search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "rasagulla"

    • சுவீட் என்றதுமே குலோப்ஜாமூனிற்கு என்று தனி இடம் உண்டு.
    • பிஸ்கட்டை வைத்து குலோப் ஜாமூன் எப்படி செய்யலாம் என்று பார்க்கலாம்.

    குலோப்ஜாமூன் என்றாலே எல்லாருக்கும் பிடிக்கும். சுவீட் என்றதும் குலோப் ஜாமூனிற்கு என்று தனி இடம் உண்டு. குலோப்ஜாமூன், ரசகுல்லா எல்லாம் ஒரே கேட்டகரியில் வரக்கூடிய இனிப்பு வகைகள். அந்த வகையில குலோப்ஜாமூன் என்று சொல்லும் போதே எல்லாருடைய நாக்கிலும் அதன் சுவை எச்சில் ஊற வைத்துவிடும். அந்த அளவுக்கு சுவையாக இருக்கும் குலோப்ஜாமூன்.

    குலோப் ஜாமூன் மிக்ஸ் எல்லா கடைகளில் கிடைக்கும். அதை வாங்கித் தான் எல்லோரும் எப்பவுமே செய்துகொண்டு இருக்கிறோம். அந்த வகையில் இன்றைக்கு நாம் பிஸ்கட்டை வைத்து குலோப் ஜாமூன் எப்படி செய்யலாம் என்று பார்க்கலாம். அது என்னடா பிஸ்கட் குலோப் ஜாமூன் அப்படிங்கறிங்களா. சரி வாங்க பிஸ்கட் குலோப் ஜாமூன் எப்படி செய்யலாம் என்று தெரிஞ்சுக்கலாம்.

    தேவையான பொருட்கள்:

    பிஸ்கட்- 2 பாக்கெட்

    சர்க்கரை- 1 கப்

    ஏலக்காய் தூள்- 1 சிட்டிகை

    பால்- 1/2 கப்

    எண்ணெய்- தேவையான அளவு

    செய்முறை:

    முதலில் மேரி பிஸ்கட் பாக்கெட்டில் உள்ள பிஸ்கட்டுகளை மிக்சி ஜாரில் சேர்த்து பொடித்து எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். பிறகு அடுப்பில் ஒரு வாணலியை வைத்து சர்க்கரை சேர்த்து, தண்ணீர் ஊற்றி சர்க்கரை பாகு காய்ச்ச வேண்டும். அதில் ஏலக்காய் தூள் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.

    அதன்பிறகு பொடித்து வைத்துள்ள பிஸ்கட் பவுடரில் பாலை சிறிது சிறிதாக சேர்த்து குலாப் ஜாமுன் உருண்டைகள் உருட்டும் பதத்திற்கு மாவை பிசைந்து கொள்ள வேண்டும். பின்னர் பிசைந்து வைத்துள்ள மாவை சிறு சிறு உருண்டைகளாக வெடிப்பு இல்லாமல் உருட்டி தனியாக எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்

    பின்னர் அடுப்பில் ஒரு வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் உருட்டி வைத்துள்ள உருண்டைகளை எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுத்துக் கொள்ள வேண்டும். பிறகு காய்ச்சி வைத்துள்ள சர்க்கரைப்பாகில் பொரித்து வைத்துள்ள உருண்டைகளை சேர்த்து பாகை உறிந்த பின் சாப்பிட்டால் சுவையான பிஸ்கட் குலாப் ஜாமூன் தயார்.

    மேற்கு வங்காளத்தின் தினாஜ்பூரில் நடந்த பொதுக்கூட்டத்தில் முதல் மந்திரி மம்தா பானர்ஜி பேசுகையில், பாராளுமன்ற தேர்தலில் பாஜகவுக்கு ரசகுல்லாதான் கிடைக்கும் என கிண்டலாக குறிப்பிட்டார். #LokSabhaElections2019 #MamataBanerjee
    கொல்கத்தா:

    மேற்கு வங்காளம் மாநிலத்தின் தினாஜ்பூர் மாவட்டத்தில் உள்ள பாலுர்காட் பாராளுமன்ற தொகுதியில் தேர்தல் பிரசாரம் நடைபெற்றது. இதில் திரிணாமூல் காங்கிரஸ் தலைவரும் மேற்கு வங்காள முதல் மந்திரியுமான மம்தா பானர்ஜி கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:

    பிரதமர் மோடி இந்த தேர்தலில் பா.ஜ.க. அதிகப்படியான இடங்களை கைப்பற்றும் என பகல் கனவு கண்டுகொண்டிருக்கிறார். ஆனால் அவருக்கு ரசகுல்லா தான் கிடைக்கும்.

    இந்த தேர்தலில் பா.ஜ.க.வுக்கு ஒட்டுமொத்தமாக 100 இடங்களுக்கு மேல் கிடைக்காது. குறிப்பாக ஆந்திரா, தமிழ்நாடு, கேரளா ஆகிய மாநிலங்களில் ஒரு தொகுதியில் கூட பா.ஜ.க. வெற்றி பெறாது என தெரிவித்தார்.

    இனிப்பு வகையில் ஒன்றான ரசகுல்லா வங்காளதேசத்தில் மிகவும் பிரபலமானது. மேலும் மாணவர்கள் தேர்வில் பூஜ்யம் வாங்கினால் உள்ளூர் மக்கள் பூஜ்யத்தை ரசகுல்லா எனக்கூறி கேலி செய்வது வழக்கமாக உள்ளது நினைவிருக்கலாம். #LokSabhaElections2019 #MamataBanerjee
    ×