search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பாராளுமன்ற தேர்தல் - தேர்தல் பொறுப்பாளர்களுடன் தினகரன் ஆலோசனை
    X

    பாராளுமன்ற தேர்தல் - தேர்தல் பொறுப்பாளர்களுடன் தினகரன் ஆலோசனை

    அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் வருகிற பாராளுமன்ற தேர்தல் குறித்து கட்சி நிர்வாகிகளுடன் இன்று மாலை ஆலோசனை நடத்துகிறார். #TTVDhinakaran #Parliamentelection
    சென்னை:

    அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் வருகிற பாராளுமன்ற தேர்தல் குறித்து கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்.

    இந்தநிலையில் பாராளுமன்ற தேர்தலை எதிர்கொள்வது குறித்து ஆலோசனை கூட்டம் சென்னை அசோக்நகர் டாக்டர் நடேசன் சாலையில் உள்ள அம்மா மக்கள் முன்னேற்ற கழக தலைமை அலுவலகத்தில் இன்று மாலை 3 மணிக்கு நடக்கிறது.

    இதில் தமிழ்நாட்டில் உள்ள 39 தொகுதி மற்றும் புதுச்சேரி தொகுதி பொறுப்பாளர்கள் மண்டல பொறுப்பாளர்கள் கலந்து கொள்கிறார்கள். கூட்டத்தில் அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொதுச்செயலாளர் தினகரன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கி நிர்வாகிகளுக்கு ஆலோசனை வழங்குகிறார்.

    மேலும் ஆலோசனை கூட்டத்தில் புதிய உறுப்பினர் சேர்க்கைக்காக அறிவிக்கப்பட்டுள்ள சட்டமன்ற தொகுதிகளின் பொறுப்பாளர்களும் பங்கேற்கிறார்கள். ஏற்கனவே பாராளுமன்ற தேர்தல் குறித்து ஆலோசனை கூட்டம் ஜூலை 30-ந்தேதி நடைபெறுவதாக இருந்தது. பின்னர் அது ஒத்திவைக்கப்பட்டு இன்று நடைபெறுகிறது. #TTVDhinakaran #Parliamentelection

    Next Story
    ×