என் மலர்
நீங்கள் தேடியது "நடுவர்கள்"
- ரோகித் 7 ரன்னில் இருக்கும் போது பரூக்கி பந்து வீச்சில் எல்பிடபிள்யூ ஆனார்.
- இதனை கள நடுவர் அவுட் கொடுப்பார்.
ஜெய்ப்பூர்:
நடப்பு ஐபிஎல் தொடரின் நேற்றைய போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின. இந்த போட்டியில் மும்பை 100 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்த போட்டியில் நடுவர்கள் மும்பை இந்தியன்ஸ் அணிக்குச் சாதகமாகச் செயல்பட்டதாக மீண்டும் சர்ச்சை எழுந்துள்ளது. மும்பை இந்தியன்ஸ் அணி என்றாலே நடுவர்கள் அந்த அணிக்குச் சாதகமாகச் செயல்படுவார்கள் என்பது பல ஆண்டுகளாக இருந்து வரும் குற்றச்சாட்டு.
அந்த வகையில் நேற்றைய போட்டியில் ரோகித் 7 ரன்னில் இருக்கும் போது பரூக்கி பந்து வீச்சில் எல்பிடபிள்யூ ஆவார். இதற்கு கள நடுவர் அவுட் கொடுப்பார்.
அதன் பின் ரோகித் சர்மா எதிரில் நின்றிருந்த ரியான் ரிக்கல்டனுடன் டிஆர்எஸ் எடுப்பது பற்றி விவாதித்து, பின்னர் ரிவ்யூ முடிவை எடுத்தார். ஆனால், டிஆர்எஸ் முடிவை எடுப்பதற்கு 15 வினாடிகள் மட்டுமே இருக்கும் நிலையில், சரியாக நேரம் முடிவடைந்து திரையில் பூஜ்யம் (0) எனக் காட்டப்பட்ட பின்னரே ரோகித் சர்மா ரிவ்யூ கேட்டார். இதனால் ரோகித் சர்மா நேரம் முடிந்த பின்பே ரிவ்யூ எடுத்தாக சிலரும், அவர் நேரம் முடியும் முன்னேரே ரிவ்யூ எடுத்ததாக சிலரும் கூறி வருகின்றனர்.
இது ஒரு புறம் இருக்க, ரிவ்யூவின் போது மற்றொரு சர்ச்சை எழுந்தது. ரிவ்யூவில், பந்து ரோகித் சர்மாவின் லெக் ஸ்டம்பிற்கு வெளியே பாதி அளவுக்கு பிட்சானது தெரிந்தது. விதிப்படி, பந்து 50 சதவீதத்திற்கும் அதிகமாக லெக் ஸ்டம்பிற்கு வெளியே பிட்சாகியிருந்தால் அவுட் கொடுக்க முடியாது. அந்தக் காரணத்தைச் சுட்டிக்காட்டி, மூன்றாவது நடுவர் நாட் அவுட் என அறிவித்தார்.
ஆனால், சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் மும்பை இந்தியன்ஸ் அணிக்குச் சாதகமாக நடுவர்கள் செயல்பட்டதாக விமர்சனம் செய்து வருகின்றனர்.
ரிவ்யூவில், பந்து 50% கோட்டிற்கு உள்ளேயும் 50% வெளியேயும் பிட்சானதாகவே தெரிந்தது. இது குறித்து முடிவெடுப்பது சிக்கலான ஒன்றுதான் என்றாலும், பொதுவாக அம்பயர்கள் மும்பை இந்தியன்ஸ் அணிக்குச் சாதகமாகச் செயல்படுவதாக ஒரு கருத்து நிலவும் நிலையில், இந்த விவகாரம் அதை மேலும் அதிகரித்தது.
இந்த ரிவ்யூவில் தப்பிய ரோகித் சர்மா அதன் பின்னர் அதிரடியாக விளையாடி 36 பந்துகளில் 53 ரன்கள் சேர்த்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
- இந்தியா தனது தொடக்க ஆட்டத்தில் வரும் ஜூன் 5-ந்தேதி அயர்லாந்துடன் நியூயார்க் நகரில் மோதுகிறது.
- 2019-ம் ஆண்டு உலகக் கோப்பையில் டோனி ரன் அவுட் ஆகும் போது ரிச்சர்ட் கெட்டில்பரோ கொடுத்த ரியாக்ஷன் இப்போது வரை மறக்க முடியாத ஒன்றாக இருந்து வருகிறது.
20 அணிகள் கலந்துகொள்ள உள்ள 9-வது உலகக்கோப்பை தொடர் அடுத்த மாதம் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடைபெற உள்ளது. இதில் இந்திய அணி 'ஏ' பிரிவில் இந்திய, பாகிஸ்தான், அயர்லாந்து, கனடா, அமெரிக்கா ஆகிய அணிகளுடன் இடம்பெற்றுள்ளது. இந்தியா தனது தொடக்க ஆட்டத்தில் வரும் ஜூன் 5-ந்தேதி அயர்லாந்துடன் நியூயார்க் நகரில் மோதுகிறது.
இந்நிலையில் இந்த தொடருக்கான நடுவர்கள் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.
கிறிஸ் பிரவுன், தர்மசேனா, கஃபேனி, கோஃப், ஹோல்ட்ஸ்டாக், ரிச்சர்ட் இல்லிங்வொர்த், பலேக்கர், ரிச்சர்ட் கெட்டில்பரோ, மதனகோபால், மேனன், சாம் நோகஜ்ஸ்கி, அஹ்சன் ராசா, ரஷீத் ரியாஸ், ரீஃபெல், லாங்டன் ருசேர், ஷாஹித் சைகத், ராட் டக்கர், அலெக்ஸ் வார்ப், வில்சன் மற்றும் ஆசிப் யாகூப் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
நடுவர் என்றாலே இந்திய அணிக்கு நியாபகம் வருவது ரிச்சர்ட் கெட்டில்பரோ. அவர் நாக் அவுட் சுற்றில் இந்திய அணிக்கான போட்டியில் நடுவராக இருந்தால் அந்த போட்டியில் கிட்டத்தட்ட இந்தியா தோல்வியடைந்து விடும் என்று ரெக்கார்ட் சொல்கிறது.
குறிப்பாக 2019-ம் ஆண்டு உலகக் கோப்பையில் டோனி ரன் அவுட் ஆகும் போது இவர் கொடுத்த ரியாக்ஷன் இப்போது வரை மறக்க முடியாத ஒன்றாக இருந்து வருகிறது. மேலும் இவர் ஒருநாள் உலகக் கோப்பை தொடரில் விராட் கோலி சதம் அடிக்க இவர் காரணமாக திகழ்ந்தார்.

வங்காளதேச அணிக்கு எதிரான போட்டியில் சதம் அடிக்க 2 ரன்னும் அணியின் வெற்றிக்கு 2 ரன்னும் தேவை என்ற நிலையில் பந்து வீச்சாளர் வைடு வீசுவார். ஆனால் அதனை நடுவராக இருந்த ரிச்சர்ட் வைடு கொடுக்காமல் ஒரு ரியாக்ஷன் கொடுப்பார். அதுவும் யாராலும் மறந்திருக்க முடியாது.
- சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான 12 பேர் கொண்ட நடுவர்கள் பட்டியலை ஐசிசி இன்று அறிவித்துள்ளது.
- அவர்களில் ஆறு பேர் 2017-ம் ஆண்டு ஐசிசி சாம்பியன்ஸ் டிராபியிலும் இடம்பெற்றிருந்தனர்.
துபாய்:
9-வது ஐ.சி.சி. சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டி வருகிற 19-ந்தேதி முதல் மார்ச் 9-ந் தேதி வரை பாகிஸ்தானிலும், துபாயிலும் நடைபெறுகிறது.
8 அணிகள் இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது. ஏ பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம், நியூசிலாந்து அணிகள் இடம் பெற்றுள்ளன. பி பிரிவில் ஆப்கானிஸ்தான், ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா அணிகள் இடம் பெற்றுள்ளன.
இந்நிலையில் இந்த தொடருக்கான 12 பேர் கொண்ட நடுவர்கள் பட்டியலை ஐசிசி இன்று அறிவித்துள்ளது. அவர்களில் ஆறு பேர் 2017-ம் ஆண்டு ஐசிசி சாம்பியன்ஸ் டிராபியிலும் இடம்பெற்றிருந்தனர்.
இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான முந்தைய சாம்பியன்ஸ் டிராபியின் இறுதிப் போட்டியில் நின்ற ரிச்சர்ட் கெட்டில்பரோவுடன் கிறிஸ் கஃபானி, குமார் தர்மசேனா, ரிச்சர்ட் இல்லிங்வொர்த், பால் ரீஃபெல் மற்றும் ராட் டக்கர் ஆகியோர் இணைந்துள்ளனர்,

போட்டி நடுவர்கள் குழுவிற்கு டேவிட் பூன், ரஞ்சன் மதுகல்லே மற்றும் ஆண்ட்ரூ பைக்ராஃப்ட் ஆகியோர் தலைமை தாங்குவார்கள். பூன் 2017 சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டிக்கு நடுவராக இருந்தார். அதே நேரத்தில் மதுகல்லே 2013 இறுதிப் போட்டிக்கு பிறகு மீண்டும் வருகிறார். மேலும் பைக்ராஃப்ட் 2017 போட்டியிலும் இடம்பெற்றார்.
2025 சாம்பியன்ஸ் டிராபிக்கு இந்தியாவில் இருந்து எந்த நடுவர்களையும் ஐ.சி.சி தேர்வு செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
நடுவர்கள் விவரம்:-
குமார் தர்மசேனா
கிறிஸ் கஃபானி
மைக்கேல் கோ
அட்ரியன் ஹோல்ட்ஸ்டாக்
ரிச்சர்ட் இல்லிங்வொர்த்
ரிச்சர்ட் கெட்லெபரோ
அஹ்சன் ராசா
பால் ரீஃபெல்
ஷர்புத்தோலா இப்னே ஷாஹித்
ரோட்னி டக்கர்
அலெக்ஸ் வார்ஃப்
ஜோயல் வில்சன்
போட்டி நடுவர்கள் விவரம்:-
டேவிட் பூன்
ரஞ்சன் மதுகல்லே
ஆண்ட்ரூ பைக்ராஃப்ட்






