search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Thirst"

    • உடலில் நீர்ச்சத்து குறைந்து வறண்டு போக வாய்ப்புண்டு.
    • தண்ணீரை கொஞ்சம் கொஞ்சமாக குடிக்க வேண்டும்.

    உங்களது வாயிலுள்ள மூன்று ஜோடி முக்கிய பெரிய எச்சில் சுரப்பிகள் போதிய அளவு எச்சிலை சுரக்காததால் தான் உங்களது நாக்கும், உதடுகளும் வறண்டு வாய் மொத்தமும் காய்ந்து போகிறது. போதிய அளவு எச்சில் சுரக்காததற்கு பல காரணங்கள் உள்ளன. அவை:

    உடலில் நீர்ச்சத்து குறைந்து போதல், கதிர்வீச்சு, மருந்து ஆகியவற்றின் மூலம் முகம், கழுத்திலுள்ள புற்று நோய்களுக்கு சிகிச்சை எடுத்துக் கொள்பவர்கள், வைட்டமின் ஏ மற்றும் வைட்டமின் பி2 சத்து குறைவாக இருப்பவர்கள், சர்க்கரை வியாதி கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ளாதவர்கள், மனநோய் பாதிப்பு உள்ளவர்கள், அடிக்கடி பதற்றத்துடனும், படபடப்புடனும் இருப்பவர்கள், அதிக வியர்வை. அதிக வாந்தி, அதிக வயிற்றுப்போக்கு உள்ளவர்கள் ஆகியோருக்கு உடலில் நீர்ச்சத்து குறைந்து வாய் வறண்டு போக வாய்ப்புண்டு.

    இதற்கான தீர்வுகள்:

    ஒரு நாள் முழுக்க தண்ணீரை கொஞ்சம் கொஞ்சமாக குடிக்க வேண்டும். புளிப்பு மிட்டாய் போன்றவற்றை வாயில் போட்டு சப்பிக்கொண்டே இருக்க வேண்டும். மது, சிகரெட், புகையிலை பழக்கம் இருந்தால் அதை நிறுத்த வேண்டும். அதிக இனிப்புள்ள பானங்கள், காபி, டீ குடிப்பதை குறைக்க வேண்டும்.

    நடு இரவில் நா வறட்சி, கண்டிப்பாக கவனிக்க வேண்டிய ஒன்று. படுக்கைக்கு அருகில் எப்பொழுதும் தண்ணீர் இருக்க வேண்டும். சரியான அளவில் உடலில் நீர்ச்சத்து இருந்தால்தான். உடலிலுள்ள மூட்டுக்களை சுலபமாக நீட்டி, மடக்க முடியும். குருத்தெலும்பு நன்றாக இயங்கும்.

    உடலில் தினந்தோறும் சேரும் கழிவுப்பொருட்கள், சிறுநீர், வியர்வை, மலம் வழியாக வெளியேறும். மொத்தத்தில், உடல் சீராக இயங்க, ஆரோக்கியமாக இருக்க, நீர்ச்சத்து உடலில் எப்பொழுதும் போதிய அளவு இருக்க வேண்டும். நீரின்றி அமையாது உலகம் என்பது போல், நீரின்றி அமையாது உடலும்.

    • நீர்-மோர் பந்தல் அமைத்து கமுதியில் பயணிகள் போலீசார் தாகம் தணித்தனர்.
    • இன்னும் 2 மாதங்கள் வரை இந்த நீர் மோர் பந்தல் செயல்படும் என்று போலீசார் தெரிவித்தனர்.

    பசும்பொன்

    ராமநாதபுரம் மாவட்டம் கமுதி பகுதியில் கோடை காலத்தை முன்னிட்டு வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. காலை 11 மணிக்கு மேல் மாலை 4 மணி வரை அனல்காற்று வீசி வருகிறது. எனவே பொதுமக்கள் நலன் கருதி அவர்களின் தாகத்தை தீர்க்கும் வகையில் கமுதி பஸ் நிலையம் பகுதியில் உள்ள புறக்காவல் நிலையத்தில் காவல்துறை சார்பில் நீர் மோர் பந்தல் திறக்கப்பட்டுள்ளது. இது கடந்த 10 நாள்களுக்கும் மேலாக செயல்பட்டு வருகிறது. இங்கு வெளியூருக்கு செல்பவர்கள் பஸ் நிலையத்தில் நிற்கும் போது கடுமையான வெயில் தாக்கத்தி னால் மிகவும் சிரமப்பட்டு வந்தனர். அவர்கள் தற்போது நீர், மோர் அருந்தி தங்களது தாகத்தை தணித்து மகிழ்வுடன் செல்கின்றனர். இந்த நீர்மோர் பந்தல் பயணிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்து வருகிறது. இன்னும் 2 மாதங்கள் வரை இந்த நீர் மோர் பந்தல் செயல்படும் என்று போலீசார் தெரிவித்தனர்.

    ×