search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Rejuvenation Camp"

    புத்துணர்வு முகாம் முடிந்து பழனி கோவில் யானை கஸ்தூரி இன்று பழனிக்கு வந்தது. #RejuvenationCamp
    பழனி:

    தமிழகத்தில் உள்ள கோவில்கள் மற்றும் திருமடங்களைச் சேர்ந்த யானைகளுக்கு இந்து சமய அறநிலையத்துறை சார்பில் புத்துணர்வு முகாம் நடத்தப்பட்டு வருகிறது. கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் தேக்கம்பட்டியில் உள்ள பவானி ஆற்றுப்படுகையில் இந்த முகாம் கடந்த டிசம்பர் 14-ந் தேதி தொடங்கியது.

    வனபத்ரகாளியம்மன் கோவில் அருகே நடந்த இந்த முகாமில் தமிழகம் முழுவதிலும் இருந்து 28 யானைகள் பங்கேற்றன. யானைகள் புத்துணர்வு பெறும் வகையில் காலை, மாலை 2 வேளையும் நடை பயிற்சி, ‌ஷவர் குளியலில் ஈடுபட்டன.

    யானைகளுக்கு சமச்சீர் உணவு, பசுந்தீவனங்கள் வழங்கப்பட்டு கால்நடை பராமரிப்புத்துறை மருத்துவ குழுவினர் 2 வேளையும் யானைளுக்கு மருத்துவ பரிசோதனை அளித்து வந்தனர்.

    48 நாட்கள் நடந்த இம்முகாம் நேற்று நிறை வடைந்தது. இதனையடுத்து யானைகள் அனைத்துக்கும் பழம், கரும்பு ஆகியவை வழங்கப்பட்டு அந்தந்த கோவில்களுக்கு அனுப்பி வைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. பின்னர் கண்ணீர் மல்க ஒவ்வொரு யானையும் பிரியாவிடை கொடுத்து சொந்த ஊருக்கு திரும்பின.

    பழனி கோவில் யானை கஸ்தூரி தனி லாரி மூலம் இன்று காலை பெரியநாயகி அம்மன் கோவிலுக்கு வந்தது. அதற்கு கோவில் நிர்வாகம் சார்பிலும் பக்தர்கள் ஏராளமானோர் வந்து உற்சாக வரவேற்பு தந்தனர். முகாமுக்கு செல்லும்போது யானையின் எடை 4 ஆயிரத்து 890 கிலோவாக இருந்தது. தற்போது 40 கிலோ எடை குறைந்து 4850 கிலோ எடை உள்ளது. முகாமில் பழனி கோவில் யானை பல்வேறு போட்டிகளில் கலந்துகொண்டு வெற்றி பெற்றதுடன் மற்ற யானைகளுடன் கலகலப்பாக செயல்பட்டது என பாகன்கள் பிரசாந்த் மற்றும் சங்கரன்குட்டி தெரிவித்தனர். யானைகளுக்கு மட்டுமின்றி பாகன்களுக்கும் புத்துணர்வு முகாமில் போட்டிகள் வைக்கப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டது.

    யானையின் உடல்நிலை முகாமுக்கு சென்று திரும்பிய பிறகு மிகவும் ஆரோக்கியமாக உள்ளது என கால்நடை மருத்துவர் முருகன் தெரிவித்தார். 48 நாட்கள் முகாமில் பங்கேற்று பழனிக்கு திரும்பிய கஸ்தூரி யானைக்கு கோவில் இணை ஆணையர் செல்வராஜ், துணை ஆணையர் செந்தில்குமார் தலைமையில் பக்தர்கள் பிரசாதங்கள் வழங்கி சிறப்பான வரவேற்பு அளித்தனர்.  #RejuvenationCamp



    புத்துணர்வு முகாம் முடிந்து நெல்லையப்பர் கோவில் யானை காந்திமதி இன்று நெல்லைக்கு திரும்பி வந்தது. #RejuvenationCamp
    நெல்லை:

    தமிழகத்தில் உள்ள கோவில்கள் மற்றும் திருமடங்களை சேர்ந்த யானைகளுக்கு இந்து சமய அறநிலையத்துறை சார்பில் புத்துணர்வு முகாம் நடத்தப்பட்டு வருகிறது. கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் தேக்கம்பட்டியில் உள்ள பவானி ஆற்றுப் படுகையில் இந்த முகாம் கடந்த டிசம்பர் 14-ந்தேதி தொடங்கியது.

    வனபத்ரகாளியம்மன் கோவில் அருகே நடந்த இந்த முகாமில் தமிழகம் முழுவதிலும் இருந்து 28 யானைகள் பங்கேற்றன. யானைகள் புத்துணர்வு பெறும் வகையில் காலை, மாலை 2 வேளையும் நடைபயிற்சி, சவர் குளியலில் ஈடுபட்டன.

    யானைகளுக்கு சமச்சீர் உணவு, பசுந்தீவனங்கள் வழங்கப்பட்டு கால்நடை பராமரிப்புத்துறை மருத்துவ குழுவினர் 2 வேளையும் யானைளுக்கு மருத்துவ பரிசோதனை அளித்து வந்தனர்.

    48 நாட்கள் நடந்த இம்முகாம் நேற்று நிறைவடைந்தது. இதனையடுத்து யானைகள் அனைத்துக்கும் பழம், கரும்பு ஆகியவை வழங்கப்பட்டு அந்தந்த கோவில்களுக்கு அனுப்பி வைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. பின்னர் கண்ணீர் மல்க ஒவ்வொரு யானையும் பிரியாவிடை கொடுத்து சொந்த ஊருக்கு திரும்பின.

    நெல்லையப்பர் கோவில் யானை காந்திமதி இன்று காலை நெல்லைக்கு வந்து சேர்ந்தது. நெல்லையப்பர் கோவில் வாசலில் காந்திமதி யானைக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு வரவேற்பு அளிக்கப்பட்டது. இதில் கோவில் நிர்வாகிகள் மற்றும் பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    காந்திமதி யானையுடன் பாகன்கள் ராம்தாஸ், விஜயகுமார், மகாராஜா ஆகி யோரும் முகாமுக்கு சென்று திரும்பி உள்ளனர். முகாம் குறித்து அவர்கள் கூறியதாவது:-

    புத்துணர்வு முகாமில் யானைகளுக்கு சத்து உருண்டை, வைட்டமின் மாத்திரைகள் மற்றும் மருந்துகள் வழங்கப்பட்டன. நெல்லையப்பர் கோவில் யானை மற்ற யானைகளுடன் சேர்ந்து நன்றாக பழகி விளையாடியது. முக்கியமாக மயிலாடுதுறை கோவில் யானையான அவையம்மாளுடன் ஜோடி சேர்ந்து தினமும் வாக்கிங், சவர் குளியல் மேற்கொண்டது.

    யானை காந்திமதிக்கு தற்போது 46 வயதாகிறது. இதனால் மருத்துவர்கள் காந்திமதியின் உடல் எடையை குறைக்க பயிற்சி அளித்தனர். முகாமுக்கு போகும் முன் 4420 எடையுடன் இருந்த காந்திமதி, தற்போது 4360 கிலோவாக உள்ளது. மொத்தம் 60 கிலோ எடை குறைக்கப்பட்டுள்ளது.

    இந்த ஆண்டு புத்துணர்வு முகாமில் யானைகளுக்கு மட்டும் இல்லாமல் பாகன்களுக்கும் விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டன. மேலும் யானைகளை சிறப்பாக பராமரிக்க பயிற்சியும் வழங்கப்பட்டது.

    இவ்வாறு அவர்கள் கூறினர். #RejuvenationCamp




    மேட்டுப்பாளையம் பவானி ஆற்றுப்படுகையில் நேற்று தொடங்கிய யானைகள் சிறப்பு நல வாழ்வு முகாமில் காலை, மாலை நேரத்தில் யானைகள் உற்சாகத்துடன் நடைபயிற்சியை மேற்கொள்கின்றன. #Elephants #Rejuvenationcamp
    மேட்டுப்பாளையம்:

    கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் வனபத்ரகாளியம்மன் கோவில் அருகில் தேக்கம்பட்டி பவானி ஆற்றுப்படுகையில் யானைகள் சிறப்பு நலவாழ்வு முகாம் நேற்று தொடங்கியது.

    தமிழக அரசு இந்து சமய அறநிலையத்துறை சார்பில் தமிழகத்தில் உள்ள கோவில்கள் மற்றும் மடங்களைச்சேர்ந்த யானைகளுக்கு புத்துணர்வு அளிக்கும் வகையில் முகாம் நடைபெற்று வருகின்து. நேற்று தொடங்கிய முகாமில் மொத்தம் 27 யானைகள் கலந்து கொண்டு புத்துணர்வு பெற்று வருகின்றன.

    முகாமில் கலந்து கொண்ட யானைகள் மிகவும் மகிழ்ச்சியுடன் காணப்படுகின்றன. குளிர்காற்று வீசும் காலை வேளை மற்றும் மாலை நேரத்தில் யானைகள் உற்சாகத்துடன் நடைபயிற்சியை மேற்கொள்கின்றன. வயது உடல் எடைக்கேற்றாற்போல் யானைகளுக்கு நடைபயிற்சி அளிக்கப்படுகிறது. நடைபயிற்சிக்குப்பின்னர் பாகன்கள் யானைகளை ‌ஷவர் மேடை மற்றும் குளியல் மேடையில் குளிக்க வைக்கின்றனர்.

    யானைகள் நீண்ட நேரம் குளியல் மேடையில் ஆனந்தக்குளியல் இடுகின்றன. தண்ணீரை தும்பிக்கையால் தனது உடல்மீது வாரியிறைத்து விளையாடுகின்றன. குளியலுக்குப்பின்னர் யானைகளுக்கு கால்நடை மருத்துவர்களின் ஆலோசனைப்படி அரிசி சாதம், கொள்ளு, பசுந்தீவனங்கள், பழங்கள், அஷ்டசூரணம் பயோபூஸ்ட் ஆகியவை வழங்கப்படுகிறது. அதன் பின்னர் யானைகள் தீவன மேடைக்குச்சென்று தீவனங்களை தும்பிக்கையால் எடுத்துச்செல்கிறது. யானைகள் தனது உடலில் மண்ணை வாரியிறைத்து தங்களது ஆரோக்கியத்தை வெளிப்படுத்துகின்றன.

    ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவில் யானை ராமலட்சுமியும், மயிலாடுதுறை மயூரநாதசுவாமி கோவில் யானை அபயாம்பிகையும் ஒரு வருடத்துக்கு பின் சந்தித்ததால் ஒன்றுக்கு ஒன்று துதிக்கையால் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியது.

    காட்டுயானைகள் முகாமிற்குள் புகுந்துவிடாமல் தடுக்க மாலை நேரத்தில் சூரிய மின்வேலி, தொங்கு மின்வேலிகள் இயக்கப்படுகின்றது. சீரியல் பல்புகளும் எரிய வைக்கப்படுகின்றன.  #Elephants #Rejuvenationcamp

    மேட்டுப்பாளையம் பவானி ஆற்றுப்படுகையில் யானைகள் நல வாழ்வு முகாம் இன்று தொடங்கியது. இந்த முகாமில் கோவில்கள் மற்றும் மடங்களை சேர்ந்த 27 யானைகள் கலந்து கொண்டன. #Elephants #Rejuvenationcamp
    மேட்டுப்பாளையம்:

    தமிழக இந்து அறநிலையத் துறை சார்பில் தமிழகத்தில் உள்ள கோவில்கள் மற்றும் மடங்களைச்சேர்ந்த யானைகளுக்கு புத்துணர்வு அளிக்கும் வகையில் நல வாழ்வு முகாம் கடந்த 2003-ம் ஆண்டு தொடங்கப்பட்டது.

    நீலகிரி மாவட்டம் முதுமலை தெப்பக்காட்டில் 4 ஆண்டுகளும் கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் வனபத்ரகாளியம்மன் கோவில் அருகே தேக்கம்பட்டி பவானி ஆற்றுப்படுகையில் 6 ஆண்டுகளும் யானைகள் சிறப்பு நலவாழ்வு முகாம் நடைபெற்றது.

    இதனைத்தொடர்ந்து 11-வது ஆண்டு யானைகள் சிறப்பு நலவாழ்வு முகாம் மேட்டுப்பாளையம் தேக்கம்பட்டி வனபத்ரகாளியம்மன் கோவில் பவானி ஆற்றுப்படுகையில் இன்று (வெள்ளிக்கிழமை) தொடங்கியது.

    தொடக்க நாளையொட்டி இன்று முகாம் முன் வாழை மரம் கட்டப்பட்டு இருந்தது. முகாம் முழுவதும் தென்னங்குருத்துகளால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது. காலையிலே பாகன்கள் தங்கள் யானைகளை அங்குள்ள குளியல் மேடை, ‌ஷவருக்கு அழைத்து சென்று குளிக்க வைத்தனர்.

    பின்னர் அந்தந்த கோவில்களின் அடையாளம் யானைகளின் நெற்றியில் இடப்பட்டது. இதனை தொடர்ந்து நெற்றி பட்டம் சூடி, யானை உடலில் அலங்கார துணி அணிவிக்கப்பட்டது.



    அதன் பின்னர் 27 யானைகளும் வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டு மாலைகள் அணிவிக்கப்பட்டது. பின்னர் ஆப்பிள், அன்னாசி, கரும்பு, தர்பூசணி, உருண்டை வெல்லம், வாழைப்பழம் உள்ளிட்ட உணவுகள் வழங்கப்பட்டது.

    இந்த முகாமில் கோவில்கள் மற்றும் மடங்களை சேர்ந்த 27 யானைகள் கலந்து கொண்டன. இந்த முகாம் அடுத்த மாதம் (ஜனவரி) 30-ந்தேதி வரை 48 நாட்கள் நடைபெறுகிறது.

    6 ஏக்கர் நிலப்பரப்பில் யானைகள் சிறப்பு நலவாழ்வு முகாம் அமைக்கப்பட்டுள்ளது. முகாம் அலுவலகம், பாகன்கள் தங்குமிடம் பாகன்கள் ஓய்வறை, தீவனமேடை, சமையல் கூடம், பாகன்கள் மற்றும் யானைகளுக்கு தனித்தனியாக மருத்துவ கொட்டகைகள். யானைகள் நடைபயிற்சி மேற்கொள்வதற்காக 3/4 கிலோ மீட்டர் சுற்றளவிற்கு நடைபாதை அமைக்கப்பட்டுள்ளது.

    யானைகளை குளிக்க வைப்பதற்காக குளியல் மேடை ‌ஷவர் மேடைகள் அமைக்கப்பட்டுள்ளது. காட்டு யானைகளின் நடமாட்டத்தைக் கண்காணிக்க முகாமைச்சுற்றிலும் வனப்பகுதியையொட்டி 8 இடங்களில் கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

    மேலும் முகாமிற்குள் காட்டு யானைகள் புகுந்து விடுவதைத்தடுக்க முகாமைச்சுற்றிலும் 1 1/2கிலோ மீட்டர் தூரத்திற்கு சூரிய மின்வேலி தொங்கு மின்வேலிகள் சீரியல் பல்புகள் அமைக்கப்பட்டுள்ளன. 14 இடங்களில் சி.சி.டி.வி. கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இரவு நேரத்திலும் ஒளிவிட்டுப்பிரகாசிக்க சக்தி வாய்ந்த மின் விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளன.

    அதையும் மீறி காட்டு யானைகள் வர முயன்றால் அதனை விரட்ட பட்டாசுகளுடன் வன ஊழியர்கள் தயார் நிலையில் உள்ளனர். முகாமுக்கு யானைகள் வரும் வழியில் பொதுமக்கள் கூட்டம் கூட்டமாக நின்று வேடிக்கை பார்த்தனர்.

    முகாம் ஒருங்கிணைப்பாளரும் கோவை இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையருமான ராஜமாணிக்கம் துணை ஆணையர் பழனிகுமார், உதவி ஆணையர்கள் ராமு, நந்தகுமார், உதவி கோட்ட பொறியாளர் பிரேம்குமார் மற்றும் அறநிலையத்துறை அலுவலர்கள் முகாமுக்கு வந்த யானைகளுக்கு தேவையான வசதிகளை செய்து கொடுத்தனர்.

    இந்து சமய அறநிலையத்துறை தலைமை இடத்து இணை ஆணையர் ஹரிப்பிரியா, சட்டம் இணை ஆணையர் அசோக் ஆகியோர் முகாமை பார்வையிட்டனர்.  #Elephants #Rejuvenationcamp

    மேட்டுப்பாளையத்தில் நாளை தொடங்கும் நல வாழ்வு முகாமிற்கு யானைகள் வரத் தொடங்கியது. #Elephants #Rejuvenationcamp
    மேட்டுப்பாளையம்:

    தமிழக இந்து சமய அறநிலையத்துறை சார்பில் தமிழகத்தில் உள்ள கோவில்கள் மற்றும் திருமடங்களை சேர்ந்த யானைகளுக்கு புத்துணர்வு அளிக்கும் வகையில் 48 நாட்கள் யானைகள் சிறப்பு நல வாழ்வு முகாம் நடத்தப்பட்டு வருகிறது.

    நீலகிரி மாவட்டம் முதுமலை தெப்ப காட்டில் 4 ஆண்டுகள் யானைகள் நல வாழ்வு முகாமும், கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் வன பத்ரகாளியம்மன் கோவில் அருகே தேக்கம்படி பவானி ஆற்றுப்படுகையில் 6 ஆண்டுகளும் இந்த முகாம் நடைபெற்றது.

    இந்த ஆண்டு 11-வது யானைகள் சிறப்பு நல வாழ்வு முகாம் நாளை (வெள்ளிக்கிழமை) தேக்கம்பட்டி பவானி ஆற்றுப்படுகையில் தொடங்குகிறது. இதற்கான பணிகள் முழு வீச்சில் நடைபெற்று முடிந்தது.

    முகாம் அலுவலகம், சமையல் கூடம், யானை பாகன்கள் தங்கும் இடம், ஓய்வறை, யானைகள் நடைபயிற்சி மேற்கொள்ள நடைபாதை, குளியல் மேடை, ‌ஷவர் மேடை அமைக்கப்பட்டு உள்ளது.

    முகாமுக்குள் காட்டு யானைகள் புகுந்து விடாமல் கண்காணிக்க 8 கண்காணிப்பு மேடை அமைக்கப்பட்டு இருக்கிறது. சூரிய மின்வேலி, தொங்கும் மின்வேலி அமைக்கப்பட்டுள்ளது.

    முகாமை அமைச்சர்கள் சேவூர் ராமச்சந்திரன், எஸ்.பி. வேலுமணி ஆகியோர் தொடங்கி வைக்கிறார்கள். முகாமில் பங்கேற்பதற்காக அந்தந்த ஊர்களில் இருந்து கோவில் யானைகள் நேற்றே மேட்டுப்பாளையம் புறப்பட்டது.

    இன்று காலை 7 மணிக்கு முதல் முதலாக மயிலாடுதுறை மயூரநாத சுவாமி கோவில் யானை அபயாம்பிகை வந்து சேர்ந்தது.

    அதனை தொடர்ந்து திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோவில் யானை அபிராமி, கும்பகோணம் உப்பிலியப்பன் கோவில் யானை பூமா ஆகியவை வந்து சேர்ந்தது. காலை 9 மணி வரை 10 யானைகள் முகாமிற்கு வந்தது.

    முகாமிற்கு வரும் யானைகளை லாரிகளில் இருந்து இறக்குவதற்கு வசதியாக வனபத்ரகாளியம்மன் கோவில் பின்புற வளாகத்தில் சாய்வு மண் திட்டு அமைக்கப்பட்டு இருந்தது.

    அங்கு யானைகள் இறக்கப்பட்டது. பின்னர் வன பத்ரகாளியம்மன் கோவிலுக்கு யானைகள் அழைத்து வரப்பட்டது. அங்கிருந்த கொடி மரம் முன் நின்ற யானைகள் துதிக்கையை தூக்கி அம்மனை வணங்கியது.

    மயிலாடுதுறை மயூரநாத சுவாமி கோவில் யானை அபயாம்பிகை முகாமில் உள்ள ‌ஷவரில் குளித்து மகிழும் காட்சி.

    பின்னர் முகாமிற்கு அழைத்து செல்லப்பட்டது. அங்கு பசுந்தீவனம் அளிக்கப்பட்டது. யானைகள் நீண்ட தூரம் லாரியில் பயணம் செய்து வந்ததால் களைப்பு தீர அங்குள்ள ‌ஷவரில் குளியில் போட்டது.

    பின்னர் யானைகள் ஓய்வு எடுக்க தொடங்கியது.  #Elephants #Rejuvenationcamp
    ×