என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "pugazhenthi"
தருமபுரி:
சொத்து குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்ட சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இவர்களுக்கு தண்டனை காலம் முடிய இன்னும் 2 ஆண்டுகள் பாக்கி உள்ளது. இந்த நிலையில் சசிகலாவுக்கு சர்க்கரையின் அளவு அதிகரித்ததாகவும், அவர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றதாகவும் வதந்தி பரவியது. இது குறித்து கர்நாடக மாநில அம்மா மக்கள் முன்னேற்ற கழக செயலாளரரும், செய்தி தொடர்பாளருமான புகழேந்தியிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-
அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் சசிகலா சிறையில் நல்ல உடல் நலத்துடன் ஆரோக்கியமாக உள்ளார். கடந்த 2, 3 மாதங்களாகவே அவரது உடல்நிலை குறித்து சிலர் வதந்திகளை பரப்பி வருகின்றனர். அரசியல் அனாதைகள் தான் இது போன்ற வதந்திகளை பரப்பி வருவது எங்களுக்கு தெரியும்.
கடந்த மாதம் சசிகலா பிறந்த நாளின் போது எங்கள் கட்சி துணை பொதுச் செயலாளர் தினகரன் மற்றும் கட்சி நிர்வாகிகள் அவரை சந்தித்து பேசினோம். அப்போது அவர் நல்ல ஆரோக்கியத்துடன் உற்சாகமாக எங்களிடம் பேசினார். இனிமேலாவது அவரது உடல்நிலை குறித்து வதந்தி பரப்புவதை நிறுத்த வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். நிர்வாகிகள், தொண்டர்கள், பொதுமக்கள் யாரும் இந்த வதந்தியை நம்பவேண்டாம் என்றும் கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார். #pugazhenthi #sasikala
மதுரை:
டி.டி.வி. தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்றக் கழக கர்நாடக மாநில நிர்வாகி புகழேந்தி இன்று விமானம் மூலம் மதுரை வந்தார். அப்போது அவர் கூறியதாவது:-
திருமங்கலம் கூட்டுறவு சங்க தேர்தலில் ஓ.பி.எஸ். - இ.பி.எஸ். அணியினர் மோதலில் ஈடுபட்டுள்ளனர். அவர்கள் கட்சியை காப்பாற்ற ஆட்சி செய்யவில்லை. பணம் சம்பாதிப்பதில்தான் குறியாக உள்ளனர்.
தற்போது ஆட்சியில் இருப்பவர்கள் யாரும் அமைச்சர்கள் இல்லை. அனைவரும் ஜோக்கர்கள்தான். திருப்பரங்குன்றம் இடைத் தேர்தலில் அ.தி.மு.க. டெபாசிட் வாங்கினால் நான் அரசியலை விட்டு விலகி விடுவேன்.
ஓ.பி.எஸ். மற்றும் இ.பி.எஸ். தேர்தல் பிரசாரம் செய்தாலே நாங்கள் ஜெயித்து விடுவோம். இவர்களை யாரும் அமைச்சர்களாக பார்ப்பதில்லை. பொம்மைகளாகத்தான் பார்க் கின்றனர்.
கரூர், மதுரை உள்ளிட்ட பகுதிகளில் மணல் அள்ளப்படும் விவகாரத்தில் அமைச்சர்கள் மற்றும் சில போலீஸ் அதிகாரிகளுக்கும் பங்கு உள்ளது. நேர்மையான அதிகாரிகள் இதனை தட்டிக் கேட்டால் கத்தியை காட்டி மிரட்டப்படுகின்றனர்.
இவ்வாறு அவர் கூறினார். #Pugazhenthi #opanneerselvam #edappadipalanisamy
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்