என் மலர்
நீங்கள் தேடியது "எம்ஆர் காந்தி"
- தேர்தல் வந்தா போதும்ய்யா.. அவன் அவன் ரோட்ல வந்துடுறான். அவன் அவன் இஷ்டத்துக்கு பேசுறான்.
- நாங்கள் மட்டும் அவர்களுக்கு பதிலே பேசக் கூடாதாம்.
காஞ்சிபுரத்தில் நடைபெற்ற தமிழகத்தை தலை குனிய விடமாட்டோம் தீர்மான விளக்க பொதுக்கூட்டத்தில் கைத்தறி மற்றும் டெக்ஸ்டைல்ஸ் துறை அமைச்சர் ஆர். காந்தி பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது:-
தேர்தல் வந்தா போதும்ய்யா.. அவன் அவன் ரோட்ல வந்துடுறான். அவன் அவன் இஷ்டத்துக்கு பேசுறான். எங்களுக்கு கட்டளையிட்டுள்ளனர் தலைமையிலிருந்து. என்ன கட்டளை தெரியுமா? நாங்கள் எல்லாம் அமைச்சர்களாம். நாங்களும் அமைச்சர்கள். நீங்களும் அமைச்கர்கள்தான்.
நாங்கள் மட்டும் அவர்களுக்கு பதிலே பேசக் கூடாதாம். எங்களுக்கு நிஜமாக இந்த கட்டளை. நேற்று கூட வாட்ஸ்அப்பில் போட்டிருக்கிறார்கள். அவர்கள் எது வேண்டுமென்றாலும் பேசிக்கிட்டு போவார்கள். நாங்கள் எதுவும் பேசவில்லை. அது கூட கரெக்ட்தான். தெருவுல நாய் குலைக்குது, அது பின்னாடி நாம் போக முடியுமா? இல்ல.
என்னுடைய நெசவுத்துறையில் அரசு ஏராளமா செய்திருக்கிறது. யார் யாரோ வந்து என்னமும் பேசுங்கள். ஒன்னும் வேலைக்காகாது. யாரும் முதல்வரை தொட்டுக்கூட பார்க்க முடியாது.
இவ்வாறு அமைச்சர் ஆர். காந்தி பேசினார்.
குமரி மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் எம். ஆர். காந்தி.
எம். ஆர். காந்தி பாரதிய ஜனதா கட்சியின் மாநில துணை தலைவராகவும் உள்ளார். இவரது வீடு நாகர்கோவில் ராமவர்மபுரத்தில் உள்ளது.
எம். ஆர். காந்தி தினமும் வீட்டில் இருந்து ஆசாரிபள்ளம் சாலையில் நடை பயிற்சிக்கு செல்வது வழக்கம். கடந்த 2013-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 21-ந் தேதியும் அவர் வீட்டில் இருந்து தனியாக நடை பயிற்சிக்கு சென்றார். அப்போது ஒரு கும்பல் அவரை வழிமறித்து தாக்கினர். அரிவாளாலும் வெட்டினர்.
எம்.ஆர். காந்தி தாக்கப்பட்டது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தினர். பின்னர் திருவிதாங்கோட்டை சேர்ந்த அப்துல் சமீம், இடலாக்குடியை சேர்ந்த செய்யது அலி நவாஸ், பிரபு என்ற அப்துல் அஜிஸ், மேலப்பாளையத்தை சேர்ந்த முகமது காலின் மற்றும் ஷாஜி ஆகிய 5 பேரை கைது செய்தனர். இவர்கள் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு நாகர்கோவில் முதன்மை ஜூடிசியல் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் நடந்து வந்தது.
இந்த வழக்கின் விசாரணை முடிவுக்கு வந்ததை தொடர்ந்து கடந்த 2-ந் தேதி இந்த வழக்கின் தீர்ப்பு கூறப்படும் என அறிவிக்கப்பட்டது. அன்று கோர்ட்டில் இந்த வழக்கின் 5 குற்றவாளிகளில் 4 பேர் மட்டுமே ஆஜர் ஆனார்கள். இதையடுத்து 5 பேரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்த வேண்டும் என உத்தரவிட்ட நீதிபதி, வழக்கின் தீர்ப்பை 13-ந் தேதிக்கு ஒத்திவைத்தார்.
இதையடுத்து இன்று இந்த வழக்கின் குற்றவாளிகள் 5 பேரும் கோர்ட்டில் ஆஜர் ஆனார்கள்.
இதையடுத்து இந்த வழக்கின் தீர்ப்பு இன்று வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்பட்டது. இதற்கிடையே நாகர்கோவில் முதன்மை ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு பாண்டிய ராஜ், இந்த வழக்கின் தீர்ப்பை வருகிற 16-ந் தேதி வழங்கப்படும் என அறிவித்தார். எனவே இந்த வழக்கின் தீர்ப்பு வருகிற 16-ந் தேதி வெளியாகும் என தெரிகிறது.






