என் மலர்
நீங்கள் தேடியது "ரமேஷ் பிதுரி"
- பஹல்காம் தாக்குதல் சம்பவத்தில் 26 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
- இந்தியா - பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே போர் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
ஜம்மு காஷ்மீர் மாநிலம் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தில் 26 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இதைத்தொடர்ந்து இந்தியா - பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே போர் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை கண்டித்து டெல்லியில் பாஜக சார்பில் பேரணி நடத்தப்பட்டது. அந்த பேரணியில் கலந்துகொண்டு பேசிய பாஜக மூத்த தலைவர் ரமேஷ் பிதுரி, "ஹமாஸ் போன்ற தாக்குதல் நடந்தால், இஸ்ரேல் போன்ற பழிவாங்கும் நடவடிக்கை எடுக்கப்படும். அவர்களால் கனவிலும் நினைத்துப்பார்க்க முடியாத தண்டனை வழங்கப்படும் என்று பிரதமர் மோடி கூறியுள்ளார்.
காசா மீது இஸ்ரேல் நடத்தும் மனிதாபிமானமற்ற தாக்குதலை உதாரணமாக கூறி அதே மாதிரி பதிலடி கொடுக்கப்படும் பாஜக தலைவர் கூறியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
- பா.ஜ.க. எம்.பி. ரமேஷ் பிதுரியின் பேச்சு கண்டனத்திற்கு உரியது.
- எனவே அவரை இடைநீக்கம் செய்ய வேண்டும் என தி.மு.க. எம்.பி. கனிமொழி தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி:
பாராளுமன்றத்தில் நடைபெற்ற விவாதத்தின் போது பகுஜன் சமாஜ் எம்.பி. குறித்து பா.ஜ.க. எம்.பி. ரமேஷ் பிதுரி கூறிய கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்நிலையில், பா.ஜ.க. எம்.பி. ரமேஷ் பிதுரியை இடைநீக்கம் செய்யக் கோரி மக்களவை சபாநாயகருக்கு தி.மு.க. எம்.பி. கனிமொழி கடிதம் எழுதியுள்ளார்.
அந்தக் கடிதத்தில் பா.ஜ.க. எம்.பி. ரமேஷ் பிதுரி பாராளுமன்றத்தின் கண்ணியத்திற்கும், ஜனநாயகத்திற்கும், ஒட்டுமொத்த தேசத்திற்கும் அவமதிப்பை ஏற்படுத்தியுள்ளார். ரமேஷ் பிதுரியின் பேச்சு கண்டனத்திற்கு உரியது. அவரை இடைநீக்கம் செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளார்.






