என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கலைஞர் மகளிர் உரிமைத்தொகை"

    • நான் முதல்வராக பொறுப்பேற்ற நாள் முதல் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறேன்.
    • புதுமைப்பெண், தமிழ்ப்புதல்வன் திட்டங்கள் மூலம் மாணவர்கள் பணத்தை சேமித்து வருகின்றனர்.

    சென்னை நேரு விளையாட்டு அரங்கில் நடைபெறும் வெல்லும் தமிழ்ப் பெண்கள் விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்.

    கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்ட 2ம் கட்ட விரிவாக்கத்தை தொடங்கி வைத்து பின்னர் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியதாவது:-

    வெல்லும் தமிழ்ப் பெண்கள் விழாவில் பேசிய பெண்களின் பேச்சை கேட்டு நெகிழ்ச்சி அடைந்தேன்.

    வெல்லும் தமிழ்ப் பெண்கள் விழாவில் உள்ளத்தில் இருந்து பேசிய அனைவருக்கும் நன்றி.

    தனது 100 வயதில் பொது வாழ்க்கையில் வெற்றி பெற்றவர் கிருஷ்ணம்மாள்.

    2021ம் ஆண்டு மே 7ம் தேதி முதலமைச்சராக பொறுப்பேற்றவுடன் முன்னோடி திட்டங்களை செயல்படுத்த தொடங்கினேன்.

    நான் முதல்வராக பொறுப்பேற்ற நாள் முதல் திராவிட மாடல் அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.

    புதுமைப்பெண், தமிழ்ப்புதல்வன் திட்டங்கள் மூலம் மாணவர்கள் பணத்தை சேமித்து வருகின்றனர்.

    கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம் மாபெரும் வெற்றி பெற்று உள்ளது. வரலாற்றை திருத்தி எழுதக் கூடிய திட்டமாக கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் உள்ளது.

    திராவிட மாடல் அரசின் பல்வேறு அரசுத்திட்டங்களால் பலர் பயன் அடைந்து வெற்றி பெற்றுள்ளனர்.

    கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தின் வெற்றியின் உச்சம் அண்டை மாநிலங்களிலும் இந்த திட்டத்தை செயல்படுத்துவது தான்.

    மகாராஷ்டிரா, சத்தீர்கர், கர்நாடகா உள்பட 10 மாநிலங்களில் உரிமைத்தொகை திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • வெல்லும் தமிழ் பெண்கள்' என்ற பெயரில் தமிழ்நாட்டின் சாதனை பெண்களின் மாபெரும் வெற்றி கொண்டாட்டம்.
    • விடுபட்ட மகளிர் பயனடையும் வகையில் உரிமைத்தொகை திட்டம் 2ம் கட்ட விரிவாக்கம்.

    தமிழக அரசு பெண்களுக்காக செயல்படுத்தி வரும் திட்டங்களின் சாதனைகள், பயனடைந்த பெண்களின் அனுபவங்கள், தமிழ்நாட்டின் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் முக்கிய பெண் சாதனையாளர்களை ஒன்றிணைத்து, பெண்களின் முன்னேற்றத்துக்காக தமிழக அரசின் முன்னெடுப்புகளை எடுத்துக்காட்டும் வகையில் ' வெல்லும் தமிழ் பெண்கள்' என்ற பெயரில் தமிழ்நாட்டின் சாதனை பெண்களின் மாபெரும் வெற்றி கொண்டாட்ட நிகழ்வு சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் இன்று மாலை தொடங்கி நடைபெற்று வருகிறது.

    இந்த விழாவில், கலைஞர் மகளிர் உரிமைத்தொகை 2ம் கட்ட விரிவாக்கத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

    தமிழ்நாட்டில் தற்போது ஒரு கோடியே 13 லட்சத்து 75 ஆயிரத்து 492 மகளிர் மாதந்தோறும் ரூ.1000 உரிமைத்தொகை பெறுகின்றனர்.

    இதில், விடுபட்ட மகளிர் பயனடையும் வகையில் உரிமைத்தொகை திட்டம் 2ம் கட்ட விரிவாக்கத்தை முதலமைச்சர் தொடங்கி வைத்தார்.

    மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் 2ம் கட்ட விரிவாக்கத்தால் மேலும் 17 லட்சம் பேர் உரிமைத்தொகையை பெறுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • திருப்பூா் மாவட்டத்தில் பல இடங்களில் பயனாளிகளுக்கு கடிதங்களை வழங்காமல் அஞ்சல் ஊழியா்கள் அலைக்கழிப்பு செய்து வருகின்றனா்.
    • தமிழகத்தில் கலைஞா் மகளிா் உரிமைத்தொகை பெறும் பயனாளிகளுக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் தனித்தனியை வாழ்த்து தெரிவித்து கடிதம் அனுப்பியுள்ளாா்.

    திருப்பூர்:

    கலைஞா் மகளிா் உரிமைத் தொகை பயனாளிகளுக்கு முதல்வா் அனுப்பியுள்ள வாழ்த்துக் கடிதங்கள் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று மாவட்ட கலெக்டரிடம் மனு அளிக்கப்பட்டது.

    திருப்பூா் மாவட்ட கலெக்டர் தா.கிறிஸ்துராஜிடம், தமிழ்நாடு மின்வாரிய பொது ஒப்பந்த தொமுச., மாநில இணைப் பொதுச் செயலாளா் அ.சரவணன் அளித்துள்ள மனுவில் கூறியுள்ளதாவது:-

    தமிழகத்தில் கலைஞா் மகளிா் உரிமைத்தொகை பெறும் பயனாளிகளுக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் தனித்தனியை வாழ்த்து தெரிவித்து கடிதம் அனுப்பியுள்ளாா்.இந்தக் கடிதங்களுக்கு அஞ்சல் துறைக்கு செலுத்த வேண்டிய கட்டணங்களை செலுத்தி பயனாளிகளின் பெயா், முகவரி, கைப்பேசி எண் ஆகியவை முறையாக குறிப்பிடப்பட்டு அனுப்பப்பட்டுள்ளன.

    ஆனால், திருப்பூா் மாவட்டத்தில் பல இடங்களில் பயனாளிகளுக்கு கடிதங்களை வழங்காமல் அஞ்சல் ஊழியா்கள் அலைக்கழிப்பு செய்து வருகின்றனா்.அதிலும் குறிப்பாக இடுவம்பாளையம், ஆண்டிபாளையம், மங்கலம் சாலை, கருவம்பாளையம், ராயபுரம், கொங்கு நகா், காந்தி நகா், பிச்சம்பாளையம் புதூா் கிழக்கு, கேத்தம்பாளையம், ராதாகிருஷ்ணன் நகா், வெங்கமேடு ,செட்டிபாளையம், கோவில்வழி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கலைஞா் மகளிா் உரிமைத் தொகை பெறும் பயனாளிகளுக்கு முதல்வா் அனுப்பியுள்ள வாழ்த்துக் கடிதங்கள் கிடைக்கவில்லை. இது தொடா்பாக பயனாளிகள் புகாா் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

    எனவே, இந்த விவகாரத்தில் மாவட்ட நிா்வாகம் தலையிட்டு அனைத்து பயனாளிகளுக்கும் முதல்வரின் வாழ்த்துக் கடிதம் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ×