search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Rafael Agreement"

    ரபேல் போர் விமான ஒப்பந்த முறைகேடு வழக்கின் தீர்ப்பை திரும்ப பெற வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டை காங்கிரஸ் கட்சி வலியுறுத்தி உள்ளது. #RafaelDeal #Congress #SupremeCourt
    புதுடெல்லி:

    ரபேல் போர் விமான ஒப்பந்தத்தில் எந்த முறைகேடும் நடைபெற வில்லை என்று சுப்ரீம் கோர்ட்டு கடந்த 14-ந் தேதி தீர்ப்பு வழங்கியது.

    அந்த தீர்ப்பில், “ரபேல் போர் விமான விலை நிர்ணய விவரங்களை நாடாளுமன்றத்துக்கு தெரிவிக்கவில்லை. ஆனால் தலைமை கணக்கு தணிக்கையரிடம் தெரிவிக்கப்பட்டது என்று மத்திய அரசு தாக்கல் செய்துள்ள பிரமாண பத்திரம் கூறுகிறது. தலைமை கணக்கு தணிக்கையரின் அறிக்கையை நாடாளுமன்ற பொது கணக்கு குழு ஆய்வும் செய்துள்ளது” என்று நீதிபதிகள் சுட்டிக்காட்டி உள்ளனர்.



    இது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

    ஏனெனில், சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தில் கூறப்பட்டுள்ளபடி, ரபேல் போர் விமான ஒப்பந்தம் தொடர்பான தலைமை கணக்கு தணிக்கையர் அறிக்கை நாடாளுமன்ற பொது கணக்கு குழுவுக்கு வரவில்லை என்று, அந்த குழுவின் தலைவரும், மக்களவை காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே மறுத்துள்ளார்.

    இந்த நிலையில் காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரான ஆனந்த் சர்மா, டெல்லியில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-

    சுப்ரீம் கோர்ட்டை மத்திய அரசு தவறாக வழிநடத்தியதோடு மட்டுமல்லாமல், நாடாளுமன்ற உறுப்பினர்களின் உரிமையையும் மீறி உள்ளது. சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு தவறான தகவல் அளித்திருப்பது இதுவே முதல் முறை. மேலும், மோசடியான தீர்ப்பை பெற சுப்ரீம் கோர்ட்டை தவறாக வழி நடத்தி உள்ளது.

    செல்லுபடியாகாத அந்த தீர்ப்பை சுப்ரீம் கோர்ட்டு திரும்ப பெற வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி வலியுறுத்துகிறது. சுப்ரீம் கோர்ட்டு தனது கண்ணியத்தைக் காத்துக்கொள்வதற்காக இதைச் செய்ய வேண்டும்.

    இந்த விவகாரத்தில், சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு நிவாரண மனு தாக்கல் செய்திருக்கிறது. ஆனால் தவறாக நடந்துகொண்டுள்ள நிலையில், அதன் நம்பகத்தன்மை மீது ஒரு இருண்ட நிழல் விழுந்துள்ள போது, மத்திய அரசின் மனுவை சுப்ரீம் கோர்ட்டு பரிசீலிக்கக்கூட முகாந்திரம் கிடையாது.

    பொய் வாக்குமூலம் அளித்ததற்காகவும், நீதிமன்றத்தை அவமதித்ததற்காகவும் சுப்ரீம் கோர்ட்டிடம் மன்னிப்பு கேட்பதற்கு பதிலாக இப்போது சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதியும், சக நீதிபதிகளும் ஆங்கில மொழியையும், இலக்கணத்தையும் புரிந்துகொள்ளவில்லை என்று மத்திய அரசு சொல்கிறது.

    மேலும், நீதிபதிகள் தவறாக புரிந்து கொண்டு விட்டனர் என்றும் அரசு கூறுகிறது.

    மத்திய அரசு, நாடாளுமன்ற உறுப்பினர்களை தவறாக வழிநடத்தி இருக்கிறது. அத்துடன், தலைமை கணக்கு தணிக்கையர் அறிக்கை அளித்து, அதை பொதுக்கணக்கு குழு ஆய்வு செய்திருக்கிறது என்று கூறி நாடாளுமன்ற உறுப்பினர்களின் உரிமையையும் மீறி உள்ளது.

    தலைமை கணக்கு தணிக்கையர் அறிக்கை அளிக்கவே இல்லை.

    ரபேல் போர் விமான ஒப்பந்தத்தை பொறுத்தமட்டில் விசாரணை நடத்த சுப்ரீம் கோர்ட்டு சரியான அமைப்பு அல்ல என்பதுதான் காங்கிரஸ் கட்சியின் உறுதியான நிலைப்பாடு. மரியாதைக்குரிய சுப்ரீம் கோர்ட்டும் இதை ஒப்புக்கொண்டுள்ளது. பாரதீய ஜனதா கட்சி, தனது தவறான நடத்தைக்காகவும், சுப்ரீம் கோர்ட்டையும், நாடாளுமன்றத்தையும் தவறாக வழிநடத்தியதற்காகவும் மன்னிப்பு கேட்க வேண்டும். அவர்கள் எத்தனை பத்திரிகையாளர் சந்திப்பை வேண்டுமானாலும் நடத்தட்டும். ஆனால், உண்மையை அவர்கள் மறைக்க முடியாது.

    இவ்வாறு அவர் கூறினார். 
    ரபேல் ஒப்பந்தமும், பண மதிப்பு நீக்கமும் நாட்டின் மிகப் பெரிய ஊழல்கள் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார். #RahulGandhi #Demonetisation

    புதுடெல்லி:

    மத்திய அரசு செல்லாத நோட்டு அறிவிப்பு வெளியிட்ட போது தலைமை பொருளாதார ஆலோசகராக இருந்த அரவிந்த் சுப்பிரமணியன் விருப்ப ஓய்வு பெற்றார்.

    அவர் பண மதிப்பு நீக்கம் குறித்து கூறுகையில், “இந்த நடவடிக்கை மக்களுக்கு கடுமையான நிதி நெருக்கடியை ஏற்படுத்தியது. நாட்டின் பொருளாதார வளர்ச்சி பாதிக்கப்பட்டு சரிவடைந்தது” என்றார்.

    இதுகுறித்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி டுவிட்டரில் தெரிவித்த கருத்து வருமாறு:-

    பண மதிப்பு நீக்க நடவடிக்கைக்கு ஒப்புதல் அளிக்காத அரவிந்த் சுப்பிரமணியன் ஏன் அப்போது பதவி விலகவில்லை.

    ஆனால் முன்னாள் ராணுவ மந்திரி மனோகர் பாரிக்கர் ரபேல் ஒப்பந்தத்தை எதிர்த்து ராஜினாமா செய்தார்.

     


    ரபேல் ஒப்பந்தம் நாட்டுக்கு எதிரான மிகப் பெரிய குற்றம். மனோகர் பாரிக்கர் அதில் இருந்து விலகி தன்னை காப்பாற்றிக் கொண்டார்.

    அரவிந்த் சுப்பிரமணியனும் இப்போது கருத்து தெரிவித்து அதில் இருந்து விடுவித்துக் கொண்டார்.

    ரபேல் ஒப்பந்தமும், பண மதிப்பு நீக்கமும் நாட்டின் மிகப் பெரிய ஊழல்கள். இதுபற்றி விசாரண நடத்தி குற்றவாளிகளை தண்டிக்க வேண்டும்.

    இவ்வாறு கூறியுள்ளார். #RahulGandhi #Demonetisation

    ‘ரபேல்’ விமான கொள்முதல் விவகாரத்தில் முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்க முயலும் பிரதமர் மோடி, நிர்மலா சீதாராமன் ஜால வித்தைகள் நாட்டு மக்களிடம் இனி எடுபடாது என காங்கிரஸ் தலைவர் கூறியுள்ளார்.
    சென்னை:

    தமிழக காங்கிரஸ் செய்தி தொடர்பு பிரிவு தலைவர் கோபண்ணா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    ரபேல் போர் விமானங்களை தன்னிச்சையாக வாங்குவதற்கு பிரதமர் மோடி எடுத்துள்ள முடிவில் தொடக்கம் முதல் தடுமாற்றங்களும் முறைக்கேடுகளும் நடைபெற்றுள்ளன. விமானங்களை வாங்கும் விலை தொடர்பான விவரங்களில் வெளிப்படைத் தன்மை இல்லை.

    ராணுவத் தளவாடங்கள் வாங்குவதற்கான நெறிமுறைகள் முற்றிலும் மீறப்பட்டுள்ளன. பாதுகாப்புக்கான நாடாளுமன்ற குழுவிடம் முன்னதாக பெற வேண்டிய ஒப்புதல் பெறப்படவில்லை.

    பொதுத்துறை நிறுவனமான எச்.எல்.லை விலக்கி விட்டு சுமார் 36 ஆயிரம் கோடி ரூபாய் ஒப்பந்தம், போர் விமானங்களை உற்பத்தி செய்வதில் துளிகூட அனுபவம் இல்லாத பிரதமர் மோடியின் நெருக்கமான அம்பானி குழுமத்துக்கு வழங்கப்பட்டுள்ளது.

    காங்கிரஸ் ஆட்சியின் போது 2012 டிசம்பர் 12-ந்தேதி ரபேல் போர் விமானங்கள் வாங்குவதற்கான சர்வதேச ஒப்பந்தப் புள்ளி திறக்கப்பட்டது.

    அதன்படி ஒரு விமானத்தின் விலை ரூ. 526 கோடி. மொத்தம் 36 விமானங்களுக்கு ரூ. 18 ஆயிரத்து 940 கோடி. ஆனால் மோடி அரசாங்கமோ, 36 ரபேல் விமானங்களை 60,145 கோடி ரூபாய்க்கு வாங்கி உள்ளது.


    இந்த விலை டஸ்ஸல்ட் ஏவியே‌ஷன் நிறுவனத்தின் ஆண்டு அறிக்கை 2016-ல் இடம் பெற்றுள்ளது. மக்கள் பணம் ரூ. 41,205 கோடி ஏன் அதிகமாக கொடுக்க ஒப்புக்கொள்ளப்பட்டது என்ற கேள்விக்கு பா.ஜ.க. விளக்கம் அளிக்குமா?

    இதே டஸ்ஸல்ட் ஏவியேஷன் நிறுவனம் இன்னும் 2 நாடுகளுக்கு இதே ரபேல் விமானங்களை 2015-ல் விற்பனை செய்திருக்கிறது. எகிப்துக்கு 24 விமானங்கள், கத்தாருக்கு 24 விமானங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. அதுவும் ஒரு விமானத்தின் விலை 1,319.80 கோடி ரூபாய்க்கு. அப்படி என்றால் இந்தியா மட்டும் ஏன் ஒரு விமானத்துக்கு ரூ. 1670.70 கோடி கொடுத்து வாங்க வேண்டும்.

    ரபேல் போர் விமானங்கள் என்ன விலைக்கு வாங்கினோம் என்பதை வெளியிடத் துணிவில்லாத மோடி அரசு அவதூறுகளை பரப்பி வருகிறது. காங்கிரஸ் அரசு ஒப்பந்தம் போட்ட போர் விமானங்களை விட கூடுதலான தொழில்நுட்பம் கொண்டது. பா.ஜ.க. அரசு கொள்முதல் செய்கிற ரபேல் போர் விமானங்கள் என்று தங்களது ஊழல்களை மறைக்க பொய் மூட்டைகள் அவிழ்த்து விடுகின்றனர்.

    ஆனால் உண்மையில் தொழில்நுட்பத்தில் எந்த வேறுபாடும் இல்லை என்பதை பிரான்ஸ் அரசே உறுதி செய்திருக்கிறது. முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்க முயலும் மோடி - நிர்மலா சீதாராமன் ஜால வித்தைகள் நாட்டு மக்களிடம் இனியும் எடுபடாது.

    ‘விலைகள் வெளியிடப்படக்கூடாது’ என்ற பிரிவை வைத்து மோடி அரசாங்கமும் பாதுகாப்புத்துறை அமைச்சரும் தவறான தகவல்களை தருகின்றன.

    இவ்வாறு அதில் கூறி இருக்கிறார்.
    ×