என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தாகம்"

    • தாகத்தை போக்கவும், நீரிழப்பை தடுக்கவும் சிறிதளவு தண்ணீர் பருகலாம்.
    • உடல் தூக்கத்தின்போது உடல் பாகங்களை பழுதுபார்க்கும் பணியை செய்யும்.

    நள்ளிரவில் தூக்கத்தில் இருந்து தாகத்தோடு சிலர் எழுவதுண்டு. நாவறட்சியை போக்குவதற்கு தண்ணீர் அருந்தவும் செய்வார்கள். அப்படி நள்ளிரவு நேரத்தில் தண்ணீர் குடிப்பது நல்லதா? என்ற கேள்விக்கு நல்லதல்ல என்பதே மருத்துவ நிபுணர்களின் பதிலாக இருக்கிறது.

    அப்படி தாகமாக எழுந்தால் உடல் நீரிழப்புக்கு ஆளாகி இருப்பதாக அர்த்தம். தாகத்தை போக்கவும், நீரிழப்பை தடுக்கவும் சிறிதளவு தண்ணீர் பருகலாம். ஆனால் அதிகம் பருகக்கூடாது. அது தூக்கத்தை சீர்குலைத்துவிடும். மீண்டும் சிறுநீர் கழிக்க எழுந்திருக்க நேரிடும். ஆழ்ந்த தூக்கத்தையும், நோய் எதிர்ப்பு அமைப்பையும், ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் எதிர்மறையாக பாதிக்கும்.

    அதேவேளையில் உடல் தூக்கத்தின்போது உடல் பாகங்களை பழுதுபார்க்கும் பணியை செய்யும். இந்த செயல்முறைகளுக்கு தண்ணீர் மிக முக்கியமானது. அதனால் தூங்க செல்வதற்கு சுமார் இரண்டு மணி நேரத்திற்கு முன்பு ஒரு டம்ளர் தண்ணீர் பருகலாம். நள்ளிரவில் அடிக்கடி தாகம் எடுப்பதை தவிர்க்க பகலில் உடலில் நீர்ச்சத்தை போதுமான அளவு தக்கவைப்பது அவசியம்.

    • நீர்-மோர் பந்தல் அமைத்து கமுதியில் பயணிகள் போலீசார் தாகம் தணித்தனர்.
    • இன்னும் 2 மாதங்கள் வரை இந்த நீர் மோர் பந்தல் செயல்படும் என்று போலீசார் தெரிவித்தனர்.

    பசும்பொன்

    ராமநாதபுரம் மாவட்டம் கமுதி பகுதியில் கோடை காலத்தை முன்னிட்டு வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. காலை 11 மணிக்கு மேல் மாலை 4 மணி வரை அனல்காற்று வீசி வருகிறது. எனவே பொதுமக்கள் நலன் கருதி அவர்களின் தாகத்தை தீர்க்கும் வகையில் கமுதி பஸ் நிலையம் பகுதியில் உள்ள புறக்காவல் நிலையத்தில் காவல்துறை சார்பில் நீர் மோர் பந்தல் திறக்கப்பட்டுள்ளது. இது கடந்த 10 நாள்களுக்கும் மேலாக செயல்பட்டு வருகிறது. இங்கு வெளியூருக்கு செல்பவர்கள் பஸ் நிலையத்தில் நிற்கும் போது கடுமையான வெயில் தாக்கத்தி னால் மிகவும் சிரமப்பட்டு வந்தனர். அவர்கள் தற்போது நீர், மோர் அருந்தி தங்களது தாகத்தை தணித்து மகிழ்வுடன் செல்கின்றனர். இந்த நீர்மோர் பந்தல் பயணிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்து வருகிறது. இன்னும் 2 மாதங்கள் வரை இந்த நீர் மோர் பந்தல் செயல்படும் என்று போலீசார் தெரிவித்தனர்.

    ×