search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Sudhish"

    • வருகிற 27, 28-ந்தேதிகளில் தமிழகத்தில் 2 நாட்கள் பிரதமர் மோடி சுற்றுப்பயணம் செய்கிறார்.
    • பாராளுமன்ற தேர்தலில் தே.மு.தி.க. தனது கூட்டணி நிலைப்பாட்டினை இன்னமும் அறிவிக்கவில்லை.

    கே.கே. நகர்:

    பாராளுமன்ற தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. தேர்தலை சந்திக்க அரசியல் கட்சிகள் ஆயத்தமாகி வருகின்றன. இந்த நிலையில் மத்தியில் ஆளும் பா.ஜ.க. தமிழகத்தில் மெகா கூட்டணியை அமைக்க திட்டமிட்டு வருகிறது.

    இது தொடர்பாக கட்சியின் தமிழக அளவிலான உயர்மட்ட தலைவர்கள் பல்வேறு கட்சிகளுடன் ரகசியமாக பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள். பா.ஜ.க. தலைவர் அண்ணாமலையும் இது தொடர்பாக ஆலோசனை நடத்தி வருகிறார்.

    வருகிற 27, 28-ந்தேதிகளில் தமிழகத்தில் 2 நாட்கள் பிரதமர் மோடி சுற்றுப்பயணம் செய்கிறார். அப்போது தேர்தல் கூட்டணி இறுதி செய்ய வாய்ப்பு இருப்பதாக பா.ஜ.க. வட்டாரங்கள் கூறுகின்றன.

    இந்த நிலையில் சென்னையில் இருந்து திருச்சிக்கு இன்று (புதன்கிழமை) காலை 7.10 மணிக்கு ஒரு விமானம் வந்தது. இந்த விமானத்தில் தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை மற்றும் தே.மு.தி.க. மாநிலத் துணைச் செயலாளர் சுதீஷ் ஆகியோர் வந்தனர்.

    இதில் சுதீஷ் ரெகுலர் லாஞ்ச் வழியாக வெளியே வந்தார். அடுத்த சில மணித்துளிகளில் அண்ணாமலை வி.ஐ.பி. லாஞ்ச் வழியாக வெளியே வந்தார். இதைக் கண்டதும் அவர்களை வரவேற்க வந்திருந்த பா.ஜ.க. மற்றும் தே.மு.தி.க. தொண்டர்களிடையே பரபரப்பு ஏற்பட்டது.

    ஒரே விமானத்தில் பயணம் செய்ததால் 2 பேரும் பாராளுமன்றத் தேர்தல் கூட்டணி குறித்து பேசி இருக்கக் கூடும் என கருதப்படுகிறது. ஆனால் விமானத்தில் சுதீஷ் முன்பக்க இருக்கையிலும், அண்ணாமலை பின்பக்க இருக்கையிலும் அமர்ந்து பயணம் செய்ததாக தெரிகிறது. ஆகவே இருவரும் சந்தித்ததற்கான எந்த தகவலும் உறுதி செய்யப்படவில்லை.

    பாராளுமன்ற தேர்தலில் தே.மு.தி.க. தனது கூட்டணி நிலைப்பாட்டினை இன்னமும் அறிவிக்கவில்லை. அ.தி.மு.க. மற்றும் பாஜக ஆகிய 2 கட்சிகளும் அக்கட்சியுடன் கூட்டணி அமைக்க திரை மறைவில் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.

    ஆகவே ஒரே விமானத்தில் 2 கட்சிகளின் தலைவர்களும் பயணம் செய்தது தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பின்னர் அண்ணாமலை கரூருக்கும், சுதீஷ் தஞ்சாவூருக்கும் புறப்பட்டுச் சென்றனர். 2 கட்சிகளின் தொண்டர்களும் அவர்களை வரவேற்று வழி அனுப்பி வைத்தனர்.

    பாராளுமன்ற தேர்தல் கூட்டணி குறித்து இந்த மாத இறுதிக்குள் முடிவு செய்யப்படும் என்று தே.மு.தி.க. துணை பொதுச் செயலாளர் எல்.கே.சுதீஷ் கூறினார். #ParliamentElection #DMDK
    சென்னை:

    தே.மு.தி.க. துணை பொதுச் செயலாளர் எல்.கே.சுதீஷ் சென்னையில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    தே.மு.தி.க. நிறுவன தலைவர் விஜயகாந்த் நலமாக இருக்கிறார். அவர் விரைவில் தமிழகம் திரும்ப உள்ளார். பாராளுமன்ற தேர்தலில் கூட்டணி அமைப்பது குறித்து தேசிய மற்றும் மாநில கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. இந்த மாத இறுதிக்குள் முடிவு எட்டப்படும். கடந்த பாராளுமன்ற தேர்தலில் 14 தொகுதிகளில் போட்டியிட்டோம். அதுவே தான் எங்களுடைய கோரிக்கையாக இப்போதும் உள்ளது.

    கூட்டணி குறித்து விஜயகாந்த் வந்த பின்னர் தான் உறுதி செய்யப்படும். தே.மு.தி.க. இருக்கும் கூட்டணி வலிமையானதாக இருக்கும். நாங்கள் அங்கம் வகிக்கும் கூட்டணி, தமிழகத்தில் மாபெரும் வெற்றி பெறும். எங்கள் கூட்டணிக்கு விஜயகாந்த் வந்த பின்னர், பெயரிடப்படும். தேர்தல் தேதி அறிவித்த பின்னர் பிரசாரம் மற்றும் இதர தகவல்கள் பற்றி அறிவிப்போம்.

    இவ்வாறு அவர் கூறினார். #ParliamentElection #DMDK
    பாராளுமன்ற தேர்தலில் டி.டி.வி. தினகரனுடன், தே.மு.தி.க. கூட்டணி வைக்குமா? என கேட்டதற்கு மாநில துணை பொதுச்செயலாளர் சுதீஷ் பதில் அளித்தார். #DMDK #Sudhish
    திருச்சி:

    திருச்சி காந்திமார்க்கெட் பகுதியில் கடந்த 2017-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 17-ந்தேதி டெங்கு காய்ச்சல் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தே.மு.தி.க. சார்பில் பொதுமக்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டது. இதில் கட்சியின் மாநில துணை பொதுச்செயலாளர் எல்.கே. சுதீஷ் பங்கேற்றார்.

    இந்த நிகழ்ச்சியின் மூலம் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தியதாக சுதீஷ், மாநகர் மாவட்ட செயலாளர் டி.வி கணேஷ், நிர்வாகிகள் அலங்கராஜ், மில்டன் குமார் உள்பட 7 பேர் மீது திருச்சி காந்திமார்க்கெட் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

    இது தொடர்பான வழக்கு, திருச்சி ஜுடிசியல் மாஜிஸ்திரேட் எண்-5 கோர்ட்டில் நடந்து வருகிறது. இந்த வழக்கில் நேற்று நடைபெற்ற விசாரணையின்போது சுதீஷ் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் 7 பேரும் கோர்ட்டில் ஆஜர் ஆனார்கள்.

    சாட்சிகள் விசாரணை முடிந்ததும் இந்த வழக்கின் அடுத்த விசாரணையை வருகிற 14-ந்தேதிக்கு ஒத்தி வைத்து மாஜிஸ்திரேட் நாகப்பன் உத்தரவிட்டார்.

    கோர்ட்டில் இருந்து வெளியே வந்த சுதீஷ் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், ‘தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் நலமுடன் உள்ளார். விரைவில் தே.மு.தி.க.வின் மாநில மாநாடு பற்றிய அறிவிப்பு வெளியிடப்பட உள்ளது. இந்த மாநாட்டில் விஜயகாந்த் கலந்து கொண்டு பேசுவார்’ என்றார்.

    இதனை தொடர்ந்து நிருபர்கள் பாராளுமன்ற தேர்தலில் தே.மு.தி.க. டி.டி.வி. தினகரன் கட்சியான அ.ம.மு.க.வுடன் கூட்டணி வைப்பதற்கான பேச்சுவார்த்தை நடப்பதாக கூறப்படுகிறதே என கேட்டதற்கு அதற்கு, “இன்னும் காலம் இருக்கிறது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின்னர் யாருடன் கூட்டணி என்பதை விஜயகாந்த் முடிவு செய்து அறிவிப்பார்” என பதில் அளித்தார்.  #DMDK #Sudhish

    ×