search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Roads damaged"

    • சொத்து வரி உயர்வு, தமிழக அரசு மின் கட்டணத்தை உயர்த்தியதற்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது.
    • அனைத்து பள்ளிகளிலும் தகுதி அடிப்படையில் திறமைவாய்ந்த ஆசிரியர் நியமனம் செய்ய வேண்டும்.

    திருப்பூர் :

    திருப்பூரில் பாரதிய ஜனதா கட்சியின் செயற்குழு கூட்டம் மாவட்ட தலைவர் செந்தில்வேல் தலைமையில் கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது.கூட்டத்தில் துணைத்தலைவர் கனகசபாபதி, மாநில செயலாளர் மலர்க்கொடி, மாவட்ட பார்வையாளர் ஜி.கே.செல்வகுமார், கோவை பெருங்கோட்ட அமைப்பு செயலாளர் பாலகுமார், ஈரோடு கோட்ட பொறுப்பாளர் பாய்ண்ட் மணி, மாவட்ட பொதுச்செயலாளர்கள் சீனிவாசன், மாமன்ற உறுப்பினர் காடேஸ்வரா தங்கராஜ், பாலசுப்பிரமணியம், மாவட்ட பொருளாளர் நடராஜ், மற்றும் நிர்வாகிகள் ,செயற்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில் திருப்பூர் மாநகராட்சியில் சொத்து வரி உயர்வு, தமிழக அரசுமின் கட்டணத்தை உயர்த்தியதற்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது. மேலும் பல்லடம் பேருந்து நிலையம் அருகே திருச்சி கோவை மெயின் ரோட்டில் மேம்பாலம் பணி மற்றும் நிதி ஒதுக்கிய பல்லடம் புறவழிசாலை திட்ட பணியை விரைவில் துவங்கவேண்டும்.

    திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசுபள்ளிகளிலும் போதிய ஆசிரியர்கள்இல்லாமல் மாணவர்களின் கல்வி இன்று கேள்விகுறியாக இருக்கிறது. அனைத்து பள்ளிகளிலும் தகுதி அடிப்படையில் திறமைவாய்ந்த ஆசிரியர் நியமனம் செய்ய வேண்டும்.திருப்பூர் மாநகராட்சியில் பல இடங்களில் சாலைகள் மிக மோசமாக பயன்படுத்த முடியாதஅளவில் உள்ளது. அதனால் விபத்துகள் அதிக அளவில் நடந்து உயிரிழப்புகள்ஏற்படுகிறது. அதை மாநில அரசு விரைந்து சரிசெய்ய வேண்டும்.

    பெண்கள் இலவச பயணம் என்ற நடைமுறைக்கு பின் டவுன்பஸ் எண்ணிக்கையைகுறைத்துவிட்டதை வன்மையாக கண்டிக்கிறோம்.மத்திய அரசின் ஆவாஸ்யோஜனா (அனைவருக்கும் வீடுகட்டும்திட்டம்) ஏழைமக்களுக்கான மத்திய அரசின் இத்திட்டத்தினை மாநில அரசு சரிவரசெயல்படுத்துவதில்லை .திட்டத்தினை மாநில அரசு ஏழை மக்களுக்கு கொண்டு செல்லும்வகையில் செயல்படுத்த வேண்டுகிறோம்.

    திருப்பூர் பழைய பேருந்து நிலையத்திற்கு முன்னாள் முதல்வர்கலைஞர் கருணாநிதியின் பெயர் வைக்க போட்ட தீர்மானத்தை திருப்பூர் மாநகராட்சி ரத்து செய்து முன்னாள்சேர்மன் கே.என். பழனிச்சாமி கவுண்டர் பெயரை வைக்கவேண்டும்.ஆழியாறு-நல்லாறு இணைப்பு பணியை விரைவில் துவங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    மழைக்கு பிறகு சாலைகள் மிக மோசமாக காணப்படுவதால் அவற்றை போர்க்கால அடிப்படையில் உடனே செப்பனிட வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். #Rain
    சென்னை:

    சென்னை ‘பெருநகரம்’ என்ற அந்தஸ்தை பெற்றாலும் கூட சாலை தரம் இன்னும் உயர்த்தப்படவில்லை. நகரின் உட்புற சாலைகள் மிகவும் மோசமான நிலையில் காணப்படுகின்றன. குண்டும் குழியுமான சாலைகளில் இரு சக்கர வாகனங்கள், கார் போன்றவை செல்லும் போது பாதிக்கப்படுகின்றன.

    மழை காலம் தொடங்கி விட்டதால் குழிகளில் நிரம்பி நிற்கும் தண்ணீரில் வாகனங்கள் செல்லும்போது பொதுமக்கள் தடுமாறி கீழே விழுகின்ற நிலை உள்ளது.

    சாலையை துண்டித்து கேபிள் மற்றும் சாக்கடை கால்வாய் அடைப்பு போன்றவற்றை சரி செய்வதற்காக தோண்டப்பட்ட குழிகளால் மிகவும் மோசமாக காணப்படுகின்றன. குறிப்பாக மோட்டார் சைக்கிளில் செல்லக்கூடியவர்கள் மழை நேரத்தில் பள்ளம் தெரியாமல் வாகனத்தோடு விழுகிறார்கள்.

    சென்னையில் 387 கிலோ மீட்டர் தூரத்திற்கு 471 போக்குவரத்து சாலைகளும் 5500 கிலோ மீட்டர் தூரத்திற்கு 3174 உட்புற சாலைகளும் உள்ளன. இந்த சாலைகளில் முக்கிய ரோடுகளில் பள்ளங்கள் அதிகளவு இருக்கின்றன.

    அதனை மாநகராட்சி அதிகாரிகள் ஆய்வு செய்து உடனுக்குடன் சாலைகளை சரி செய்ய வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கிறார்கள். மழைக்கு பிறகு சாலை மிக மோசமானதாக காணப்படுகிறது. அவற்றை போர்க்கால அடிப்படையில் உடனே செப்பனிட வேண்டும் என வாகன ஓட்டிகள் எதிர்பார்க்கிறார்கள்.

    முகப்பேர் மேற்கு, சூளைமேடு மார்க்கெட் ரோடு, பெரம்பூர் பேரக்ஸ்ரோடு, ஸ்டீபன் சாலை உள்ளிட்ட முக்கிய சாலைகள் குண்டும் குழியுமாக இருப்பதால் விபத்துகள் அதிகம் ஏற்படுகின்றன.

    இது குறித்து மாநகராட்சி உயர் அதிகாரி கூறுகையில், மாநகராட்சி பகுதியில் போடப்படும் சாலைகள் தரமாக இருப்பதால் உடனே பாதிப்பு ஏற்படவில்லை. சாலைகளின் குறுக்கே வெட்டுவதால் ஒரு சில இடங்களில் குழிகள் ஏற்பட்டு இருக்கின்றன. 90 சதவீத சாலைகள் நன்றாக இருக்கின்றன. ஒரு சில சாலைகள் மட்டுமே சேதமடைந்து இருக்கின்றன. சாலைகளை சீரமைக்க ரூ.200 கோடிக்கு டெண்டர் விடப்பட்டுள்ளது.

    மழைக்காலம் முடிந்தவுடன் 3 ஆயிரம் உட்புற சாலைகள் 20 போக்குவரத்து சாலைகள் சீரமைக்கப்பட உள்ளன. ஜனவரி மாதம் 15-ந்தேதிக்கு பிறகு இந்த பணிகள் தொடங்கும் என்றார். #Rain
    ஆந்திரா மாநிலத்தின் ஸ்ரீகாகுளம், விஜயநகரம் மாவட்டங்களில் டிட்லி புயல் தாக்கியதில் 8 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். முக்கிய நகரங்களை இணைக்கும் சாலைகள் துண்டிக்கப்பட்டு சேதமடைந்துள்ளது. #TitliCyclone
    ஐதராபாத்:

    வங்கக் கடலில் கடந்த திங்கட்கிழமை குறைந்த காற்றழுத்தம் தோன்றியது. நேற்று முன்தினம் அது வலுப்பெற்று புயலாக மாறியது. அந்த புயலுக்கு “டிட்லி” என்று பெயர் சூட்டப்பட்டது. இந்தியில் ‘டிட்லி’ என்றால் “வண்ணத்துப் பூச்சி” என்று அர்த்தமாகும். இந்த ஆண்டு உருவான புயல்களில் டிட்லி புயல்தான் அதிக வலுவான புயல் என்று வானிலை இலாகா அறிவித்தது.

    டிட்லி புயல் அதிதீவிரமாக மாறிய நிலையில் வடக்கு நோக்கி நகர்ந்ததால் தமிழகம் புயல் ஆபத்தில் இருந்து தப்பியது. நேற்று மாலை டிட்லி புயல் ஒடிசாவின் கோபால்பூர் மற்றும் ஆந்திராவின் கலிங்கப்பட்டினம் இடையே வங்கக் கடலில் சுமார் 200 கி.மீ. தூரத்தில் மையம் கொண்டிருந்தது.

    டிட்லி புயல் ஆந்திராவின் வடக்கு, ஒடிசாவின் தெற்கு கடலோர மாவட்டங்களை மிக கடுமையாக தாக்கும் என்றும் அப்போது மணிக்கு 150 கி.மீ. வேகத்தில் சூறைக்காற்று வீசும் என்றும் அறிவிக்கப்பட்டது. அந்த புயல் வியாழக்கிழமை (இன்று) அதிகாலை கரையை கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் கூறியிருந்தது.

    இந்நிலையில், இன்று அதிகாலை 4.30 மணிக்கு டிட்லி புயல் ஒடிசா மற்றும் ஆந்திரா மாநிலங்களுக்கு இடையே கரையை கடந்தது. அப்போது மணிக்கு சுமார் 140 கி.மீ. முதல் 150 கி.மீ. வேகத்தில் சூறைக்காற்று வீசியது. 

    இதையடுத்து ஆந்திராவின் விசாகப்பட்டினம், விஜயநகரம், ஸ்ரீகாகுளம் ஸ்ரீகாகுளம் மாவட்டத்தில் புயல் கரையை கடந்து கொண்டிருந்தபோது அது மேலும் வடக்கு திசை நோக்கி நகர்ந்தது. இதனால் ஒடிசா கடலோர பகுதிகளில் குறிப்பாக கோயில்பூர் பகுதியில் புயல் தாக்கம் ஏற்பட்டது.



    மிக பலத்த மழை காரணமாக ஆந்திராவின் வடக்கு பகுதியிலும் ஒடிசாவின் தென் பகுதியிலும் ஏராளமான இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. ஆயிரக்கணக்கான மரங்கள் வேரோடு சாய்ந்து விட்டன. மின் கம்பங்களும் சரிந்து கிடக்கின்றன.

    ஆந்திராவின் ஸ்ரீகாகுளம், விஜயநகரம் ஒடிசாவின் கஞ்சம், பூரி, குந்தா, ஜெகத்சசிங்பூர், கேந்திராபாரா ஆகிய 6 மாவட்டங்களையும் டிட்லி புயல் துவம்சம் செய்துவிட்டது.

    ஆந்திராவின் ஸ்ரீகாகுளம் மற்றும் விஜயநகரம் மாவட்டங்களில் டிட்லி புயலுக்கு 8 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். தொடர்ந்து மழை பெய்து வருவதால் பல இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. நகரங்களை இணைக்கும் முக்கிய சாலைகள் துண்டிக்கப்பட்டன.

    இந்த மாவட்டங்களில் இருந்து சுமார் 3 லட்சம் பேர் வீடுகளில் இருந்து வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

    டிட்லி புயலால் பாதிக்கப்படுபவர்களுக்கு உதவிகள் மற்றும் மீட்புப் பணிகளை செய்ய தேசிய பேரிடர் மீட்புக்குழுவின் 19 கம்பெனி படையினர் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு படகுகளில் சென்று அவர்கள் மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். #TitliCyclone 
    ×