என் மலர்
நீங்கள் தேடியது "கேஸ்"
- கப்பல்கள் மாற்று பாதையில் சுற்றிச்செல்ல 20 நாட்கள் கூடுதல் அவகாசம் தேவைப்படும்
- பதற்றமான சூழலில் சரக்கை அனுப்ப வேண்டாமென, வர்த்தகர்கள் கூறிவிட்டனர்.
ஈரான் - இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா இடையே நிலவும் போர் சூழல் காரணமாக கப்பல் போக்குவரத்து தடையால் திருப்பூர் ஆடை ஏற்றுமதி பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் உற்பத்தியான ரூ. 300 கோடி மதிப்பிலான ஆடைகள் திருப்பூரிலேயே தேக்கமடைந்துள்ளதாக ஏற்றுமதியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க தலைவர் சுப்பிரமணியன் கூறுகையில், துபாய் வழியாக அரபு நாடுகளுக்கு செல்லும் பின்னலாடைகள் ஏற்றுமதி பாதிக்கப்பட்டுள்ளது.ஈரான் ஹார்முஸ் ஜலசந்தி கடல்வழி பாதையை அடைத்து வைத்துள்ளதால் கப்பல்கள் மாற்று பாதையில் சுற்றிச்செல்ல 20 நாட்கள் கூடுதல் அவகாசம் தேவைப்படும். இதனால் செலவுகள் அதிகரிக்கும்.
பதற்றமான சூழலில் சரக்கை அனுப்ப வேண்டாமென, வர்த்தகர்கள் கூறிவிட்டனர். ரம்ஜான் பண்டிகை விற்பனைக்கான ஆடைகளை கடந்த மாதங்களில் அனுப்பிவிட்டோம் என்றார்.
திருப்பூர் நிட்பிரின்டர்ஸ் அசோசியேஷன் (டெக்பா) தலைவர் ஸ்ரீகாந்த் கூறுகையில், "பிரின்டிங், சாய ஆலைகள், 'ஹீட் செட்டிங்' 'பினிஷிங்', சென்டர் போன்ற பிரிவுகளில், கியாஸ் அதிகம் பயன்படுத்தப்படுகிறது. பின்னலாடை தயாரிப்பில் கியாஸ் பயன்பாடு தவிர்க்க இயலாதது.
கியாஸ் சிலிண்டருக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால், சில 'ஜாப் ஒர்க்' பிரிவுகளில் உற்பத்தி முடங்கும் அபாயம் உள்ளது. மின்சாரத்தை பயன்படுத்தினால் உற்பத்தி செலவு அதிகரிக்கும். பின்னலாடை தொழில்துறையினருக்கு தடையின்றி கியாஸ் கிடைக்க மத்திய அரசு ஆவணம் செய்ய வேண்டும்" என்றார்.
உடுமலை:
உடுமலை பாரத் கேஸ் விநியோகஸ்தர் சார்பில் உடுமலை அரசு கலைக்கல்லூரி மாணவ மாணவியருக்கு எரிவாயு குறித்த ஒரு நாள் விழிப்புணர்வு முகாம் நடந்தது. நிகழ்ச்சிக்கு அரசு கலைக் கல்லூரி முதல்வர் கே.கல்யாணி தலைமை வகித்தார். எரிவாயு குறித்த விழிப்புணர்வு உறுதிமொழியை கல்லூரி முதல்வர் கல்யாணி, செல்வி கேஸ் உரிமையாளர் அய்யப்பன் முன்னிலையில் வாசிக்க மாணவ மாணவியர் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.
நிகழ்ச்சியில் எரிவாயு சிக்கனம் , எரிவாயுவை பாதுகாப்பாக பயன்படுத்துவது குறித்தும் சிலிண்டரை எளிதாக பெறுவது குறித்தும் பொதுமக்கள் அதிகம் பயன்படுத்தும் ஐந்து கிலோ சிலிண்டர் மற்றும் வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டரை சுலபமாக பெறுவது குறித்தும் விளக்கப்பட்டது. பெண்கள் சிலிண்டரை பாதுகாப்பாக பயன்படுத்துவது குறித்து செயல் விளக்கம் அளிக்கப்பட்டது. இதில் உடுமலை சமூக பாதுகாப்பு திட்ட தனி வட்டாட்சியர் விவேகானந்தன் கலந்துகொண்டு மாணவர்கள் உழவர் பாதுகாப்புத் திட்ட கல்வி உதவித் தொகையை பெறுவது குறித்து ஆலோசனை வழங்கினார்.
எரிவாயு குறித்த வினாடிவினா நடத்தப்பட்டு வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. உடுமலை அரசு கலைக் கல்லூரி பேராசிரியர்கள், அலுவலர்கள் மற்றும் வானொலி தங்கவேலு, சமூக ஆர்வலர் விஜயகுமார்,மணி மற்றும் கனகராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.






