என் மலர்
நீங்கள் தேடியது "சிங்கிரிகுடி"
- வருடந்தோறும் பிரம்மோற்சவ விழா வெகுவிமர்சையாக நடைபெறுவது வழக்கம்.
- பல்வேறு வாகனத்தில் சாமி வீதி உலா மற்றும் கருடசேவை விழா நடைபெற்றது.
கடலூர்:
கடலூர் அடுத்த ரெட்டிச்சாவடி சிங்கிரிகுடியில் பிரசித்தி பெற்ற லட்சுமி நரசிம்மர் கோவில் உள்ளது . இக்கோவிலில் வருடந்தோறும் பிரம்மோற்சவ விழா வெகுவிமர்சையாக நடைபெறுவது வழக்கம் .
இந்த நிலையில் பிரம்மோற்சவத்தை முன்னிட்டு கொடியேற்று விழா நடைபெற்றது . பின்னர் பல்லக்கில் சாமி , மாட வீதியில் வீதி உலா நடைபெற்றது . இதனைத் தொடர்ந்து தினந்தோறும் பல்வேறு வாகனத்தில் சாமி வீதி உலா மற்றும் கருடசேவை விழா நடைபெற்றது. விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்றது.
இதனையொட்டி அதிகாலை லட்சுமி நரசிம்மர் பெருமாள், தாயாருக்கு சிறப்பு திருமஞ்சனம் மற்றும் பூஜை நடைபெற்றது. இதனை தொடர்ந்து லட்சுமி நரசிம்ம பெருமாள் ஸ்ரீதேவி பூதேவியுடன் சிறப்பு அலங்காரத்தில், ஊர்வலமாக கம்பீரமாக பூக்களால் அலங்கரிக்கப்பட்ட தேரில் எழுந்தருளினார்.
இதனை தொடர்ந்து அய்யப்பன் எம்.எல்.ஏ தலைமையில் இந்து சமய அறநிலைத்துறை அதிகாரிகள் மற்றும் அங்குத் திரண்டு இருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் "கோவிந்தா கோவிந்தா" என்ற பக்தி கோஷத்துடன் தேரை வடம் பிடித்து இழுத்தனர். முக்கிய மாடவீதியில் தேரோட்டம் நடைபெற்று பின்னர் நிலையை அடைந்தது. இன்று நரசிம்மர் அவதாரம் தினமான நரசிம்மர் ஜெயந்தியை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று பயபக்தியுடன் சாமி கும்பிட்டனர். அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.
நாளை காலை மட்டையடி உற்சவம், இரவில் இந்திர விமானத்தில் சாமி வீதி உலாவும், புஷ்பயாகம், இரவு ஊஞ்சல் உற்சவம் நடைபெற உள்ளது . இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர், கிராம மக்கள் செய்து வருகின்றனர்.
- வேத மந்திரம் முழங்க பிரமோற்சவம் கொடியேற்றம் நடைபெற்றது.
- பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
கடலூர்:
கடலூர் அடுத்த ரெட்டிச் சாவடி சிங்கிரிகுடியில் பிரசித்தி பெற்ற லட்சுமி நரசிம்மர் கோவில் உள்ளது.
இக்கோவிலில் ஆண்டு தோறும் பிரமோற்சவ விழா விமர்சையாக நடை பெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டுக்கான பிரமோற்சவ விழா இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி காலை சாமிக்கு பல்வேறு விதமான பொருட்களால் சிறப்பு திருமஞ்சனம் நடைபெற்றது. பின்னர் ஸ்ரீதேவி பூதேவியுடன் லட்சுமி நரசிம்ம பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் கொடிமரம் முன்பு எழுந்தருளினார். பின்னர் வேத மந்திரம் முழங்க பிரமோற்சவம் கொடியேற்றம் நடைபெற்றது. இதனை தொடர்ந்து கொடி மரத்திற்கும் சாமிக்கும் தீபாரதனை காண்பிக்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
பின்னர் பல்லக்கில் சாமி வீதியுலா நடைபெற்றது. இதனை தொடர்ந்து தினந்தோறும் இரவில் ஹம்ச வாகனம், சிம்ம வாகனம், அனுமந்த வாகனம், நாக வாகனத்தில் சாமி வீதியுலா நடைபெறுகிறது. வருகிற 7-ந் தேதி இரவு கருட சேவை விமர்சையாக நடைபெற உள்ளது. பின்னர் விமானத்தில் வசந்த உற்சவம், இரவு யானை வாகனம், மங்களகிரி வாகனம், 10-ந்தேதி காலை வெண்ணைத் தாழி திருக்கோலத்துடன் வீதி உலா, இரவு குதிரை வாகனம் மற்றும் பரிவேட்டை நடைபெறுகிறது.
இதனை தொடர்ந்து விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் விழா வருகிற 11-ந்தேதி நடைபெறுகிறது. அன்று காலையில் லட்சுமி நரசிம்ம பெருமாள் மற்றும் தாயாருக்கு சிறப்பு திருமஞ்சனம் மற்றும் சிறப்பு பூஜை நடைபெறும். இதனைத் தொடர்ந்து சாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு ஊர்வலமாக கொண்டு வந்து தேரில் கம்பீரமாக எழுந்தருள்வார். பின்னர் அதிகாலை 4.30 மணி அளவில் தேரோட்டம் தொடங்கி முக்கிய மாடவீதியில் சென்று வந்து நிலை அடையும்.
இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு "கோவிந்தா கோவிந்தா" என்ற பக்தி கோஷத்துடன் சாமி தரிசனம் செய்கிறார்கள். அன்று இரவு தீர்த்த வாரி அவரோகணம், 12-ந்தேதி மட்டையடி உற்சவம், இரவு இந்திர விமானத்தில் வீதியுலா, 13-ந் தேதி புஷ்ப யாகம், 14-ந் தேதி ஊஞ்சல் உற்சவம் நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் (பொறுப்பு) வேல்விழி மற்றும் நிர்வாகத்தினர் பொதுமக்கள் செய்து வருகின்றனர்.
- இங்கு கோவில் கொண்டுள்ள மூலவர் நரசிங்கர் பதினாறு திருக்கைகளுடன் ஆச்சரியமாகக் காட்சியளிக்கிறார்.
- இவரைத் தரிசித்தால் எல்லா வகைப் பாவங்களும், குறைகளும் நீங்கும்.
சிங்கிரிகுடி (சிங்கர்கோவில்) என்னும் ஸ்ரீலட்சுமி நரசிம்ம சுவாமி சேஷத்திரத்தின் தலவரலாறு கூறும் இச்சிறு நூல்
சிங்கர் கோவிலில் எழுந்தருளி இருக்கும் ஸ்ரீலட்சுமி நரசிம்மரின் திருவடித் தாமரைகளில் அடியோங்களால் சமர்ப்பிக்கப்படுகிறது.
இத்திருத்தலம் இக்காலம் தமிழ்நாட்டில் தென்னாற்காடு மாவட்டம் கடலூர் வட்டத்துள் இருக்கிறது.
சிங்கர்கோவில் என நரசிம்மர் பெயராலேயே வழங்கப்படுகிறது.
இங்கு கோவில் கொண்டுள்ள மூலவர் நரசிங்கர் பதினாறு திருக்கைகளுடன் ஆச்சரியமாகக் காட்சியளிக்கிறார்.
இவரைத் தரிசித்தால் எல்லா வகைப் பாவங்களும், குறைகளும் நீங்கும்.
வசிஷ்டமாமுனிவர் இத்திருத்தலத்தில் நரசிங்கரைத் தியானம் செய்து கொண்டு தவம் புரிந்து சித்தி பெற்றுத்
தம்முடைய பாவங்களைப் போக்கி கொண்டார்.
இவ்வூரைப் பற்றிச் சுருக்கமாகத் தெரிந்து கொள்ள ஆசைப்படுபவர்களுக்கு கீழ்க்கண்ட முறையில் கூறலாம்.
ஊர் பெயர்: சிங்கர்கோவில்
புராணப்பெயர்: கிருஷ்ணாரண்யசேத்ரம்
சுவாமி பெயர்: லட்சுமி நரசிம்மர்
தாயார் பெயர்: கனகவல்லித்தாயார்
விமானத்தின் பெயர்: பாவன விமானம்
தீர்த்தங்கள் ஐந்து: ஜமதக்னி தீர்த்தம்,
இந்திர தீர்த்தம், ப்ருகு தீர்த்தம்,
வாமன தீர்த்தம், கருட தீர்த்தம்.
- ஆலயத்திற்குப் பின்புறம் தோப்புக்குள் பத்து தூண்களை உடைய மண்டபம் உள்ளது.
- இதில் தாயாருக்கு ஊஞ்சல் நடைபெறுகிறது.
இந்தியாவிலேயே அபூர்வமாக இரண்டு இடங்களில் தான் நரசிம்மர் பதினாறு கைகளுடன் காட்சி அளிக்கிறார்.
அந்த இரு சேத்திரங்களுள் ஒன்று சிங்கர்கோவில் மற்றொன்று ராஜஸ்தானில் உள்ளது.
மூர்த்தியின் கைகளில் காணப்படும் ஆயுதங்களும் அவற்றின் நிலைகளும்:
பதாகஸ்தம், ப்ரயோக சக்ரம், ஷீரிகை என்னும் குத்துக்கத்தி, பாணம், ராட்சனின் தலையை அறுத்தல், கத்தியால் அசூரன் ஒருவனைக் கொல்லுதல், இரணியனின் கைகளில், குடல் மாலையைப் பிடித்திருப்பது, சங்கம், வில், கதை, கேடயம்,வெட்டப்பட்ட தலை, இரணியனின் தலையை அழுத்திப் பிடித்திருப்பது, குடலைக் கிழிப்பது.
மூலாயத்தில் பெரிய வடிவில் பதினாறு கைகளுடன் இரணியனைச் சங்கரிப்பவராகப் பெருமாள் எழுந்தருளியுள்ளார்.
கீழே இடப்புறம் இரணியனின் மனைவியான நீலாவதி, கீழே வலப்புறம் மூன்று அசூரர்கள், பிரகலாதர்,
சுக்கிரர் வஷிட்டர் ஆகியவர்கள் இருக்கிறார்கள்.
வடக்கு நோக்கியவர்களாகச் சிறிய வடிவில் யோக நரசிம்மர், பால நரசிம்மர் என இருவர் இருக்கிறார்கள்.
ஆலயத்திற்குப் பின்புறம் தோப்புக்குள் பத்து தூண்களை உடைய மண்டபம் உள்ளது.
இதில் தாயாருக்கு ஊஞ்சல் நடைபெறுகிறது.
திரு.ஆனந்தரங்கப் பிள்ளை அவர்களின் நாட்குறிப்பில் இருந்து பிரெஞ்சு அரசாங்கம் நரசிம்ம சுவாமிக்கு
அவிசுப்பாக்கத்தில் உள்ள குளத்தில் தெப்ப உற்சவம் செய்து வந்ததாகத் தெரிகிறது.
- ஆற்காட்டு நவாப் நரசிம்மருக்கு திருவாபரணம் சமர்ப்பித்தார்.
- இந்த ஆலயம் வைகானச முறைப்படி பூஜைகள் நடக்கும் இடம்.
சன்னதிக்கு எதிரில் இருக்கும் விநாயகரை எடுத்து கோபுர நுழைவாயிலுக்கு பக்கத்தில் வைக்க எண்ணி ஒரு கோவில்
அமைத்து விநாயகரை எடுத்ததும் ஊரில் தீ விபத்து ஏற்பட்டதால் பழைய இடத்திலேயே வைத்துவிட்டதாக பரம்பரை வரலாறு உள்ளது.
ஆற்காட்டு நவாப் நரசிம்மருக்கு திருவாபரணம் சமர்ப்பித்தார்.
பிரெஞ்சுக்காரர்களும் சுவாமிக்கு திருவாரணங்கள் சமர்ப்பித்து உள்ளனர்.
புராணம், சரித்திரம் ஆகிய இரு வகைகளிலும் சிறப்புடையதும் இந்தியாவிலேயே அபூர்வமானதுமான
ஸ்ரீ நரசிம்மர் சன்னதி உள்ள தலம் சிங்கிரிகுடி என்பதை இதுவரை கண்டோம்.
இந்த ஆலயம் வைகானச முறைப்படி பூஜைகள் நடக்கும் இடம்.
இந்த ஊரில் கல்வி கேள்விகளில் வல்ல பல சான்றோர்கள் இருந்திருக்கிறார்கள்.
மூலஸ்தானம் மட்டும் தான் பழமையானது.
தாயார் சன்னதி, ஆண்டாள் சன்னதி இவைகள் பிற்காலத்தவையாக இருக்க வேண்டும் என்று தோன்றுகிறது.
திருவந்திரபுரம், ஸ்ரீ தேவனாதப்பெருமாள், பிரகலாதனின் பிரார்த்தனையின் நிமித்தமாக ஹிரண்ய சம்கார
நரசிம்மனாக பிரகலாதனுக்கு சேவை சாதித்தருளினார்.
- இங்குள்ள எல்லா கல்வெட்டுக்களும் முற்றுப் பெறாத கல்வெட்டுக்களே.
- இந்த கோவிலை பிரித்துக் கட்டும்போது கற்கள் பல மாறி இருக்கக்கூடும் என்று தோன்றுகிறது.
இதுவரை தலபுராணத்தை பற்றி பார்த்தோம்.
இந்த ஆலயத்துள் துண்டு கல்வெட்டுகள் உள்ளன.
இங்குள்ள எல்லா கல்வெட்டுக்களும் முற்றுப் பெறாத கல்வெட்டுக்களே.
இந்த கோவிலை பிரித்துக் கட்டும்போது கற்கள் பல மாறி இருக்கக்கூடும் என்று தோன்றுகிறது.
ராஜ கோபுரவாயிலில், 16-ம் நூற்றாண்டை சேர்ந்து எழுத்தமைதியுடைய ஒரு கல்வெட்டு செய்யுள் வடிவில் அமைந்து இருக்கிறது.
இப்பாடல் எழுசீர்க்கழி நெடிலடி ஆசிரியவிருத்த வடிவில் அமைந்துள்ளது.
- இத்தலம் வரலாறு சிறப்புமிக்கது.
- இது ஒரு பிரார்த்தனை ஸ்தலம் பலபேர்கள் இந்த பெருமானை வேண்டி பலன் பெற்றுள்ளனர்.
இத்தலம் வரலாறு சிறப்புமிக்கது.
இத்தலத்தில் எழுந்தருளியுள்ள மூர்த்தி இந்தியாவிலேயே உள்ள ஒரு ஒருவர் தான் என்பது தனிச்சிறப்பு
தவிர இந்த பழமை வாய்ந்த திருக்கோவில் ஸ்ரீ நரசிம்ம அனுஷ்டிப்பு மந்திரத்தில் உள்ள எழுத்துக்களைக் கொண்டது என்பது விசேஷமான அம்சம்.
இது ஒரு பிரார்த்தனை ஸ்தலம் பலபேர்கள் இந்த பெருமானை வேண்டி பலன் பெற்றுள்ளனர்.
முக்கியமாக நவக்கிரக தோஷங்கள் போகும்.
சுவாதி நட்சத்திரத்திலும், பிரதோஷத்திலும் மற்றும் செவ்வாய்க் கிழமையில் இந்த மூர்த்தியை (ஸ்ரீ லட்சுமி நரசிம்மனை) தரிசித்தால் மிகவும் நல்லது.
எல்லா குறைகளும் தீரும்.
சிங்கிரிகோவில், பூவரங்குப்பம், பரிக்கல் ஆகிய ஊர்கள் ஒரே நேர்க்கோட்டில் உள்ளதால் இந்த மூன்று நரசிம்மனை
ஒரே நாளில் தரிசித்தால் தீராத கஷ்டங்கள் யாவும் தீரும்.
- பிரதி வருடமும் மாசி மக சமுத்திர ஸ்னானத்திற்கு புதுச்சேரிக்கு புறப்படுகிறார்.
- 6-ம் நூற்றாண்டில் பல்லவ ராஜாக்களால் இந்த கோவில் கட்டப்பட்டது.
1. ஒவ்வொரு வருடமும் ஸ்ரீ நரசிம்ம ஜெயந்திக்கு முன்பு ஆரம்பிக்கப்பட்டு ஸ்ரீ நரசிம்ம ஜெயந்தி அன்று ரதோஸ்வம் நடைபெறுகிறது.
2. பிரதி வருடமும் மாசி மக சமுத்திர ஸ்னானத்திற்கு புதுச்சேரிக்கு புறப்படுகிறார்.
3. கோவில் தமிழ்நாட்டில் உள்ளது. புதுவை மாநிலம், தமிழ்நாடு மாநிலம் இவர்களால் நியமிக்கப்பட்ட அறங்காவலர்கள் ஆட்சிக்குட்பட்டது.
4. 6-ம் நூற்றாண்டில் பல்லவ ராஜாக்களால் இந்த கோவில் கட்டப்பட்டது. 16-ம் நூற்றாண்டில் ஸ்ரீ கிருஷ்ண தேவராயரால் திருப்பணி செய்யப்பட்டது.
5. ஸ்ரீ ராஜ ராஜசோழன், விஜயநகர மன்னர் ஸ்ரீ கிருஷ்ண தேவராயர் ஆகியோர்களாலும் சில கைகங்கர்யங்கள் செய்யப்பட்டுள்ளன.
6. இந்த கோவிலுக்கு பின்புறம் ஸ்ரீமத் அகோபில மடம் 4-வது பட்டம் ஸ்ரீயர் சுவாமிகள் பிருந்தாவனம் உள்ளது.
ஓம், வஜ்ரநகாய வித்மஹே, தீக்ண தம்ட்ராயதீமஹே, தந்னோ, நாரசிஹ்ம ப்ரசோதயாது.
ஸ்ரீ நரசிம்ம அனுஷ்டுப் மந்திரம் :
ஓம், உக்ரம், வீரம், மஹாவிஷ்ணும் ஜ்வலந்தம் ஸர்வதோமுகம், நரசிஹ்மம் பீஷணம் பத்ரம், ம்ருத்தும் ம்ருத்து நாம்யஹம்.






