search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    7 பேரை விடுவிப்பதற்கு எதிரான வழக்கை மூன்று வாரங்களுக்கு ஒத்திவைத்தது உச்ச நீதிமன்றம்
    X

    7 பேரை விடுவிப்பதற்கு எதிரான வழக்கை மூன்று வாரங்களுக்கு ஒத்திவைத்தது உச்ச நீதிமன்றம்

    பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுவிப்பதற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கின் விசாரணையை உச்ச நீதிமன்றம் மூன்று வாரங்களுக்கு ஒத்திவைத்துள்ளது. #RajivCaseConvicts #SupremeCourt
    புதுடெல்லி:

    ராஜீவ் கொலை வழக்கில் தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுவிப்பது தொடர்பாக தமிழக ஆளுநருக்கு முழு அதிகாரம் இருப்பதாக உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. அதன் அடிப்படையில், 7 பேரையும் விடுதலை செய்யவேண்டும் என தமிழக அரசும் பரிந்துரை செய்துள்ளது. இந்த பரிந்துரை தொடர்பாக ஆளுநர் இன்னும் முடிவு எடுக்கவில்லை.

    இதற்கிடையே, 7 பேர் விடுதலை தொடர்பாக 2014ம் ஆண்டு சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருந்தது. அந்த தீர்மானத்தை எதிர்த்து, அமெரிக்கை நாராயணன், அப்பாஸ், ஜான் ஜோசப், சாமுவேல் திரவியம் மற்றும் ராம சுகந்தன் ஆகியோர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர்.


    இந்த வழக்கு 4 ஆண்டுகளுக்குப் பிறகு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர்கள் சார்பில் ஆஜராகவேண்டிய வழக்கறிஞர்கள் ஆஜராகவில்லை. எனவே விசாரணையை மூன்று வாரங்களுக்கு ஒத்திவைப்பதாக உச்ச நீதிமன்றம் அறிவித்தது.

    மேலும், 7 பேரை விடுவிப்பது தொடர்பாக தமிழக அமைச்சரவையின் தற்போதைய தீர்மானம் மற்றும் கூடுதல் ஆவணங்களை சேர்த்து புதிய மனுக்களை மூன்று வாரங்களுக்குப் பிறகு தாக்கல் செய்யும்படி மனுதாரர்களுக்கு உச்சநீதிமன்றம் கூறியுள்ளது. #RajivCaseConvicts #SupremeCourt
    Next Story
    ×