search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "party administrators"

    ‘கமலின் நாக்கை அறுப்பேன்’ என்று கூறிய அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது திருவொற்றியூர் போலீஸ் நிலையத்தில் கமல்ஹாசன் கட்சி நிர்வாகிகள் புகார் அளித்துள்ளனர்.
    திருவொற்றியூர்:

    சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து என்று பேசிய கமலின் பேச்சுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

    அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, கமலை கண்டிக்கும் வகையில் அளித்த பேட்டியில் அவரது நாக்கை அறுக்க வேண்டும் என்று கூறி இருந்தார். இதற்கு பலர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.



    இதனையடுத்து கமல் கட்சியினர் ராஜேந்திர பாலாஜி மீது தேர்தல் கமி‌ஷனில் நேற்று புகார் அளித்தனர். போலீஸ் கமி‌ஷனர் அலுவலகத்திலும் புகார் அளிக்கப்பட்டது.

    இந்த நிலையில் திருவொற்றியூர் போலீஸ் நிலையத்தில் கமல் கட்சி நிர்வாகிகள் ராஜேந்திர பாலாஜி மீது புகார் அளித்தனர்.

    மக்கள் நீதி மய்யம் கட்சியின் திருவள்ளூர் கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் மோகன் அளித்த புகார் மனுவில் கூறி இருப்பதாவது:-

    ஒட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதியில் கடந்த 13-ந் தேதி தமிழக பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி அளித்த பேட்டியில், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசனை மிரட்டும் வகையில் அவரது கொழுப்பெடுத்த நாக்கை அறுப்பேன் என்றும் மற்றும் மக்களை வன்முறைக்கு தூண்டும் வகையில் மக்கள் கமல்ஹாசனின் நாக்கை அறுப்பார்கள் எனவும் பகிரங்கமாக மிரட்டல் விடுத்துள்ளார்.

    இச்செயல் ஒரு தவறான முன் உதாரணமாக அமைந்துவிடும். எனவே சட்டத்தை மதித்து நடக்க வேண்டிய அமைச்சரே சட்டத்தை மீறும் வகையில் வன்முறையை தூண்டும் விதமாக பேசியதால் இந்திய தண்டனை சட்டம் 503, 504-ன்படி அவர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் அ.தி.மு.க.வினர் மேற்கொள்ள வேண்டிய தேர்தல் பணிகள் குறித்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கட்சி நிர்வாகிகளுடன் மதுரையில் இன்று ஆலோசனை நடத்தினார். #EdappadiPalaniswami
    மதுரை:

    திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் அ.தி.மு.க. நிர்வாகிகள் செய்ய வேண்டிய தேர்தல் பணிகள் குறித்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று ஆலோசனை நடத்தினார்.

    மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் சட்டமன்ற உறுப்பினர் ஏ.கே.போஸ் கடந்த மாதம் 2-ந் தேதி மரணமடைந்தார். இதனால் திருப்பரங்குன்றம் தொகுதியில் விரைவில் இடைத்தேர்தல் வர உள்ளது.

    இடைத்தேர்தல் தேதி இன்னும் அறிவிக்கப்படாத நிலையில் அ.தி.மு.க., அ.ம.மு.க., தி.மு.க. உள்ளிட்ட கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வருகின்றன.

    சுவர் விளம்பரங்கள் தொகுதி முழுவதும் வரையப்பட்டுள்ளது. பொதுக்கூட்டங்களும் நடத்தி பொதுமக்களிடம் அரசியல் கட்சிகள் ஆதரவு திரட்டி வருகின்றன.

    அ.தி.மு.க.வினர் பூத் கமிட்டி அமைத்து விறுவிறுப்பான தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ளன. இவர்களுக்கு போட்டியாக அ.ம.மு.க.வினரும் தேர்தல் பணியை முடுக்கி விட்டுள்ளன.

    திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் அ.தி.மு.க.வினர் மேற்கொள்ள வேண்டிய தேர்தல் பணிகள் குறித்து அ.தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளரும், முதல்-அமைச்சருமான எடப்பாடி பழனிசாமி, கட்சி நிர்வாகிகளுடன் மதுரையில் இன்று ஆலோசனை நடத்தினார்.

    மதுரை ரிங்ரோடு, வேலம்மாள் மருத்துவமனை அருகே உள்ள திருமண மண்டபத்தில் நடைபெற்ற இந்த ஆலோசனை கூட்டத்திற்கு மதுரை புறநகர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். அமைச்சர்கள் ஆர்.பி.உதயகுமார், செல்லூர் ராஜூ ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    நிகழ்ச்சியில் துணை முதல்-அமைச்சரும், அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர் செல்வம், அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், செங்கோட்டையன், வேலுமணி, தங்கமணி, கே.டி.ராஜேந்திரபாலாஜி, மணிகண்டன், பாஸ்கரன் உள்ளிட்ட அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், கலந்து கொண்டனர்.

    மதுரை மாவட்டத்தில் உள்ள 10 சட்டமன்ற தொகுதிகளின் நிர்வாகிகளும், அ.தி.மு.க. தொண்டர்களும் திரளாக கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில் பேசிய நிர்வாகிகள் திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் அ.தி.மு.க. வரலாற்று சிறப்பு மிக்க வெற்றியை பெறும் வகையில் உழைப்போம் என்று உறுதி எடுத்துக் கொண்டனர்.

    கூட்டத்தில் பங்கேற்ற மகளிர் அணியினர்

    முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் திருப்பரங்குன்றம் தொகுதியில் வெற்றி பெறுவது குறித்து தொண்டர்களுக்கு விளக்கினர்.

    முன்னதாக மதுரை வந்த எடப்பாடி பழனிசாமிக்கு மதுரை விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

    அமைச்சர்கள், பாராளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் மலர்கொத்து கொடுத்து முதல்-அமைச்சரை வரவேற்றனர்.

    வருகிற 11-ந் தேதி திருப்பரங்குன்றத்தில் அ.தி.மு.க. சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடக்கிறது. இதில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கி சிறப்புரையாற்றுகிறார். #EdappadiPalaniswami
    அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் வருகிற பாராளுமன்ற தேர்தல் குறித்து கட்சி நிர்வாகிகளுடன் இன்று மாலை ஆலோசனை நடத்துகிறார். #TTVDhinakaran #Parliamentelection
    சென்னை:

    அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் வருகிற பாராளுமன்ற தேர்தல் குறித்து கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்.

    இந்தநிலையில் பாராளுமன்ற தேர்தலை எதிர்கொள்வது குறித்து ஆலோசனை கூட்டம் சென்னை அசோக்நகர் டாக்டர் நடேசன் சாலையில் உள்ள அம்மா மக்கள் முன்னேற்ற கழக தலைமை அலுவலகத்தில் இன்று மாலை 3 மணிக்கு நடக்கிறது.

    இதில் தமிழ்நாட்டில் உள்ள 39 தொகுதி மற்றும் புதுச்சேரி தொகுதி பொறுப்பாளர்கள் மண்டல பொறுப்பாளர்கள் கலந்து கொள்கிறார்கள். கூட்டத்தில் அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொதுச்செயலாளர் தினகரன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கி நிர்வாகிகளுக்கு ஆலோசனை வழங்குகிறார்.

    மேலும் ஆலோசனை கூட்டத்தில் புதிய உறுப்பினர் சேர்க்கைக்காக அறிவிக்கப்பட்டுள்ள சட்டமன்ற தொகுதிகளின் பொறுப்பாளர்களும் பங்கேற்கிறார்கள். ஏற்கனவே பாராளுமன்ற தேர்தல் குறித்து ஆலோசனை கூட்டம் ஜூலை 30-ந்தேதி நடைபெறுவதாக இருந்தது. பின்னர் அது ஒத்திவைக்கப்பட்டு இன்று நடைபெறுகிறது. #TTVDhinakaran #Parliamentelection

    ×