    அமைச்சர்கள், பாராளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் மலர்கொத்து கொடுத்து முதல்-அமைச்சரை வரவேற்றனர்.

    வருகிற 11-ந் தேதி திருப்பரங்குன்றத்தில் அ.தி.மு.க. சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடக்கிறது. இதில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கி சிறப்புரையாற்றுகிறார். #EdappadiPalaniswami
    மக்கள் நல இயக்கம் கட்சியாக மாறவிருப்பதாக நடிகர் விஷால் கூறியிருக்கும் நிலையில், திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் போட்டியிட விஷால் விருப்பம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. #Vishal #MakkalNalaIyakkam
    நடிகர் விஷால் தென்னிந்திய நடிகர் சங்கத்தில் பொது செயலாளராகவும், தயாரிப்பாளர் சங்கத்தில் தலைவராகவும் இருந்து வருகிறார்.

    தனது தேவி அறக்கட்டளை மூலம் ஏழைகளுக்கு உதவிகள் செய்து வந்தார். அது மட்டுமின்றி முக்கிய பிரச்சினைகளின் போதும் குரல் கொடுத்தும் வந்தார்.

    கடந்த டிசம்பர் மாதம் நடந்த ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் போட்டியிடுவதாக அதிரடியாக அறிவித்தார். வேட்பு மனு தாக்கலுக்கு சில தினங்களே இருந்த நிலையில் இந்த அறிவிப்பை வெளியிட்டார். அடுத்த சில தினங்களில் பிரசாரம் செய்வதற்கான திட்டங்களையும் தீட்டினார்.

    ஆர்.கே. நகர் தொகுதியில் தெலுங்கு வாக்காளர் அதிகம் என்பதால் விஷால் களம் காண்கிறார் என்று பேச்சுக்கள் எழுந்தன. இவற்றுக்கு பதில் அளித்த விஷால் ‘2015-ம் ஆண்டு சென்னை வெள்ளத்தின்போது ஆர்கே நகர் தொகுதி மக்களுக்கு உதவிகள் செய்ததால் தான் அங்கே பரிச்சயம்’ என்று குறிப்பிட்டார்.

    ஆனால் அவரது வேட்பு மனு பரிசீலனையின்போது நிராகரிக்கப்பட்டது. அவரை முன்மொழிந்த இரண்டு பேர் தங்களது முன்மொழிவை வாபஸ் பெற்றதால் நிராகரிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

    இதனை அடுத்து சுயேட்சை வேட்பாளர் ஒருவருக்கு தன் ஆதரவை வழங்குவேன் என்று அறிவித்தார். ஆனால் குறிப்பிட்ட யாரையும் ஆதரிக்கவில்லை.

    விஷால் சில நாட்களுக்கு முன்பு இரும்புத்திரை படத்தின் 100-வது நாள், தனது பிறந்தநாள், புதிய இயக்க தொடக்க விழா மூன்றையும் இணைத்து முப்பெரும் விழாவாக நடத்தினார். அந்த விழாவில் கொடியையும் மக்கள் நல இயக்கம் என்ற அமைப்பையும் அறிமுகப்படுத்தினார்.



    ‘எனது ரசிகர்கள் நற்பணி மன்றத்தை மக்கள் நல இயக்கமாக மாற்றி புதிய கொடியை அறிமுகம் செய்துள்ளேன். அணி சேர்வோம், அன்பை விதைப்போம் என்பது இதன் நோக்கம்.

    தெருவில் நடக்கும் அநீதியை பார்த்துவிட்டு சும்மா இருக்க முடியாது. சும்மா இருந்தால், பிணத்துக்கு சமம். அரசியல் என்பது மக்கள் பிரச்சினையை தீர்ப்பதற்குத்தான். இப்போது அது பணம் சம்பாதிக்கும் தொழிலாக மாறிவிட்டது. இது அரசியலை நோக்கி பயணிக்கும் இயக்கம் இல்லை. எதிர்காலத்தில் தேவைப்பட்டால் அரசியல் இயக்கமாக மாறும்’ என்று பேசினார்.

    இந்த நிலையில் விஷால் பேட்டி ஒன்றில் தனது இயக்கம் கட்சியாக மாறும் என்பதை உறுதிப்படுத்தி உள்ளார். ‘நிச்சயமாக என் இயக்கத்தை அரசியல் கட்சியாக மாற்றுவேன்.

    அதிகாரத்தில் இருந்தால் தான் நல்லது செய்ய முடியும். எனவே அரசியலுக்கு வருவதில் தவறே இல்லை’ என்று கூறி இருக்கிறார்.

    திருப்பரங்குன்றம் இடைத்தேர்தல் பற்றிய கேள்விக்கு ‘இடைதேர்தல் அறிவிப்பார்களா என்று தெரியவில்லை. இன்னும் உள்ளாட்சி தேர்தலே நடத்தப்படவில்லை. அறிவிக்கும் போது நான் என் முடிவை சொல்கிறேன்’ என்று குறிப்பிட்டிருக்கிறார்.

    விஷால் இப்படி பட்டும் படாமல் கூறினாலும் திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் விஷால் போட்டியிட இருப்பதாக அவரது ஆதரவாளர்கள் கூறி வருகிறார்கள். ‘விஷால் இடைத் தேர்தலில் போட்டியிடுவார். அது அடுத்த ஆண்டு நடக்க இருக்கும் பாராளுமன்ற தேர்தலுக்கான அடித்தளமாக இருக்கும்’ என்கிறார்கள்.

    ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அரசியலுக்கு வரும் நடிகர்கள் வரிசையில் ரஜினி, கமலுக்கு பின் விஷால் சேர்ந்துள்ளார். #Vishal #MakkalNalaIyakkam

    திருப்பரங்குன்றம் மற்றும் திருவாரூர் இடைத்தேர்தலில் வெற்றி பெறுவது உறுதி என்று டி.டி.வி.தினகரன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார். #TTVDhinakaran #Thiruparankundramconstituency

    தேவகோட்டை:

    தேவகோட்டையில் டி.டி.வி.தினகரன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    அ.தி.மு.க.வினர் எங்களை வில்லன் என்று கூறுகின்றனர். பின்னர் எப்படி நாங்கள் அவர்களுடன் பேசமுடியும். அவர்கள் யாரும் எங்களிடம் பேச்சுவார்த்தைக்கு வரவில்லை. அமைச்சர்கள் யாரும் வரமாட்டார்கள்.

    பொதுச்செயலாளருக்கும், கட்சிக்கும் துரோகம் செய்தவர்கள் வரமாட்டார்கள். தொண்டர்களும், சட்டமன்ற உறுப்பினர்கள் வருவது குறித்து பேசிக்கொண்டிருக்கிறார்கள். நிச்சயம் எங்கள் பக்கம் அவர்கள் வந்து விடுவார்கள்.

    தமிழகம் முழுவதும் எனக்கு கூடும் கூட்டத்தை பார்த்து ஒரே கூட்டத்தில் கலந்து கொள்பவர்களை வேறு கூட்டங்களுக்கு அழைத்து செல்கிறார்கள் என்று உளவுத்துறை தவறான தகவல்களை கூறி வருகின்றனர்.

    சர்க்கஸ் கூடாரம் போன்று மக்களை வாகனங்களில் ஏற்றிக்கொண்டு கூட்டம் கூட்டுவது என்பது அவர்களின் ஆசையாக இருக்கும். அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் என்னை அ.தி.மு.வின் வில்லன் என்று கூறுகிறார். எனது போட்டோவையும், அவரது போட்டோ வையும் வைத்து ஒப்பிட்டு பாருங்கள். இதில் யார் முகம் வில்லன் மாதிரி இருக்கிறது என்று தெரியும்.


    இடைத்தேர்தல் வரும் போது மட்டுமே யாருடன் கூட்டணி வைப்பது என்பது தெரியவரும். முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் வீட்டிற்கு தி.மு.க. தலைவர் ஸ்டாலின் தனது குடும்பத்தோடு சென்று கலைஞரின் நினைவிடத்தை அண்ணா நினைவிடம் அருகில் அமைக்க வேண்டும் என்று கேட்டதே தவறு. கருணாநிதி முதல்-அமைச்சராக இருந்தபோது இதே மெரினா கடற்கரையில் முன்னாள் முதல்-அமைச்சர் காமராஜருக்கு இடம் இல்லை என்று கூறினார்.

    பின்னர் எப்படி கருணாநிதிக்கு இடம் கொடுப்பார்கள். இருந்தும் ஸ்டாலின் தனது குடும்பத்தோடு எடப்பாடி பழனிசாமியிடம் கருணாநிதிக்கு இடம் கேட்டது தலைமை பண்பான செயல் அல்ல.

    எப்போது தேர்தல் வந்தாலும் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் வெற்றி பெறும். வருகிற பாராளுமன்ற தேர்தலோடு, சட்டமன்றத்திற்கும் தேர்தல் வரும். திருப்பரங்குன்றம், திருவாரூர் இடைத்தேர்தல்களில் நாங்கள் வெற்றி பெறுவது உறுதி.

    இவ்வாறு அவர் கூறினார்.

    திருவாரூர் மற்றும் திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி தனித்து போட்டியிடும் என சீமான் நிரூபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார். #Thiruparankundramelection #Seeman

    சென்னை:

    நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், மாவட்ட வாரியாக அனைத்துநிலை பொறுப்பாளர்களையும் சந்தித்து வருகிறார்.

    நேற்று காலை 10 மணிமுதல் மாலை 3 மணிவரை திருவள்ளூர் மாவட்டத்திற்குட்பட்ட திருவள்ளூர், திருத்தணி, பூந்தமல்லி, மதுரவாயல், ஆவடி, அம்பத்தூர் சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சியின் அனைத்துநிலை பொறுப்பாளர்களுடன் சீமான் கலந்துரையாடினார். புதிய நிர்வாகிகளையும் நியமனம் செய்தார்.

    இந்த சந்திப்பு அம்பத்தூர், பி.எஸ்.வி. திருமண மண்டபத்தில் நடை பெற்றது. மாநில ஒருங்கிணைப்பாளர்கள் அம்பத்தூர் அன்புத் தென்னரசன் மற்றும் விருகை ராஜேந்திரன் உள்பட பலர் உடனிருந்தனர்.

    முன்னதாக சீமான் நிரூபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது கூறியதாவது:-

    பாரத ரத்னாவை நாங்கள் ஒருபோதும் விருதாக ஏற்பதில்லை. விடுதலைப் போராட்டத்தில் பங்கேற்று நாட்டிற்காகச் செக்கிழுத்த எங்கள் பாட்டன் வ.உ.சி.க்கு அளிக்காத விருதை, விளையாட்டு வீரர் சச்சின் டெண்டுல்கருக்கு அளித்தார்கள். அதனால், அவ்விருதை நாங்கள் உயரிய விருதாக ஒருபோதும் பார்க்கவில்லை.

    திருப்பரங்குன்றம் மற்றும் திருவாரூர் இடைத்தேர்தல்களில் நாம் தமிழர் கட்சி போட்டியிடும். எங்கள் தத்துவம் தனித்துவமானது. அதனால், நாங்கள் எப்போதும் தனித்துதான் போட்டியிடுவோம்.

    எங்கள் தத்துவத்தையும், கொள்கையையும் ஏற்று எங்களோடு இணைய வந்தால் எவரையும் இணைத்துக் கொள்வோம். திராவிடக் கட்சிகள், இந்தியத் தேசியக் கட்சிகளோடு இணைவது சாத்தியமில்லை.

    கோவில்களில் சிலைக் கடத்தல் கோயில்களிலுள்ள குருக்களுக்குத் தெரியாமல் நிகழுமா? எத்தனையோ வழக்குகளுக்கு மத்தியப் புலனாய்வு விசாரணை கோரியபோது விசார ணையை மாற்றித் தர மறுத்து தமிழகக் காவல் துறையின் விசாரணையே போதும் என்று தமிழக அரசு கூறியிருக்கிறது.

    பலரைத் தப்பிக்க வைப்பதற்காகத்தான் விசாரணையை மத்திய புலனாய்வுக்கு தமிழக அரசு மாற்ற முனைந்தது. பொன் மாணிக்கவேல் விசாரணை பலருக்குக் கலக்கத்தை ஏற்படுத்தியிருப்பதாலேயே அவரை மாற்றத் துடிக்கிறார்கள். அவர் நேர்மையாக இருப்பதுதான் ஆட்சியாளர்களுக்குச் சிக்கலாக இருக்கிறது. சகாயத்திற்கு என்ன நிகழ்ந்ததோ அதேதான் பொன்.மாணிக்கவேலுக்கும் நிகழுகிறது.

    திருமுருகன் காந்தி என்ன தேசத்துரோகச் செயலில் ஈடுபட்டாரென வழக்குத் தொடுக்கிறார்கள்? ஒரு அரசுக்கு எதிராகப் பேசுவதே தேசத் துரோகமென்றால் அது அரசா? அரசு என்ன வேண்டுமானால் செய்யலாம். மக்கள் அதற்கு எந்த எதிர்வினையுமாற்றக் கூடாது என்பதை எப்படி ஏற்பது?

    சேலத்தில் மக்கள் முன்னிலையில் என்னைக் கைது செய்தார்கள் என்றால் அதன்மூலம் மக்களை மறைமுகமாக அச்சுறுத்த நினைக்கிறார்கள். இந்த அடக்கு முறைகளுக்கெல்லாம் அஞ்சாத ஒரு தலைமுறை உருவாகிவிட்டது. அதனால், இதனையெல்லாம் அரசு கைவிட வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×