என் மலர்
நீங்கள் தேடியது "தமிழிசை சவுந்ரரராஜன்"
- தமிழகத்தில் அ.தி.மு.க.வுடன் ஒரு வலிமையான கூட்டணியை உருவாக்கி இருக்கிறோம்.
- வரும் தேர்தலில் மூன்றாவது இடத்துக்குத்தான் சீமானும் விஜய்யும் போட்டியிடுகிறார்கள்.
முன்னாள் ஆளுநர் டாக்டர் தமிழிசை சவுந்தர ராஜன் சென்னையில் விநாயகர் சதுர்த்தி விழா நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.
அப்போது அவர் பேசியதாவது:-
விநாயகர் சதுர்த்தி விழா இந்தியா முழுவதும் கொண்டாடப்படுகிறது. எல்லா மாநில முதல்வர்களும் தங்கள் மாநில மக்களுக்கு விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்கள்.
ஆனால் தமிழ்நாட்டில் மட்டும் முதலமைச்சர் வாழ்த்து தெரிவிப்பதில்லை. இதன் மூலம் அவர் எந்த அளவுக்கு வாக்கு வங்கி அரசியல் எண்ணத்தோடு செயல்படுகிறார் என்பது தெரியும்.
தமிழ்நாட்டைப் பொறுத்தவரை வருகிற தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணிக்கும், இந்தியா கூட்டணிக்கும் தான் போட்டி. தமிழகத்தில் அ.தி.மு.க.வு டன் ஒரு வலிமையான கூட்டணியை உருவாக்கி இருக்கிறோம்.
பா.ஜனதா பூத் கமிட்டி பொறுப்பாளர்கள் மாநாடுகளை நடத்தி அடிமட்டத்தில் பா.ஜ.க.வின் வலிமையினை வெளிப்படுத்தி வருகிறது. தி.மு.க. ஆட்சியில் நடைபெற்று வரும் அவலநிலையை மக்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். ஏதோ கருத்து திணிப்புகளை புகுத்தி தி.மு.க. தான் முன்னிலையில் இருப்பது போல் கூறி வருகிறார்கள்.
ஆனால் கள நிலவரம் தி.மு.க.வுக்கு எதிராகவே உள்ளது. அதை மறைக்கவே நாடகம் போடுகிறார்கள். தி.மு.க.வின் செல்வாக்கு மிகப்பெரிய அளவு சரிந்து இருக்கிறது. இன்னும் 8 மாதத்தில் மேலும் குறையும். இந்த தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி உறுதியானது.
தி.மு.க. கூட்டணியில் இடம் பெற்றுள்ள கட்சிகளின் சித்தாந்தமும் சூழ்நிலைக்கு ஏற்ப மாறி வருகிறது. தூய்மை பணியாளர்கள் விஷயத்தில் அதை மக்கள் நேரிலேயே பார்த்தார்கள்.
இந்த அவல ஆட்சி மாற வேண்டும் என்று மக்கள் விரும்புகிறார்கள். அந்த மாற்றத்தை தேர்தல் மூலம் மக்கள் கொண்டு வருவார்கள். மக்களுக்கு நம்பிக்கை துரோகம் இழைத்து வரும் திமுக கூட்டணிக்கு ஏமாற்றமே மிஞ்சும்.
நடிகர் விஜய் அடுத்த முதலமைச்சர் நான் தான் என்பது போல் பேசி வருகிறார். ஆனால் மூன்றாவது இடத்துக்குத்தான் சீமானும் விஜய்யும் போட்டியிடுகிறார்கள். விஜய் அரசியலுக்கு வந்தபோது மாற்றத்தை தருவார் என்று மக்கள் நம்பினார்கள். ஆரம்பத்தில் காமராஜர், அஞ்சலை அம்மாள் போன்றோரின் படத்தை போட்டு மக்கள் மத்தியில் வலம் வந்தார்.
ஆனால் இப்போது எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா, விஜயகாந்த் படத்தை போட்டு மக்களிடம் ஆதரவு கேட்டு வருகிறார். ஆக இவருக்கு நிலையான கொள்கை எதுவும் இல்லை. எம்.ஜி.ஆர். அரசியல் பின்புலம் மட்டுமின்றி பல்வேறு நிகழ்ச்சிகள் மூலம் மக்களை கவர்ந்து ஆட்சிக்கு வந்தவர். விஜயகாந்தும் அரசியல் அனுபவத்தோடு தான் அரசியலுக்கு வந்தார். ஆனால் விஜய் ஒவ்வொரு மாநாட்டை நடத்தும் போதும் ஒவ்வொரு விதமாக பேசுகிறார்.
அவர் அரசியலில் வெற்றிக்கு பக்கம் கூட நெருங்கவில்லை. தொண்டர்கள் கூட நெருங்க முடியாத தலைவராக தான் விஜய் இருக்கிறார். எந்த கட்சியிலும் கேள்விப்படாத பவுன்சர் கலாச்சாரம் அந்த கட்சியில் தான் இருக்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
- தமிழிசை சவுந்தர ராஜன் வாழ்த்து செய்தியில் கவர்னராக தனது பணி சிறக்க எனது மனமார்ந்த வாழ்த்துக்களையும் தெரிவித்து கொள்கிறேன் என்று கூறினார்.
- சி.பி.ராதா கிருஷ்ணனுக்கு த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசனும் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
சென்னை:
ஜார்க்கண்ட் மாநில கவர்னராக நியமிக்கப்பட்ட சி.பி. ராதாகிருஷ்ணனுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் டுவிட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
ஜார்க்கண்ட் மாநில கவர்னராகப் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள நண்பர் சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்.
அரசியலமைப்புச் சட்டத்தின்படி தனது கடமைகளை நிறைவேற்றி தமிழ்நாட்டுக்கு பெருமை சேர்த்திட விழைகிறேன்.
இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.
தெலுங்கானா கவர்னரும், புதுச்சேரி துணை நிலை கவர்னருமான டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறி இருப்பதாவது:-
ஜார்க்கண்ட் மாநில கவர்னராக நியமிக்கப்பட்டுள்ள தமிழக பா.ஜ.க.வின் மூத்த தலைவரும், நான் பெரிதும் போற்றும் சி.பி.ராதாகிருஷ்ணனை தொலைபேசியில் தொடர்பு கொண்டு எனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டு கவர்னராக தனது பணி சிறக்க எனது மனமார்ந்த வாழ்த்துக்களையும் தெரிவித்து கொண்டேன்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறி இருப்பதாவது:-
ஜார்க்கண்ட் கவர்னராக நியமிக்கப்பட்ட, பா.ஜனதா மாநில முன்னாள் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு வாழ்த்துக்கள். சி.பி.ராதா கிருஷ்ணனுக்கு வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
இதேபோல் சி.பி.ராதா கிருஷ்ணனுக்கு த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசனும் வாழ்த்து தெரிவித்துள்ளார்.






