search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Rajiv case"

    தமிழ்நாட்டுக்குள் எந்த ஊருக்குள்ளும் ஆய்வு நடத்த கவர்னரை நுழைய விடமாட்டோம் என்று சென்னையில் இன்று நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் வைகோ பேசினார். #MDMK #Vaiko #RajivCase
    சென்னை:

    ராஜீவ் கொலை வழக்கில் தண்டனை காலம் முடிந்தும் விடுதலை செய்யப்படாமல் உள்ள பேரறிவாளன் உள்பட 7 பேரை விடுதலை செய்யக் கோரி இன்று கவர்னர் மாளிகை நோக்கி முற்றுகை போராட்டம் நடத்தப்படும் என ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ அறிவித்திருந்தார்.

    இந்த போராட்டத்துக்கு தி.மு.க. உள்ளிட்ட தோழமை கட்சிகள் ஆதரவு தெரிவித்திருந்தன.

    அதன்படி ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ தலைமையில் ஏராளமான கட்சி நிர்வாகிகள் சைதாப்பேட்டை சின்னமலை அருகே ஒன்று கூடி ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.

    இந்த போராட்டத்துக்கு தி.மு.க. செய்தி தொடர்பாளர் டி.கே.எஸ். இளங்கோவன் எம்.பி., மாவட்டச் செயலாளர்கள் மா.சுப்பிரமணியன், சேகர் பாபு, தாயகம் கவி எம்.எல்.ஏ., நிர்வாகிகள் சைதை குண சேகரன், பாலவாக்கம் விசுவநாதன், சோமு, மணிமாறன், ஏ.எம்.வி. பிரபாகர் ராஜா உள்ளிட்ட ஏராளமான தி.மு.க. நிர்வாகிகள் நேரில் ஆதரவு தெரிவித்தனர்.

    இந்திய கம்யூனிஸ்டு மாநில செயலாளர் முத்தரசன், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் மற்றும் வன்னியரசு, தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன், துணைப் பொதுச் செயலாளர் சத்ரியன் வேணுகோபால், பெருந்தலைவர் மக்கள் கட்சித் தலைவர் என்.ஆர்.தனபாலன், திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, மே-17 இயக்க நிர்வாகிகள், உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.

    போராட்டத்தில் மத்திய- மாநில அரசுகளை கண்டித்து கோ‌ஷம் எழுப்பினார்கள். விடுதலை செய், விடுதலை செய், 7 பேர்களை விடுதலை செய் உள்ளிட்ட பல்வேறு கோ‌ஷங்களை எழுப்பினார்கள்.

    ராஜீவ் கொலை வழக்கில் தண்டனை காலம் முடிந்த 7 பேரை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும். இதற்காக இன்று முற்றுகை போராட்டம் நடத்துகிறோம். 7 பேரின் விடுதலையில் தமிழக அரசு ஆர்வம் காட்டவில்லை. 7 பேரை விடுதலை செய்ய கவர்னர் மறுப்பது ஏன்?


    இது அரசியல் சாசன சட்டத்துக்கு விரோதமானது. கண்டிக்கத்தக்கது. உடனே அவர்களை விடுதலை செய்ய வேண்டும்.

    போட்டி அரசாங்கம் அமைத்து செயல்படுவது போன்று கவர்னர் பன்வாரிலால் புரோகித்தின் செயல்பாடு இருக்கிறது. எங்களின் அடுத்த போராட்டம் என்ன என்பதை இப்போது சொல்ல மாட்டேன். தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட எல்லோரிடமும் கலந்து பேசி அடுத்த போராட்டத்தை அறிவிப்பேன். அடுத்த போராட்டம் இதைவிட வேகமாக இருக்கும். தமிழ்நாட்டுக்குள் எங்கும் கவர்னரை நுழைய விடமாட்டேன். இதற்கு முன்பு தி.மு.க. மட்டும் தான் போராடியது. இனி எல்லோரும் சேர்ந்து போராடுவோம். தமிழ்நாட்டுக்குள் எந்த ஊருக்குள்ளும் ஆய்வு நடத்த அவரை நுழைய விடமாட்டோம். எந்த ஊர் அதிகாரிகளையும் பார்க்க விடமாட்டோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி பேசியதாவது:-

    7 பேரின் விடுதலையை அனைவரும் எதிர்நோக்கி உள்ள நேரத்தில் கவர்னர் இன்னும் மவுனமாக இருக்கிறார். சிறையில் உள்ள 7 பேரும் நம் சகோதரர்கள். நமது ரத்தங்கள். நமது உணர்வுகள். தேவையில்லாமல் உள்ளே வாடிக்கொண்டிருக்கிறார்கள். இவர்களை உடனே விடுதலை செய்ய தேவையான நடவடிக்கையை கவர்னர் எடுக்க வேண்டும் என்றார்.

    போராட்டத்தையொட்டி ஏராளமான போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது. #MDMK #Vaiko #RajivCase
    பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுவிப்பதற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கின் விசாரணையை உச்ச நீதிமன்றம் மூன்று வாரங்களுக்கு ஒத்திவைத்துள்ளது. #RajivCaseConvicts #SupremeCourt
    புதுடெல்லி:

    ராஜீவ் கொலை வழக்கில் தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுவிப்பது தொடர்பாக தமிழக ஆளுநருக்கு முழு அதிகாரம் இருப்பதாக உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. அதன் அடிப்படையில், 7 பேரையும் விடுதலை செய்யவேண்டும் என தமிழக அரசும் பரிந்துரை செய்துள்ளது. இந்த பரிந்துரை தொடர்பாக ஆளுநர் இன்னும் முடிவு எடுக்கவில்லை.

    இதற்கிடையே, 7 பேர் விடுதலை தொடர்பாக 2014ம் ஆண்டு சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருந்தது. அந்த தீர்மானத்தை எதிர்த்து, அமெரிக்கை நாராயணன், அப்பாஸ், ஜான் ஜோசப், சாமுவேல் திரவியம் மற்றும் ராம சுகந்தன் ஆகியோர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர்.


    இந்த வழக்கு 4 ஆண்டுகளுக்குப் பிறகு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர்கள் சார்பில் ஆஜராகவேண்டிய வழக்கறிஞர்கள் ஆஜராகவில்லை. எனவே விசாரணையை மூன்று வாரங்களுக்கு ஒத்திவைப்பதாக உச்ச நீதிமன்றம் அறிவித்தது.

    மேலும், 7 பேரை விடுவிப்பது தொடர்பாக தமிழக அமைச்சரவையின் தற்போதைய தீர்மானம் மற்றும் கூடுதல் ஆவணங்களை சேர்த்து புதிய மனுக்களை மூன்று வாரங்களுக்குப் பிறகு தாக்கல் செய்யும்படி மனுதாரர்களுக்கு உச்சநீதிமன்றம் கூறியுள்ளது. #RajivCaseConvicts #SupremeCourt
    ×