என் மலர்
நீங்கள் தேடியது "இளம்பெண்ணிடம்"
- இளம்பெண்ணை வாட்ஸ் அப், இன்ஸ்டாகிராம் மூலம் பழகி ஆசை வார்த்தை கூறி அழைத்து சென்று பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார்.
- கோபி அனைத்து மகளிர் போலீசார் தருண்குமாரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
கோபி:
பெருந்துறை அருகே உள்ள காஞ்சிகோவில் அவிநாசிலிங்கபுரத்தை சேர்ந்தவர் தருண்குமார் (21).
இவர் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள ஒரு தனியார் கல்லூரியில் படித்து வரும் இளம்பெண்ணை வாட்ஸ் அப், இன்ஸ்டாகிராம் மூலம் பழகி வந்தும் ஆசை வார்த்தை கூறி அழைத்து சென்று பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார்.
இது குறித்து அந்த இளம்பெண் தனது பெற்றோரிடம் தெரிவித்ததார். அவர்கள் கோபி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.
புகாரின் பேரில் போலீசார் இளம்பெண்ணிடம் விசாரணை செய்ததில் தருண்குமார் இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கமானதாகவும், தன்னை ஆசை வார்த்தை கூறி மறைவான இடத்தில் அழைத்து சென்று பாலியல் அத்துமீறல் ஈடுபட்டதாகவும், தான் சத்தமிட்டு கொண்டு ஓடி வந்து விட்டதாகவும், தற்போது பழக மறுப்பதால் தன்னை பயப்படுத்தி வருவதாகவும் புகார் தெரிவித்தார்.
அதன் பேரில் கோபி அனைத்து மகளிர் போலீஸ் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் மேனகா தருண்குமார் மீது போக்சோ சட்டப்பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்து ஈரோடு மகளிர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கோபி மாவட்ட சிறையில் அடைத்தனர்.
- சேலம் சூரமங்கலம் காசக்காரனூர் மாணிக்கவாசகர் தெருவை சேர்ந்தவரிடம் தனது வங்கிக் கணக்கில் இருந்து மோசடி நபர்கள் குறிப்பிட்ட வங்கி கணக்கிற்கு ரூ.9.75 லட்சத்தை பரிமாற்றம் செய்துள்ளார்.
- பின்னர் சூர்யாவிற்கு ஆன்லைன் வேலை உறுதி செய்யப்பட்டதாக தகவல் அனுப்பி விட்டு மர்ம நபர் செல்போனை சுவிட்ச் ஆப் செய்து விட்டார். அதன்பிறகு அந்த எண்ணிற்கு தொடர்பு கொண்ட சூர்யா தன் ஏமாற்றப்பட்டதை உணர்ந்து சேலம் மாநகர சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார்.
சேலம்:
சேலம் சூரமங்கலம் காசக்காரனூர் மாணிக்கவாசகர் தெருவை சேர்ந்தவர் மகேஷ் குமார். இவரது மனைவி சூர்யா (வயது 31).
இவரது செல்போனில் வாட்ஸ் அப் மூலம் வந்த ஒரு தகவல் வந்தது. அதில் குறிப்பிட்டுள்ள டாஸ்க்குகளை முடித்தால் ஆன்லைன் மூலம் வேலை தருவதாக கூறி ஒரு லிங்கை அனுப்பியுள்ளார்கள்.
இதை நம்பிய சூர்யா அதில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பதில் அளித்தார். அப்போது சூர்யா தனது வங்கிக் கணக்கில் இருந்து மோசடி நபர்கள் குறிப்பிட்ட வங்கி கணக்கிற்கு ரூ.9.75 லட்சத்தை பரிமாற்றம் செய்துள்ளார்.
பின்னர் சூர்யாவிற்கு ஆன்லைன் வேலை உறுதி செய்யப்பட்டதாக தகவல் அனுப்பி விட்டு மர்ம நபர் செல்போனை சுவிட்ச் ஆப் செய்து விட்டார். அதன்பிறகு அந்த எண்ணிற்கு தொடர்பு கொண்ட சூர்யா தன் ஏமாற்றப்பட்டதை உணர்ந்து சேலம் மாநகர சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார்.
போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- கோதைநாயகி (27). இவர் ஆன்லைன் மூலம் பகுதிநேர வேலைவாய்ப்பு தேடினார். அப்போது குறிப்பிட்ட ஒரு முகவரியிலிருந்து வேலை தருவதாக கூறி லிங்க் அனுப்பி உள்ளனர்.
- இதை உண்மை என்று நம்பிய கோதைநாயகி அந்த லிங்க்கில் தனது வங்கி விவரங்கள் உள்ளிட்டவற்றை பதிவு செய்தார்.
கொண்டலாம்பட்டி:
சேலம் மாரமங்கலத்துப்பட்டி லட்சுமிநகரைச் சேர்ந்தவர் இளங்கோ. இவரது மகள் கோதைநாயகி (27). இவர் ஆன்லைன் மூலம் பகுதிநேர வேலைவாய்ப்பு தேடினார். அப்போது குறிப்பிட்ட ஒரு முகவரியிலிருந்து வேலை தருவதாக கூறி லிங்க் அனுப்பி உள்ளனர். மேலும் அந்த லிங்கை கிளிக் செய்து தகவல்களை அளிக்கும்படி கேட்டுள்ளனர். இதை உண்மை என்று நம்பிய கோதைநாயகி அந்த லிங்க்கில் தனது வங்கி விவரங்கள் உள்ளிட்டவற்றை பதிவு செய்தார். அப்போது அந்த பெண் ஆன்லைனில் தெரிவித்தபடி குறிப்பிட்ட ஒரு வங்கி கணக்கில் 13 லட்சத்து 91ஆயிரத்து 74 ரூபாய் செலுத்தி உள்ளார். அதற்கு பின்பு அந்த நிறுவனத்திடம் இருந்து எந்த தகவலும் வரவில்லை. இதனால் தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த கோதைநாயகி சேலம் மாநகர சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார். போலீசார் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






