என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "புவனகிரி"

    • பஸ்சில் இருந்த பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர்.
    • பாதியில் இறக்கிவிடப்பட்ட பயணிகள் நீண்ட நேரமாக காத்திருந்தும் மாற்று பஸ் வருவதில் காலதாமதம் ஏற்பட்டது.

    புவனகிரி:

    கடலூர் மாவட்டம் புவனகிரி அருகே தெற்குத்திட்டை கிராம பஸ் நிறுத்தத்தில் சிதம்பரத்திலிருந்து குறிஞ்சிப்பாடி மகளிர் இலவச பேருந்து சென்று கொண்டிருந்தது.

    அப்போது திடீரென பின்பக்க படிக்கட்டின் கீழ் உள்ள டயரில் இருந்து அதிக அளவில் புகையும் துர்நாற்றமும் ஏற்பட்டதால் உடனடியாக பஸ் நிறுத்தப்பட்டது. இதனால் பஸ்சில் இருந்த பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர். மேலும் பஸ்சில் பயணம் செய்த 30-க்கும் மேற்பட்ட பயணிகள் இறக்கி விடப்பட்டனர்.

    பஸ் டயர் தேய்மானம் ஆகி உள்ளே உள்ள டியூப் ஆகியவை சூடு ஏறி புகை வந்துள்ளது என தெரிகிறது. இதனால் துர்நாற்றம் ஏற்பட்டது.

    இந்நிலையில் பாதியில் இறக்கிவிடப்பட்ட பயணிகள் நீண்ட நேரமாக காத்திருந்தும் மாற்று பஸ் வருவதில் காலதாமதம் ஏற்பட்டது. மேலும் தமிழக அரசின் போக்குவரத்து துறைக்கு பயணிகள் பழுது இல்லா பஸ்சை இயக்குமாறு கோரிக்கை வைத்துள்ளனர்.

    • போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.
    • நகை, பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.

    புவனகிரி:

    புவனகிரி அருகே வீட்டின் ஓட்டை பிரித்து 20 பவுன் நகை கொள்ளையடிக்கப்பட்டது.

    கடலூர் மாவட்டம் புவனகிரி அருகே உள்ள பு. மணவெளி கிராமத்தை சேர்ந்தவர் பாண்டு ரங்கன். இவர் இறந்து விட்டார். இவரது மனைவி பூபதி (70). இவர்களுக்கு 5 மகன்கள் உள்ளனர். அவர்கள் அனைவரும் வெளியூரில் வசித்து வருகின்றனர். பூபதி மட்டும் வீட்டில் தனியாக வசித்து வந்தார்.

    நேற்று இரவு பூபதி வீட்டில் தூங்கி கொண்டிருந்தார். நள்ளிரவு அங்கு வந்த மர்ம நபர்கள் வீட்டின் ஓட்டை பிரித்து உள்ளே இறங்கினர்.

    பின்னர் பீரோவை உடைத்து அதில் வைக்கப்பட்டிருந்த 20 பவுன் நகை மற்றும் ரூ. 15 ஆயிரம் பணத்தை கொள்ளையடித்து சென்று விட்டனர்.

    இன்று அதிகாலை எழுந்த பூபதி நகை, பணம் கொள்ளையடிக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். அவர் சத்தம் போடவே அருகே வசித்து வருபவர்கள் அங்கு வந்தனர். அவர்கள் உதவியுடன் பூபதி புவனகிரி போலீசில் புகார் செய்தார். போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். நகை, பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகிறார்கள். இந்த சம்பவம் பு. மணவெளி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • வெங்கடேசப் பெருமாள், ஸ்ரீதேவி - பூதேவியுடன் நின்ற கோலத்தில் காட்சி தருகிறார்.
    • விரைவில் திருமணம் நடைபெற வைகுண்டவாசன் அருள்பாலிப்பார்.

    ஆலய முகப்புத் தோற்றம்

    அனந்தன் என்னும் பெருமாளுக்கு இந்தப் பூவுலகம் முழு வதும் சிறப்பு வாய்ந்த பல ஆலயங்கள் உள்ளன. கிராமப்புறங்களில் மிகப் பழமை வாய்ந்த வைணவக் கோவில்கள் இருப்பது மிக மிக அரிது.


    ஆனால் கடலூர் மாவட்டம் புவனகிரி வட்டத்திலுள்ள பு.உடையூர் கிராமத்தில் அப்படி ஒரு பெருமைமிகு பெருமாள் ஆலயம் அமைந்திருக்கிறது. இந்த ஆலயம் கல்யாண வெங்கடேசப் பெருமாள் கோவில் ஆகும்.

    இவ்வாலயம் மன்னர் காலத்தில் கட்டப்பட்ட ஆலயம் என்பதை மட்டும், அதன் கட்டிடக்கலையை வைத்து கணிக்க முடிகிறது. ஆனால் யாரால் கட்டப்பட்டது என்பதற்கான சான்று எதுவும் இல்லை.

    பல நூறு வருடங்களாக சிதிலமடைந்து கிடந்த இந்த ஆலயத்தில், ராமானுஜர் சில காலம் தங்கியிருந்ததாகவும், அவர் சிதிலமடைந்த ஆலயத்தை புதுப்பித்ததாகவும் தற்போதைய தல வரலாறு தெரிவிக்கிறது.

    தில்லையை தரிசிக்க வந்த ராமானுஜர், இந்த வழியாகத்தான் தில்லைக்குச் சென்றிருக்கிறார். அப்போது இந்த கிராமத்தில் சிதிலமடைந்து கிடந்த கல்யாண வெங்கடேசப் பெருமாள் ஆலயத்தைப் பார்த்துள்ளார்.

    அப்பகுதி மக்களிடம், "ஏன் இப்படி இந்த ஆலயத்தை கண்டுகொள்ளாமல் விட்டு விட்டீர்கள்? பரந்தாமன் ஆலயத்தை பார்ப்பதற்கே, மனது பாரமாக இருக்கிறதே!" என்று வருத்தப்பட்டாராம்.

    ஊர் மக்களோ, "பல நூற்றாண்டு காலமாகவே இந்த ஆலயம் சிதிலமடைந்துதான் இருக்கிறது. இந்த ஆலயத்தை கட்டும் அளவுக்கு, எங்களிடம் போதிய பொருளாதாரம் இல்லை" என்று கூறினராம்.

    உடனே ராமானுஜர் தன் பயணத்தை பாதியில் நிறுத்திவிட்டு, இவ்வூரில் சில காலம் தங்கி ஊர் மக்களின் உடல் உழைப்போடு சிதைந்து கிடந்த கல்யாண வெங்கடேசப் பெருமாள் ஆலயத்தை பழமை மாறாமல் அப்படியே கட்டி முடித்திருக்கிறார் என்ற செவி வழிச் செய்தி நமக்குக் கிடைக்கிறது. அதன்பிறகு அவ்வூர் மக்கள், இந்த பெருமாளைக் கொண்டாடத் தொடங்கினர்.


    கோவில் அமைப்பு

    முன்மண்டபம் அதில் திருநாமம், அனுமன், கருடாழ்வார் ஆகியோரின் சுதை சிற்பங்கள் அழகுற காட்சி தருகின்றன. அவைகளை வணங்கிவிட்டு உள்ளே சென்றால், பலிபீடம், கருடாழ்வார் ஆகியோரை தரிசிக்கலாம்.

    ஆலயத்தில் நுழைந்ததும் முதலில் இருப்பது மணி மண்டபம். அடுத்தது மகா மண்டபம். அர்த்த மண்டபத்தின் வாசலில் ஜெயன், விஜயன் ஆகிய இரண்டு துவார பாலகர்கள் கம்பீரமாக காட்சி தருகிறார்கள். அந்த மண்டபத்தில் சன்னிதிகள் எதுவும் கிடையாது.

    கிழக்கு நோக்கிய கருவறையில் கல்யாண வெங்கடேசப் பெருமாள், ஸ்ரீதேவி - பூதேவியுடன் நின்ற கோலத்தில் காட்சி தருகிறார். இவர்களுக்கு முன்பாக ஸ்ரீதேவி-பூதேவியுடன் கூடிய வரதராஜப் பெருமாள், இடது பக்கம் சக்கரத்தாழ்வார், வலது பக்கம் பெருந்தேவி தாயார் ஆகியோர் அருள் பாலிக்கின்றனர்.

    தன் திருநாமத்திலேயே கல்யாண வெங்கடேசப் பெருமாள் என்று இருப்பதால், இவ்வாலயம் திருமணத் தடையை போக்கும் சிறப்பு மிக்க ஆலயமாகத் திகழ்கிறது.

    பல்வேறு காரணங்களால் தடைப்பட்டு வந்த திரு மணங்கள் கைகூட, இவ்வாலய பெருமாள் மீது நம்பிக்கை வைத்து, அவரது சன்னிதி முன்பாக நின்று 'கோவிந்தா..' என்று கோஷம் எழுப்பி பிரார்த்தனை செய்தாலே போது மானது.

    தடைகளை அகற்றி விரைவில் திருமணம் நடைபெற வைகுண்டவாசன் அருள்பாலிப்பார் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கை ஆகும்.

    திருமணத்திற்குப் பிறகு இல்லற வாழ்க்கையில் சின்னச் சின்ன சலசலப்புகள் வருவது சகஜம்தான். ஆனால் அதுவே கோபமாக மாறி கணவன் - மனைவியை பல நேரங்களில் பிரிப்பதுண்டு.

    மனம் வருத்தத்தால் மண வாழ்க்கையில் பிரிந்து வாழும் தம்பதிகள் மீண்டும் இணைந்து வாழவும் இவ்வாலய கல்யாண வெங்கடேசப் பெருமாளை துளசி மாலை சூட்டி வணங்குகிறார்கள்.


    அப்படி ஒன்றுசேரும் தம்பதியர் இருவரும் இங்கு வந்து, துளசியால் இறைவனை அர்ச்சித்து, தங்களின் நன்றிக் கடனை செலுத்துகிறார்கள்.

    இவ்வாலயம் அமைந்த பு.உடையூர் கிராமத்தின் முக்கியமான தொழிலாக கருதப்படுவது விவசாயம் தான்.

    இங்குள்ள விவசாயிகள், தங்கள் விவசாயப் பணியை தொடங்கும் முன்பு, நாராயணனின் நாமத்தை கூறி பிரார்த்தனை செய்துவிட்டுதான், விவசாயப் பணிகளைத் தொடங்குகிறார்கள். அப்படி செய்யப்படும் விவசாயம், அமோக விளைச்சலை அள்ளித் தருவதாக சொல்கிறார்கள்.

    கல்வியில் சிறந்து விளங்க இங்கிருக்கும் அனுமனுக்கு கல்வி பயிலும் மாணவ - மாணவிகள், 'ஸ்ரீராமஜெயம்' எழுதி மாலையாக தொடுத்து அணிவித்து பிரார்த்தனை செய்கின்றனர். அப்படி செய்பவர்களுக்கு மன உறுதியும், தன்னம்பிக்கையும் பிறப்பதோடு, கல்வியிலும் சிறந்து விளங்குவதாக பக்தர்கள் கூறுகிறார்கள்.

    இந்த ஆலயத்தில் ஆண்டு விழா மற்றும் வைகுண்ட ஏகாதசி ஆகிய விழாக்கள் மட்டுமே கொண்டாடப்படுகிறது. வைகுண்ட ஏகாதசி அன்று காலையும், மாலையும் சிறப்பு திருமஞ்சனம் செய்யப்படுகிறது. விசேஷ அலங்காரம் செய்யப்பட்டு அன்று ஒரு நாள் மட்டும் இரவு முழுவதும் ஆலயம் திறந்திருக்கும்.

    அதோடு வாரம் தோறும் சனிக்கிழமைகள், மாதந்தோறும் ஏகாதசி ஆகிய நாட்களிலும், கல்யாண வெங்கடேசப் பெருமாளுக்கு சிறப்பு திருமஞ்சனம் நடை பெறும்.

    இந்த ஆலயம் தினமும் காலை 9 மணி முதல் பகல் 12 மணி வரை மட்டுமே திறந்திருக்கும். சனிக்கிழமை மட்டும் மாலை வேளையிலும் திறக்கப்படும்.

    அமைவிடம்

    கடலூர் மாவட்டம் புவனகிரி மற்றும் சிதம்பரத்தில் இருந்து பு.உடையூர் கிராமத்திற்கு நகரப் பேருந்து வசதி உள்ளது.

    ×