search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "TDB"

    பெண்கள் நுழைந்ததற்காக பரிகார பூஜை செய்யவில்லை என்று சபரிமலை கோவில் தந்திரி கண்டரரு ராஜீவரு விளக்கம் அளித்துள்ளார். #Sabarimala #Tantri
    திருவனந்தபுரம்:

    சபரிமலை ஐயப்பன் கோவிலில் கடந்த ஜனவரி 2-ந்தேதி 50 வயதுக்குட்பட்ட கனகதுர்கா, பிந்து ஆகிய 2 பெண்கள் சன்னிதானத்துக்கு சென்று சாமி தரிசனம் செய்தனர். இதைத்தொடர்ந்து அன்று கோவில் தந்திரி சன்னிதானத்தை தூய்மைப்படுத்தி பரிகார பூஜை செய்ததாக கூறப்பட்டது. இது சர்ச்சையை ஏற்படுத்தியது.



    இந்நிலையில் ஐயப்பன் கோவில் தந்திரி கண்டரரு ராஜீவரு திருவாங்கூர் தேவசம்போர்டுக்கு 11 பக்கத்தில் விளக்கம் அளித்துள்ளார். அதில், “சித்திர ஆட்ட விழா மற்றும் மண்டல-மகரவிளக்கு விழா காலங்களில் ஐயப்பன் கோவில் பல பிரச்சினைகளை சந்தித்தது. இந்த பிரச்சினைகள் எழுந்ததால் கோவிலின் புனிதத்தை மீட்பதற்காக இதுபோன்ற பரிகார பூஜைகள் செய்ய வேண்டிய தேவை ஏற்பட்டது. டிசம்பர் 31-ந்தேதி எந்த பூஜைகளும் நடைபெறவில்லை, 1-ந்தேதி பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. அதனால் தான் 2-ந்தேதி பரிகார பூஜை செய்யப்பட்டது. பெண்கள் நுழைந்ததற்காக பரிகார பூஜை செய்ததாக கூறுவது அடிப்படை ஆதாரமற்றது” என்று கூறியுள்ளார். #Sabarimala #Tantri

    சபரிமலை ஐயப்பன் கோவிலில் பெண்களை அனுமதிக்க அவகாசம் கேட்டு சுப்ரீம் கோர்ட்டில் வரும் 19-ம் தேதி முறையீடு செய்ய தேவஸ்தானம் தீர்மானித்துள்ளது. #Sabarimala #Sabarimalarow #SC
    திருவனந்தபுரம்:

    சுப்ரீம் கோர்ட் உத்தரவின்படி சபரிமலை ஐயப்பன் கோவிலில் பெண்களை அனுமதிப்போம். இதற்கு எதிரான நிலைப்பாட்டை கேரள அரசு எடுக்க முடியாது என பினராயி விஜயன் அறிவித்துள்ளார். அம்மாநிலத்தை சேர்ந்த அரசியல் கட்சி தலைவர்களுடன் நடத்திய ஆலோசனை கூட்டத்துக்கு பின்னர் இந்த அறிவிப்பை சமீபத்தில் அவர் வெளியிட்டார்.

    ஆனால், முல்லக்கல் மற்றும் பம்பா பகுதியில் முற்றுகையிட்டுள்ள பக்தர்கள் பெண்களை சபரிமலை பக்கம் செல்ல விடாமல் வழிமறித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    போராட்டங்களில் ஈடுபடும் அமைப்புகளையும், அதன் தலைவர்களையும் போலீசார் கண்காணித்து வந்தனர். அவர்கள் பக்தர்கள் வேடத்தில் சபரிமலை சென்று விடாமல் இருக்க கண்காணிப்பு பணியும் தீவிரப்படுத்தப்பட்டது. மேலும் முன் எச்சரிக்கை நடவடிக்கையாக போராட்டக்காரர்கள் பலரும் கைது செய்யப்பட்டு வருகிறார்கள்.

    இதற்கிடையில், சபரிமலை செல்வதற்காக புனேவில் இருந்து நேற்று விமானம் மூலம் கொச்சி வந்த பெண்ணுரிமை ஆர்வலர் திருப்தி தேசாய் விமான நிலையத்தை விட்டு வெளியேற முடியாமல் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் விடியவிடிய விமான நிலையத்துக்குள் முடங்கி கிடந்த அந்தப் பெண் புனே நகருக்கு திரும்ப சென்றார்.



    இதேபோல்,  இந்து ஐக்கிய வேதி அமைப்பின் பெண் தலைவர் சசிகலா இருமுடி கட்டுடன் சபரிமலைக்கு செல்ல வந்தார். இன்று அதிகாலை 2.30 மணியளவில் பம்பையில் அவரை போலீசார் தடுத்து நிறுத்தினர்.

    சபரிமலை செல்ல அவருக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இதனால் போலீசாருக்கும், சசிகலாவுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் பம்பையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த பெண் போலீசார் வரவழைக்கப்பட்டனர். அவர்கள், சசிகலாவை கைது செய்தனர்.

    இந்து அமைப்பின் தலைவி கைது செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து கேரளாவில் இன்று மாநிலம் தழுவிய முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வருகின்றது.

    இந்நிலையில், சபரிமலை ஐயப்பன் கோவிலில் பெண்களை அனுமதிக்க அவகாசம் கேட்டு சுப்ரீம் கோர்ட்டில் வரும் 19-ம் தேதி முறையீடு செய்ய தேவஸ்தானம் தீர்மானித்துள்ளது.

    இதுதொடர்பாக இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த  தலைவர் ஏ.பத்மகுமார், ‘வரும் திங்கட்கிழமை எங்களது வழக்கறிஞர் சந்திரா உதய் சிங் இதற்கான மனுவை சுப்ரீம்  கோர்ட்டில் தாக்கல் செய்வார்’ என தெரிவித்துள்ளார். #Sabarimala #Sabarimalarow #SC   
    சபரிமலை கோயிலில் வழிபாடு செய்ய அனைத்து வயதுடைய பெண்களுக்கும் அனுமதி அளித்த சுப்ரீம் கோர்ட் தீர்ப்பில் மேல்முறையீடு செய்யப் போவதில்லை என திருவிதாங்கூர் தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. #Sabarimala
    திருவனந்தபுரம்:

    சபரிமலையில் உள்ள ஐயப்பன் கோயிலுக்கு10 வயது முதல் 50 வயது வரையிலான பெண்கள் செல்ல அனுமதிக்கப்படுவதில்லை. இந்நிலையில் இது தொடர்பான பொதுநல மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், சபரிமலை ஐயப்பன் கோயிலும் அனைத்து வயதுடைய பெண்களையும் அனுமதிக்கலாம் என சமீபத்தில் தீர்ப்பு கூறியது.
     
    இந்த தீர்ப்பை எதிர்த்து முறையீடு செய்யப்போவதாக ஐயப்பன் கோயிலுக்கு ஆபரணங்களை அளித்துவரும் பந்தளம் அரண்மனை வட்டாரங்கள் தெரிவித்திருந்தன.

    இதேபோல், கேரள மாநிலத்தில் சபரிமலை ஐயப்பன் கோயில், குருவாயூர் கோயில், பத்மநாபசாமி கோயில் உள்ளிட்ட 50 முக்கிய கோயில்களை நிர்வகித்துவரும் திருவிதாங்கூர் தேவசம் (தேவஸ்தானம்) சார்பிலும் இந்த தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்போவதாக தகவல்கள் வெளியாகின.


    இந்நிலையில், சுப்ரீம் கோர்ட் அளித்த தீர்ப்பில் மேல்முறையீடு செய்யப் போவதில்லை என திருவிதாங்கூர் தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

    பெண் பக்தர்களுக்கு பாதுகாப்பு அளிப்பதற்காக சுமார் 500 பெண் போலீசார் நியமிக்கப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ள அதேவேளையில், கேரள காவல்துறையில் பணியாற்றும் 40 பெண் போலீசார் இந்த ஆண்டு சபரிமலை யாத்திரையில் பங்கேற்கவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. #TDBreviewpetition #entryofwomen #LordAyyappatemple #Sabarimala #SabrimalaVerdict
    ×