search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "rehearse"

    • வெள்ளத்தில் சிக்குபவர்களை மீட்பது குறித்து பொதுமக்களுக்கு பயிற்சி
    • உள்ளூர்வாசிகள் மட்டுமின்றி கோவிலுக்கு வந்திருந்த பக்தர்களும் பங்கேற்பு

    மேட்டுப்பாளையம்,

    கோவை மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியையொட்டி கேரளா மாநிலம் மற்றும் நீலகிரி மாவட்டம் உள்ளது.

    ஆண்டு தோறும் இப்பகுதி களில் வடகிழக்கு பருவமழை தீவிரமாக இருக்கும். இதேபான்ற நேரங்களில் பில்லூர் அணைக்கு அந்த பகுதிகளில் பொழியும் மழைநீர் வந்தடையும். அப்போது மின் உற்பத்தி போக மீதமுள்ள நீர் பவானி ஆற்றில் திறந்து விடுவது வழக்கம். அப்போது மேட்டுப்பாளையம் பவானி ஆற்றங்கரை யோரத்தில் உள்ள மக்கள், வருவாய் துறையினர் சார்பில் பாதுகாப்பான இடங்களில் தங்க வைப்பது வழக்கம்.

    இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழையையொட்டி மேட்டுப்பாளையம் தீயணைப்பு துறையினர் சார்பில் வெள்ள பாதிப்பு நேரங்களில் வெள்ளத்தில் சிக்கியவர்களை எவ்வாறு மீட்பது என்பது குறித்து ஒத்திகை நிகழ்ச்சி வனபத்ர காளியம்மன் கோவில் அருகே நடத்தப்பட்டது.

    மேட்டுப்பாளையம் தீயணைப்பு நிலைய அலுவலர் பாலசுந்தரம் தலைமையில் 10-க்கும் மேற்ப்பட்ட வீரர்கள் பங்கேற்றனர். ஒத்திகை நிகழ்ச்சியில் வெள்ள பாதிப்பு காலங்களில் வெள்ளத்தில் சிக்கியவர்களை ரப்பர் படகு மூலம் எப்படி மீட்பது. அவர்களுக்கு எப்படி பாது காப்பு கவசம் வழங்குவது, பரிசல் மூலம் சென்று எப்படி காப்பாற்றுவது? என்பது உள்ளிட்ட பயிற்சிகள் அளிக்கப்பட்டன. இதில் உள்ளூர் பொது மக்கள் மட்டுல்லாமல், கோவிலுக்கு வந்திருந்த பக்தர்களும் பங்கேற்றனர்.

    • முன்எச்சரிக்கை நடவடிக்கை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
    • பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.

    பொன்னேரி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் தீயணைப்பு வீரர்கள் தீபாதுகாப்பு ஒத்திகை மற்றும் பருவமழை முன்எச்சரிக்கை நடவடிக்கை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

    இதில் பொன்னேரி தீயணைப்பு நிலைய அலுவலர் சம்பத், பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்

    கலவரத்தை கட்டுப்படுத்துவது தொடர்பாக போலீசாருக்கான ஒத்திகை நிகழ்ச்சி விழுப்புரத்தில் நேற்று நடைபெற்றது.
    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்ட காவல்துறை சார்பில் நேற்று காலை விழுப்புரம் காகுப்பத்தில் உள்ள ஆயுதப்படை போலீஸ் மைதானத்தில், கலவரத்தை கட்டுப்படுத்துவது தொடர்பான ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது.

    நிகழ்ச்சியில் போலீசார்களில் ஒரு தரப்பினர் சாதாரண உடையில் கலவரக்காரர்கள்போல் செயல்பட்டு கல்வீசியும், உருட்டுக்கட்டைகளை தூக்கி வீசியும் பொது சொத்துகளுக்கு சேதம் விளைவிக்கும் வகையில் அசம்பாவித சம்பவங்களில் ஈடுபட்டனர்.

    இதையறிந்ததும் மற்றொரு தரப்பு போலீசார் இன்ஸ்பெக்டர் நெடுஞ்செழியன் தலைமையில் விரைந்து வந்து கலவர தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர். இவர்கள் முதல்கட்டமாக கலவரத்தை தடுக்கும் வகையில் ஒலிப்பெருக்கி மூலம், கலவரக்காரர்களிடம் கும்பலாக கூடுவது சட்டவிரோதமானது, எனவே உடனடியாக கலைந்து செல்லுமாறு எச்சரிக்கை செய்தனர்.

    இதையடுத்து போலீசார், உயர் அதிகாரியின் உத்தரவை பெற்று அடுத்தகட்டமாக கலவரக்காரர்கள் மீது தண்ணீரை பீய்ச்சியடித்தும், பின்னர் வஜ்ரா வாகனத்தை வரவழைத்து அதன் மூலம் கலவரக்காரர்கள் மீது கண்ணீர் புகை குண்டுகளை வீசியும் ஒத்திகையில் ஈடுபட்டனர்.

    தொடர்ந்து போலீசாரை தாக்கும் வகையில் வருபவர்களை எப்படி தடுக்க வேண்டும் என்பதை விளக்கும் வகையில், போலீசார் தலைக்கவசம், கவச உடை அணிந்தபடி தடுப்பு நடவடிக்கை மேற்கொண்டனர். பின்னர் தடியடி நடத்துவது, துப்பாக்கி சூடு நடத்துவது போன்றும் ஒத்திகையில் ஈடுபட்டனர்.

    இவ்வாறு கலவர தடுப்பு ஒத்திகை நிகழ்ச்சியில் போலீசார் தத்ரூபமாக ஈடுபட்டனர். இதனை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் பார்வையிட்டு, கலவரம் நடைபெறும் இடங்களில் போலீசார் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதை பற்றி, அறிவுரைகளை வழங்கினார்.

    இந்த நிகழ்ச்சியின்போது மதுவிலக்கு கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு முகிலன், துணை போலீஸ் சூப்பிரண்டுகள் சங்கர், வீமராஜ், திருமால், இளங்கோவன், சரவணன், ராஜேந்திரன், முத்துமாணிக்கம் உள்ளிட்ட போலீஸ் அதிகாரிகள் பலர் உடனிருந்தனர். 
    ×