என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மதுரையில் ராக்கிங் கொடுமையால் 2 மாணவர்கள் தற்கொலை
Byமாலை மலர்16 March 2019 8:20 AM GMT (Updated: 16 March 2019 8:20 AM GMT)
மதுரையில் கல்லூரியில் சக மாணவரின் ராக்கிங் கொடுமையால் 2 மாணவர்கள் தற்கொலை செய்தனர். இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுரை:
மதுரை பீ.பி.குளம் திருவள்ளுவர் குறுக்குத் தெருவைச் சேர்ந்தவர் முருகன். இவரது மகன் முத்துப்பாண்டி (வயது19). இவர் தெப்பக்குளம் தியாகராஜா கல்லூரியில் பி.ஏ. பொருளாதாரம் முதலாம் ஆண்டு படித்து வந்தார். இவரது நண்பர்கள் செல்லூர் பரத், அருள்தாஸ் புரம் பாக்கியநாதன். இவர்களும் முத்துப்பாண்டியுடன் படித்து வந்தனர்.
இவர்கள் 3 பேரும் கடந்த 2-ந்தேதி விஷம் குடித்து மயங்கினர். அவர்களை சிகிச்சைக்காக உறவினர்கள் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.
இருப்பினும் சிகிச்சை பலனின்றி கடந்த 12-ந்தேதி பரத் பரிதாபமாக இறந்தார். முத்துப்பாண்டி இன்று காலை அரசு ஆஸ்பத்திரியில் இறந்தார். பாக்கியநாதன் தொடர்ந்து சிகிச்சையில் உள்ளார்.
இதுகுறித்து முத்துப்பாண்டியின் தாயார் சித்ரா தேவி தல்லாகுளம் போலீசில் புகார் கொடுத்துள்ளார்.
அதில், கல்லூரியில் சக மாணவரின் ராக்கிங் தொந்தரவால்தான் முத்துப்பாண்டி மற்றும் பரத் தற்கொலை செய்துள்ளனர் என தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து போலீசார் விசாரணைநடத்தினர். இதில் தியாகராஜா கல்லூரியில் படித்து வரும் திருப்புவனத்தைச் சேர்ந்த மாணவர் ஜெயசக்தி மற்றும் சிலர் சேர்ந்து ராக்கிங் செய்து இருப்பது தெரிய வந்தது.
அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுரை பீ.பி.குளம் திருவள்ளுவர் குறுக்குத் தெருவைச் சேர்ந்தவர் முருகன். இவரது மகன் முத்துப்பாண்டி (வயது19). இவர் தெப்பக்குளம் தியாகராஜா கல்லூரியில் பி.ஏ. பொருளாதாரம் முதலாம் ஆண்டு படித்து வந்தார். இவரது நண்பர்கள் செல்லூர் பரத், அருள்தாஸ் புரம் பாக்கியநாதன். இவர்களும் முத்துப்பாண்டியுடன் படித்து வந்தனர்.
இவர்கள் 3 பேரும் கடந்த 2-ந்தேதி விஷம் குடித்து மயங்கினர். அவர்களை சிகிச்சைக்காக உறவினர்கள் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.
இருப்பினும் சிகிச்சை பலனின்றி கடந்த 12-ந்தேதி பரத் பரிதாபமாக இறந்தார். முத்துப்பாண்டி இன்று காலை அரசு ஆஸ்பத்திரியில் இறந்தார். பாக்கியநாதன் தொடர்ந்து சிகிச்சையில் உள்ளார்.
இதுகுறித்து முத்துப்பாண்டியின் தாயார் சித்ரா தேவி தல்லாகுளம் போலீசில் புகார் கொடுத்துள்ளார்.
அதில், கல்லூரியில் சக மாணவரின் ராக்கிங் தொந்தரவால்தான் முத்துப்பாண்டி மற்றும் பரத் தற்கொலை செய்துள்ளனர் என தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து போலீசார் விசாரணைநடத்தினர். இதில் தியாகராஜா கல்லூரியில் படித்து வரும் திருப்புவனத்தைச் சேர்ந்த மாணவர் ஜெயசக்தி மற்றும் சிலர் சேர்ந்து ராக்கிங் செய்து இருப்பது தெரிய வந்தது.
அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X