search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "students suicide"

    • கூடுதல் சிறப்பு வகுப்புகளை நடத்தி மாணவர்களை மன அழுத்தத்திற்கு உள்ளாக்கக் கூடாது என்பன போன்ற அறிவுறுத்தல்களை பள்ளிக்கல்வித்துறைக்கு தமிழக அரசு வழங்க வேண்டும்.
    • பெற்றோரும் தங்களின் விருப்பங்களையும், கனவுகளையும் பிள்ளைகள் மீது திணிப்பதை தவிர்க்க வேண்டும்.

    சென்னை:

    பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் கனியாமூரில் தனியார் பள்ளி மாணவி ஸ்ரீமதியின் மர்மமரணம் காரணமாக ஏற்பட்ட அதிர்ச்சியும், விளைவுகளும் தணிவதற்கு முன்பே, 3 நாட்களில் நான்கு மாணவ, மாணவியர் தற்கொலை செய்து கொண்டிருப்பது மிகுந்த வேதனையும், கவலையும் அளிக்கிறது. இத்தகைய நிகழ்வுகள் சங்கிலித் தொடராக மாறிவிடாமல் தடுக்க வேண்டியது ஒட்டுமொத்த சமூகத்தின் கடமையாகும்.

    பெரும்பான்மையான பெற்றோர்கள் தங்களின் வாரிசுகளை குழந்தைகளாகப் பார்க்காமல் மதிப்பெண் எடுக்கும் எந்திரங்களாகவே பார்க்கின்றனர். அதனால், வீடுகளிலும் அவர்களை இயல்பாக இருக்க விடாமல், எல்லா நேரங்களிலும் படிக்கும்படி கட்டாயப்படுத்துகின்றனர்.

    கடந்த இரு ஆண்டுகளாக ஆன்லைன் வகுப்புகள் கடினமானதாக இருந்தாலும், தேர்வுகள் கடினமானதாக இல்லை;

    ஆனால், இப்போது நிலைமை திடீரென மாறி மருத்துவப் படிப்புக்கு தயாராக வேண்டும், அதிக மதிப்பெண் எடுக்க வேண்டும் என்பன போன்ற அழுத்தங்களை மாணவச் செல்வங்களால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. அதுவே தற்கொலைகளுக்கு காரணமாகும்.

    இதைத் தடுக்க வேண்டுமானால், மன அழுத்தத்தில் இருந்து மாணவர்களை மீட்க வேண்டும். அதற்காக, குறைந்தபட்சம் மேல்நிலை மாணவர்களுக்கு உளவியல் கலந்தாய்வுகள் வழங்கப்பட வேண்டும். வாரத்திற்கு ஒரு முறையாவது உயர்நிலை மற்றும் மேல்நிலை மாணவர்களுக்கு தன்னம்பிக்கையூட்டும் வகுப்புகள் பள்ளிகளில் நடத்தப்பட வேண்டும்.

    கூடுதல் சிறப்பு வகுப்புகளை நடத்தி மாணவர்களை மன அழுத்தத்திற்கு உள்ளாக்கக் கூடாது என்பன போன்ற அறிவுறுத்தல்களை பள்ளிக்கல்வித்துறைக்கு தமிழக அரசு வழங்க வேண்டும். பெற்றோரும் தங்களின் விருப்பங்களையும், கனவுகளையும் பிள்ளைகள் மீது திணிப்பதை தவிர்க்க வேண்டும். மாணவர்கள் புத்திசாலிகள்; அவர்களுக்கு கனவுகள் உண்டு; அந்த கனவை நனவாக்குவதற்காக அவர்கள் விருப்பப்பட்டு படிப்பர்.

    அவர்கள் மீது உங்கள் ஆசைகளை திணித்து, மன அழுத்தத்திற்கு உள்ளாக்கி தவறான முடிவுகளை எடுக்க பெற்றோர் காரணமாகி விடக்கூடாது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    மதுரையில் கல்லூரியில் சக மாணவரின் ராக்கிங் கொடுமையால் 2 மாணவர்கள் தற்கொலை செய்தனர். இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    மதுரை:

    மதுரை பீ.பி.குளம் திருவள்ளுவர் குறுக்குத் தெருவைச் சேர்ந்தவர் முருகன். இவரது மகன் முத்துப்பாண்டி (வயது19). இவர் தெப்பக்குளம் தியாகராஜா கல்லூரியில் பி.ஏ. பொருளாதாரம் முதலாம் ஆண்டு படித்து வந்தார். இவரது நண்பர்கள் செல்லூர் பரத், அருள்தாஸ் புரம் பாக்கியநாதன். இவர்களும் முத்துப்பாண்டியுடன் படித்து வந்தனர்.

    இவர்கள் 3 பேரும் கடந்த 2-ந்தேதி வி‌ஷம் குடித்து மயங்கினர். அவர்களை சிகிச்சைக்காக உறவினர்கள் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.

    இருப்பினும் சிகிச்சை பலனின்றி கடந்த 12-ந்தேதி பரத் பரிதாபமாக இறந்தார். முத்துப்பாண்டி இன்று காலை அரசு ஆஸ்பத்திரியில் இறந்தார். பாக்கியநாதன் தொடர்ந்து சிகிச்சையில் உள்ளார்.

    இதுகுறித்து முத்துப்பாண்டியின் தாயார் சித்ரா தேவி தல்லாகுளம் போலீசில் புகார் கொடுத்துள்ளார்.

    அதில், கல்லூரியில் சக மாணவரின் ராக்கிங் தொந்தரவால்தான் முத்துப்பாண்டி மற்றும் பரத் தற்கொலை செய்துள்ளனர் என தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து போலீசார் விசாரணைநடத்தினர். இதில் தியாகராஜா கல்லூரியில் படித்து வரும் திருப்புவனத்தைச் சேர்ந்த மாணவர் ஜெயசக்தி மற்றும் சிலர் சேர்ந்து ராக்கிங் செய்து இருப்பது தெரிய வந்தது.

    அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    மாணவர்களே தயவு செய்து படிப்பிற்காக மட்டுமல்ல வேறு எந்த காரணத்திற்காகவும் தங்களின் இன்னுயிரை மாய்த்துக்கொள்ள ஒரு போதும் முயற்சிக்க வேண்டாம் என்று வாசன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
    சென்னை:

    த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    மத்தியில் உள்ள பா.ஜ.க. அரசு தமிழகத்தில் நீட் தேர்வு முறைக்கு விலக்குப் பெற்றுத்தர முன்வரவில்லை. மேலும் தமிழக அரசும் மாணவர்கள் நலன் கருதி நீட் தேர்வு முறையில் இருந்து விலக்கு பெற்றுத்தர உரிய நடவடிக்கைகளை முன்னரே எடுத்து, விலக்கு பெற்றுத்தந்திருக்க வேண்டும்.

    அதனையும் முறையே, காலத்தே செய்ய தவறிய அரசாக தமிழக அரசு செயல்பட்டுள்ளது. நேற்றைய தினம் திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த மாணவி சுபஸ்ரீ நீட் தேர்வில் தேர்ச்சி பெற முடியாத போனதால் மனம் உடைந்து தன் உயிரை மாய்த்துக்கொண்டது மிகுந்த வருத்தத்துக்கு உரியது.

    ஏற்கனவே விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த மாணவி நீட் தேர்வில் தோல்வி அடைந்ததால் மனம் உடைந்து உயிரிழந்ததும் வேதனைக்குரியது. உயிரிழந்த மாணவி சுபஸ்ரீயின் குடும்பத்திற்கு த.மா.கா. சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன். மேலும் தமிழக அரசு உயிரிழந்த மாணவியின் குடும்பத்திற்கு நிவாரணமாக 25 இலட்சம் ரூபாய் கொடுக்க முன்வர வேண்டும்.

    மாணவ, மாணவிகளே நீங்கள் உங்களுக்காகவும், உங்கள் குடும்பத்திற்காகவும், நாட்டிற்காகவும் உங்கள் வாழ்க்கையை நல்ல முறையில் தொடர வேண்டும். நீங்கள் நாட்டின் வருங்கால தூண்கள். எப்பேற்பட்ட கஷ்டத்திலும், எதற்காகவும், படிப்பிற்காகவும் அல்லது வேறு எந்த பிரச்சனைக்காகவும் மனம் உடையாமல், தளராமல் தொடர்ந்து முயற்சித்து, அடுத்தக்கட்டத்திற்கு செல்ல வேண்டும். மாணவர்களே தயவு செய்து படிப்பிற்காக மட்டுமல்ல வேறு எந்த காரணத்திற்காகவும் தங்களின் இன்னுயிரை மாய்த்துக்கொள்ள ஒரு போதும் முயற்சிக்க வேண்டாம் என்று த.மா.கா. சார்பில் வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறேன்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. #TamilMaanilacongress #GKVasan
    ×