என் மலர்
நீங்கள் தேடியது "நிலச்சரி"
- ஜம்முவில் உள்ள தோடா மாவட்டத்தில் கனமழை கொட்டித் தீர்த்தது.
- வைஷ்ணோ தேவி கோவிலுக்கு செல்லும் பாதையில் நிலச்சரிவு ஏற்பட்டு பலர் காயம்.
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. சில இடங்களில் மேகவெடிப்பு காரணமாக வெள்ளப் பெருக்கு ஏற்பட்டதுடன, நிலச்சரிவு ஏற்பட்டு கடுமையாக பொருட்சேதத்தையும், உயிர்ச்சேதத்தையும் ஏற்படுத்தியது.
இந்த நிலையில் இன்று தோடா மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் கனமழை கொட்டித்தீர்த்தது. இதனால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
இந்த கனமழைக் காரணமாக நான்கு பேர் உயிரிழந்தனர். மழை வெள்ளத்தில் சாலை அடித்துச் செல்லப்பட்டதால் தோடா- கிஷ்த்வாரை இணைக்கும் NH-244 சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
வைஷ்ணவி தேவி கோவிலுக்கு செல்வதற்கான வழியில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதில் பலர் காயம் அடைந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. இதனால் யாத்திரை நிறுத்தப்பட்டுள்ளது.
ஜம்மு-வின் பல்வேறு பகுதியில் மிகவும் மோசமான நிலையை எட்டியுள்ளது. அங்குள்ள சூழ்நிலை குறித்து ஆராய ஸ்ரீநகரில் இருந்து ஜம்முவிற்கு செல்ல இருக்கிறேன். மீட்புப்பணியை துரிதப்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது என ஜம்மு-காஷ்மீர் மாநில முதல்வர் உமர் அப்துல்லா தெரிவித்தார். ஜம்மு-காஷ்மீரில் உள்ள முக்கியமான அறுகளான ராவி மற்றும் தாவியில் அபாய கட்டத்தை தாண்டி வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் தாழ்வான பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது.
கரையோர மக்கள் பாதுகாப்பான இடத்திற்கு வெளியேற தொடர்ந்து அறிவுறுத்தப்பட்டுள்ளது.
- தற்காலிக பாலம் அமைக்கும் பணியில் ராணுவ வீரர்கள்.
- 100-க்கும் மேற்பட்டவர்கள் காய மடைந்துள்ளனர்.
வயநாட்டில் நிலச்சரிவு ஏற்பட்ட பகுதிகளில் மிகப்பெரிய பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. அங்கு பெரும் சேதம் ஏற்பட்டிருப்பதாவும், தொடரந்து பெய்துவரும்ம கனமழை காரணமாக நிலச்சரிவில் சிக்கிகயிருக்கும் பலரை மீட்க முடியாத நிலை ஏற்பட்டதாலும் அங்கு ராணுவ வீரர்கள் வரவழைக்கப்பட்டனர்.
மொத்தம் 225 ராணுவ வீரர்கள் வீரர்கள் வயநாட்டில் மீட்பு பணிகளில் ஈடுபடுகின்றனர். மீட்பு பணி மட்டுமின்றி, நிலச்சரிவால் அடித்துச்செல்லப்பட்ட இடங்களில் தற்காலிக பாலம் அமைக்கும் பணியிலும் ராணுவ வீரர்கள் ஈடுபட்டனர்.

நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் காயம்
வயநாடு நிலச்சரிவில் 40-க்கும் மேற்பட்டவர்கள் மண்ணுள் புதைத்து இறந்துவிட்டனர். பலியானவர்களில் ஏராளமான குழந்தைகளும் அடங்குவர். சம்பவம் நடந்தது அதிகாலை 2 மணி என்பதால் பலர் தூக்கத்திலேயே மண்ணில் புதைந்து சமாதியானார்கள்.
கனமழை பெய்தபடி இருந்ததால், ஒருவித பதட்டத்துடனே வீட்டுக்குள் இருந்தவர்கள் மண்ணுக்குள் புதைந்தனர். இந்த சம்பவத்தில் 100-க்கும் மேற்பட்டவர்கள் காய மடைந்துள்ளனர். அவர்களில் 70-க்கும் மேற்பட்டவர்கள் பல்வேறு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். அவர்களில் 10-க்கும் மேற்பட்டவர்கள் கவலைக்கிடமாக இருப்பதாக கூறப்படுகிறது.






