என் மலர்tooltip icon

    ஐ.பி.எல்.(IPL)

    வீடியோ: அம்பானி Umpires.. ரோகித் அவுட் சர்ச்சை.. கொந்தளித்த ரசிகர்கள்
    X

    வீடியோ: அம்பானி Umpires.. ரோகித் அவுட் சர்ச்சை.. கொந்தளித்த ரசிகர்கள்

    • ரோகித் 7 ரன்னில் இருக்கும் போது பரூக்கி பந்து வீச்சில் எல்பிடபிள்யூ ஆனார்.
    • இதனை கள நடுவர் அவுட் கொடுப்பார்.

    ஜெய்ப்பூர்:

    நடப்பு ஐபிஎல் தொடரின் நேற்றைய போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின. இந்த போட்டியில் மும்பை 100 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    இந்த போட்டியில் நடுவர்கள் மும்பை இந்தியன்ஸ் அணிக்குச் சாதகமாகச் செயல்பட்டதாக மீண்டும் சர்ச்சை எழுந்துள்ளது. மும்பை இந்தியன்ஸ் அணி என்றாலே நடுவர்கள் அந்த அணிக்குச் சாதகமாகச் செயல்படுவார்கள் என்பது பல ஆண்டுகளாக இருந்து வரும் குற்றச்சாட்டு.

    அந்த வகையில் நேற்றைய போட்டியில் ரோகித் 7 ரன்னில் இருக்கும் போது பரூக்கி பந்து வீச்சில் எல்பிடபிள்யூ ஆவார். இதற்கு கள நடுவர் அவுட் கொடுப்பார்.

    அதன் பின் ரோகித் சர்மா எதிரில் நின்றிருந்த ரியான் ரிக்கல்டனுடன் டிஆர்எஸ் எடுப்பது பற்றி விவாதித்து, பின்னர் ரிவ்யூ முடிவை எடுத்தார். ஆனால், டிஆர்எஸ் முடிவை எடுப்பதற்கு 15 வினாடிகள் மட்டுமே இருக்கும் நிலையில், சரியாக நேரம் முடிவடைந்து திரையில் பூஜ்யம் (0) எனக் காட்டப்பட்ட பின்னரே ரோகித் சர்மா ரிவ்யூ கேட்டார். இதனால் ரோகித் சர்மா நேரம் முடிந்த பின்பே ரிவ்யூ எடுத்தாக சிலரும், அவர் நேரம் முடியும் முன்னேரே ரிவ்யூ எடுத்ததாக சிலரும் கூறி வருகின்றனர்.

    இது ஒரு புறம் இருக்க, ரிவ்யூவின் போது மற்றொரு சர்ச்சை எழுந்தது. ரிவ்யூவில், பந்து ரோகித் சர்மாவின் லெக் ஸ்டம்பிற்கு வெளியே பாதி அளவுக்கு பிட்சானது தெரிந்தது. விதிப்படி, பந்து 50 சதவீதத்திற்கும் அதிகமாக லெக் ஸ்டம்பிற்கு வெளியே பிட்சாகியிருந்தால் அவுட் கொடுக்க முடியாது. அந்தக் காரணத்தைச் சுட்டிக்காட்டி, மூன்றாவது நடுவர் நாட் அவுட் என அறிவித்தார்.

    ஆனால், சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் மும்பை இந்தியன்ஸ் அணிக்குச் சாதகமாக நடுவர்கள் செயல்பட்டதாக விமர்சனம் செய்து வருகின்றனர்.

    ரிவ்யூவில், பந்து 50% கோட்டிற்கு உள்ளேயும் 50% வெளியேயும் பிட்சானதாகவே தெரிந்தது. இது குறித்து முடிவெடுப்பது சிக்கலான ஒன்றுதான் என்றாலும், பொதுவாக அம்பயர்கள் மும்பை இந்தியன்ஸ் அணிக்குச் சாதகமாகச் செயல்படுவதாக ஒரு கருத்து நிலவும் நிலையில், இந்த விவகாரம் அதை மேலும் அதிகரித்தது.

    இந்த ரிவ்யூவில் தப்பிய ரோகித் சர்மா அதன் பின்னர் அதிரடியாக விளையாடி 36 பந்துகளில் 53 ரன்கள் சேர்த்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×