search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிக களஞ்சியம்

    சிங்கிரிகுடி கோவில் தலமகாத்மியம்
    X

    சிங்கிரிகுடி கோவில் தலமகாத்மியம்

    • இங்கு கோவில் கொண்டுள்ள மூலவர் நரசிங்கர் பதினாறு திருக்கைகளுடன் ஆச்சரியமாகக் காட்சியளிக்கிறார்.
    • இவரைத் தரிசித்தால் எல்லா வகைப் பாவங்களும், குறைகளும் நீங்கும்.

    சிங்கிரிகுடி (சிங்கர்கோவில்) என்னும் ஸ்ரீலட்சுமி நரசிம்ம சுவாமி சேஷத்திரத்தின் தலவரலாறு கூறும் இச்சிறு நூல்

    சிங்கர் கோவிலில் எழுந்தருளி இருக்கும் ஸ்ரீலட்சுமி நரசிம்மரின் திருவடித் தாமரைகளில் அடியோங்களால் சமர்ப்பிக்கப்படுகிறது.

    இத்திருத்தலம் இக்காலம் தமிழ்நாட்டில் தென்னாற்காடு மாவட்டம் கடலூர் வட்டத்துள் இருக்கிறது.

    சிங்கர்கோவில் என நரசிம்மர் பெயராலேயே வழங்கப்படுகிறது.

    இங்கு கோவில் கொண்டுள்ள மூலவர் நரசிங்கர் பதினாறு திருக்கைகளுடன் ஆச்சரியமாகக் காட்சியளிக்கிறார்.

    இவரைத் தரிசித்தால் எல்லா வகைப் பாவங்களும், குறைகளும் நீங்கும்.

    வசிஷ்டமாமுனிவர் இத்திருத்தலத்தில் நரசிங்கரைத் தியானம் செய்து கொண்டு தவம் புரிந்து சித்தி பெற்றுத்

    தம்முடைய பாவங்களைப் போக்கி கொண்டார்.

    இவ்வூரைப் பற்றிச் சுருக்கமாகத் தெரிந்து கொள்ள ஆசைப்படுபவர்களுக்கு கீழ்க்கண்ட முறையில் கூறலாம்.

    ஊர் பெயர்: சிங்கர்கோவில்

    புராணப்பெயர்: கிருஷ்ணாரண்யசேத்ரம்

    சுவாமி பெயர்: லட்சுமி நரசிம்மர்

    தாயார் பெயர்: கனகவல்லித்தாயார்

    விமானத்தின் பெயர்: பாவன விமானம்

    தீர்த்தங்கள் ஐந்து: ஜமதக்னி தீர்த்தம்,

    இந்திர தீர்த்தம், ப்ருகு தீர்த்தம்,

    வாமன தீர்த்தம், கருட தீர்த்தம்.

    Next Story
    ×